--அட்டையைத் தெளிவாகப் பார்ப்பதற்கு அதனை  ஒரு தடவை அழுத்தவும். -

எனது மூன்று நூல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. 'ஒரு நகரத்து  மனிதனின் புலம்பல்' (கவிதைகள்) பதிவுகள்.காம் வெளியீடாகவும், வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ஜீவநதி பதிப்பக வெளியீடாகவும் , நவீன விக்கிரமாதித்தன் (நாவல்) ஓவியா  பதிப்பக வெளியீடாகவும் வெளியாகவுள்ளன. ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலின் அட்டைப்படத்தையே இங்கு காண்கின்றீர்கள்.

'நவீன விக்கிரமாதித்தன்' பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியான நாவல். நாவலை நான் விரும்பியவாறு மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார் ஓவியா பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் வதிலைப்பிரபா.

இது ஓவியா பதிப்பகம் மூலம் வெளியாகும் எனது இரண்டாவது நாவல்.  எனது இன்னுமொரு நாவலான 'குடிவரவாளன்' ஓவியா பதிப்பகம் மூலம் வெளியான முதலாவது நாவல். காலவெளி இருப்பில் தளராது முயற்சி செய்யும் நவீன விக்கிரமாதித்தனின் ஆளுமையை விபரிக்கும் நாவலிது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.