மணிவிழா நாயகன் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்! "யேசுபாலகன் அவதரித்த நாளன்று பிறந்தவர்கள் யேசுவைப்போன்றே சாந்தமானவர்கள். அமைதியின் உறைவிடமாக இருப்பவர்கள்" என்று எனது பாட்டி சின்னவயதில் எனக்குச்சொல்லியிருக்கிறார். சிலவேளை நான் பாட்டி வாழ்ந்த காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்திருக்கவேண்டும். எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் யேசு பாலகன் தோன்றிய நாளில் பிறந்து, பாட்டி சொன்னவாறு அமைதியாகவும் நிதானமாகவும் வாழ்ந்திருப்பதை எனது வாழ்நாளில் பார்த்திருக்கின்றேன். அந்த வரிசையில் ஒருவர்தான் எனது நீண்ட கால இலக்கிய நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன். அவருக்கு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி 60 வயது பிறக்கிறது. மானசீகமாக அவரை வாழ்த்திக்கொண்டு இந்தப்பதிவை எழுதத்தொடங்குகின்றேன்.

வடமராட்சியில் பல இலக்கியவாதிகளை குடும்ப உறவினர்களாக கொண்டிருக்கும் இரத்தினவேலோன், தனது இலக்கியவாழ்வில் தான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் புலோலியூரையும் இணைத்துக்கொண்டவர். 1977 ஆம் ஆண்டில் இவர் கல்லூரி மாணவன். தீவிர வாசிப்பில் ஈடுபாடும் இலக்கியத்தின் பால் நேசிப்பும் மாணவர்களுக்கு வருமாயின் அதற்கு ஆசிரியர்கள், அல்லது குடும்ப உறவினர்கள்தான் காரணமாகியிருக்கவேண்டும். இக்காலத்தில் மாணவர்களை இலக்கியத்துறையில் ஈடுபடுத்தும் ஆசிரியர்களை காண்பது அரிது. இரத்தினவேலோன் தனது 19 வயதில், மாணவப்பருவத்தில் தினகரன் வாரமஞ்சரியில் புரளும் அத்தியாயம் என்ற சிறுகதையை எழுதி, அது வெளிவந்தகாலத்தில் எவ்வளவு புலகாங்கிதம் அடைந்திருப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்துவிடலாம். அச்சில் வெளிவந்த முதல்கதையை அவரே எத்தனை முறை மீண்டும் படித்துப்பார்த்திருப்பார் என்பதையும் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், பின்னாளில் அவரது எழுத்துக்களையும் ஒரு மாணவி பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுசெய்வார் என்பதை எழுதத் தொடங்கிய காலத்தில் இவர் கற்பனையிலும் நினைத்துப்பார்த்திருக்கமாட்டார். செல்வி எம். திருமகள் என்ற யாழ். பல்கலைக்கழக மாணவி, தமிழ் சிறப்புக்கலைமாணித் தேர்வின் நிறைவாண்டுப்பரீட்சையின் ஒரு பகுதியை முழுமை செய்யும் பொருட்டு, இரத்தினவேலோனின் சிறுகதைகளை ஆய்வுசெய்து சமர்ப்பித்துள்ளார். இதில் ஒரு சுவாரசியமும் இருக்கிறது. உயர்தரப்பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப்பெற்றும், தரப்படுத்தலினால் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்தவர் இரத்தினவேலோன். எனினும், பின்னாளில் இவரது கதைகளையே ஒரு மாணவி பல்கலைக்கழகத்தில் படித்து ஆய்வுசெய்துள்ளார்.

எழுதத் தொடங்கியது முதல் நாற்பது ஆண்டுகாலத்தில் இவர் எழுதிய சிறுகதைகள் நாற்பத்திநான்குதான். அவற்றில் 41 கதைகள் ஐந்து தொகுப்புகளாக வரவாகியுள்ளன. அவை: புதிய பயணம், விடியட்டும் பார்ப்போம், நிலாக்காலம், நெஞ்சாக்கூட்டு நினைவுகள், காவியமாய் நெஞ்சில் ஓவியமாய். தினகரன், வீரகேசரி, தினக்குரல், ஈழநாடு, மல்லிகை, ஞானம், சுடர், ஜீவநதி, முதலான இதழ்களில் கதைகளையும் எழுதியிருக்கும் இரத்தினவேலோன், பத்தி எழுத்துக்களின் தொகுப்பாக மூன்று நூல்களையும், தேர்ந்தெடுத்த ஆக்கங்களின் தொகுப்புகளாக மூன்று நூல்களையும் இலக்கிய வாசகர்களுக்கு வழங்கியிருப்பவர். இவரது சில நூல்கள் வட- கிழக்கு மாகாண விருதும், வடமாகாண விருதும் பெற்றவை.

மல்லிகைக்கதைகள் தொகுப்பிலும் ஜீவநதி கதைகள் தொகுப்பிலும், இரசிகமணி கனகசெந்திநாதன் கதா விருதுபெற்ற கதைகளின் தொகுப்பிலும் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் ( தகவம்) பரிசுச்சிறுகதைகளின் தொகுப்பிலும் வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப்பேரவை வெளியிட்ட தரிசனம் தொகுப்பிலும் யாழ். கம்பர்மலை வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய கிளை வெளியிட்ட பூபாள ராகங்கள் தொகுப்பிலும் காவலூர் எஸ். ஜெகநாதன் மறைவதற்கு முன்னர் சென்னையில் வெளியிட்ட காலத்தின் யுத்தங்கள் தொகுப்பிலும் இரத்தினவேலோனின் கதைகள் இடம்பெற்றிருப்பதிலிருந்து இவரது அயராத இலக்கிய உழைப்பை இனம் காணமுடிகிறது.

ஈழத்து இலக்கியவளர்ச்சியில் மூத்த தலைமுறையினர் தொடங்கி, நான்காவது தலைமுறையினர் வரையில் சில பரீட்சார்த்த முயற்சிகளும் நிகழ்ந்துள்ளன. இரண்டு பேர் அல்லது நான்கு பேர் இணைந்து தொடர்கதை அல்லது நெடுங்கதை எழுதும் மரபு, எஸ்.பொ. இ.நாகராஜன், குறமகள் காலத்திலேயே தொடங்கியது. இவர்கள் மத்தாப்பு என்ற தொகுதியை வரவாக்கினர். பின்னாளில் மேலும் சிலர் இத்தகைய பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டனர். புலோலியூர் இரத்தினவேலோனும் கோகிலா மகேந்திரனும் இணைந்து ஒரு நெடுங்கதையை எழுதியிருந்தனர். இக்கதையும் இவர்கள் எழுதிய தனித்தனிக்கதைகள் தலா மூன்றும் இடம்பெற்ற தொகுதி அறிமுகவிழா,  நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் 1984 ஆம் ஆண்டில் வெளியானது. இதுபற்றி வீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணி பத்தி எழுதியபோது குறிப்பிட்டுள்ளேன். 

இவரது இலக்கிய தாகத்திற்கு ஊற்றுக்கண்களாக இருந்தவர்கள் பற்றி இவரே கலைக்கேசரியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

"நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த புலோலியூர் கிராமச்சூழல், எனது ஆர்வம், முயற்சி ஆகியனவற்றுக்கு அப்பால் மரபணுவும் எனது இலக்கியப் பிரவேசத்திற்கு வழிசமைத்திருக்கிறது எனத் தாராளமா­வே கூறலாம். இலக்கியமும் இரசனையும் எனக்குக் கருவிலேயே உருக்கொள்வதற்கு காரணமானவர் எனது தந்தை ஆறு­முகம் அவர்கள்தான். கணிப்பிற்குரிய கவிஞரான அவர் சிறந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்திருந்தார்.  ஈழத்தின் குறிப்­பி­டத்­தக்க எழுத்­தா­ளர்­களுள் ஒரு­வ­ரான புலோ­லியூர் க.சதாசிவம் எனது தாய் மாமனார். ஒரே வீட்டில் அல்லும் பகலும் இவர்களுடன் வாழ்ந்த இள­மைக்­கால வாழ்க்கை, இயல்­பா­கவே இலக்­கியம் என்­னுடன்  ஒன்­றி­விட கார­ணங்­க­ளா­யிற்று. அத்­துடன் ஈழத்துச் சிறு­கதை முன்­னோ­டி­களில் ஒரு­வ­ரான மறு­ம­லர்ச்சிக் காலத்தின்  பெரி­ய­தம்பி அவர்களும்  புலோ­லியூர் என்­பதை தம் பெயர்களோடு இணைத்துக் கொண்ட எழுத்­தா­ளர்­க­ளான க.தம்­பையா, செ.கந்­த­சாமி ஆகியோர் எனது நெருங்­கிய உற­வி­னர்­களும் அய­ல­வர்­களும் ஆவர்.

அதேபோல் கல்­லூரிப் பரு­வமும் எனது இலக்­கிய உணர்­விற்கு உர மூட்­டி­யது எனலாம். பருத்­தித்­துறை ஹாட்லிக் கல்­லூ­ரியில் பயின்ற 1977 க.பொ.த உயர்­தரக் குழு தர­மான இலக்­கியகர்த்­தாக்­களை ஈழத்­திற்குத் தந்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது. முதலாவது ஒரு சிறுகதை எழுத்தாளனாக என்னை உருவாக்கும் முயற்சி. மற்றையது கிராமத்து நண்பர்களின் கூட்டு முயற்­சியில் பத்திரிகையாளனாக, அதா­வது ஒரு கையெ­ழுத்துப் பிரதி சஞ்­சிகை ஆசி­ரி­ய­னாக ஈடு­பாடு காட்­டி­யமை.
“புத்­தொளி” என்ற பெயரில் மாத­மொ­ரு­முறை வெளிக்­கொ­ண­ரப்­பட்ட அக் கையெ­ழுத்துப் பிர­தியின் ஆயுள் மிகச் சொற்­ப­மா­கவே இருந்­தது. அதன் பின்னர் முற்றுமுழு­தாக எனது பங்­க­ளிப்பு சிறு­கதைத் துறை­யி­லேயே இருந்­தது. ஒரே கால­கட்­டத்தில் நான்கு சிறு­க­தை­களை கல்­லூ­ரியில் பாவித்த “ஒற்றை ரூல்” அப்­பி­யாசப் புத்­த­க­மொன்றில் எழு­தி­ய­வாறே புலோ­லியூர் தம்பை­யாவை அணு­கினேன். கதை­களைப் படித்த அவர், அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து சில திருத்தங்­களைக் கூறி அதை மீள எழுதித் தன்­னிடம் தரும்­படி கூறவே அவ்வாறே செய்தும் கொடுத்தேன். நம்­பவே முடி­யாது, ஒரு சில வாரங்­களின் பின்னர் இன்னும் திருத்­த­மாகச் சொல்­வ­தெனில் மாத­மொன்று முடி­யு­முன்பே “புரளும் அத்­தி­யாயம்” என்னும் அக்­கதை தின­கரன் வார­மஞ்­ச­ரியில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. முதன்முத­லாக அச்சில் எனது ஆக்­கத்­தி­னைப்­பார்த்த அடுத்த சில நிமிடங்கள் “புலோ­லியூர் மண்­ணினை” விட்டு விண்ணில் மிதந்த வண்ணம் இருந்தேன். 1977 இல் எனது பத்­தொன்­ப­தா­வது வயதில் இது நிகழ்ந்­தது. தன­தூரில் அடுத்த தலை­மு­றையில் ஓர் எழுத்­தாளன் உரு­வாக தம்­பையா எடுத்த முயற்சி என்னைப் பொறுத்­த­மட்டில் எனது வாழ்வின் மிக முக்கியமானதொரு திருப்­பு­முனை என்றே கரு­து­கிறேன்.

இந்த வகையில் இக்­கா­ல­கட்­டங்­களில் புலோ­லியூர் கந்­த­சா­மியும் என்னைத் தட்டிக் கொடுத்­ததை இவ்­வி­டத்தே நினைவில் கொள்­ளா­விடின் அவ­ருக்கு நான் துரோ­க­மிழைத்தவ­னாவேன். எனது கல்வி  முன்­னேற்­றத்­தையே இலக்­காகக் கொண்­ட­தனால் அந்நாட்களில் நான் இலக்­கி­யத்தில் ஈடு­ப­டு­வ­தனை மாமனார் புலோலியூர் சதா­சிவம் அதிகம் உற்­சா­கப்­ப­டுத்­த­வில்லை. நாள­டைவில் எழுத்தின் மீதான என் அதீத ஆர்வம் கண்டு கலையம்சங்களால் என் படைப்­புக்­களை மெரு­கேற்றப் பயிற்சி தந்ததோடன்றி அவ்­வப்­போது வெளி­வரும் எனது ஆக்­கங்­களை அழ­காக, ஆழ­மாக விமர்­சித்துத் தனக்­கென ஓர் வாரி­சாக என்னை அவர் உருவாக்கிக்கொண்டார் என்­பதை இங்கு கூறியே ஆக வேண்டும்."

------ 

இரத்தினவேலோனும் சிறுகதையில் தொடங்கி இலக்கியத்தின் வேறு துறைகளில் ஈடுபட்டவர். முக்கியமாக பதிப்புத்துறையிலும் கவனம் செலுத்தியவர். தனது செல்வப்புதல்வி மீராவின் பெயரிலேயே பதிப்பகம் நடத்தி, சக எழுத்தாளர்களின் பல துறை நூல்களயும் வெளியிட்டார். அத்துடன், ஞாயிறு தினக்குரலில் பனுவல் என்ற பத்தியில் "புலோலியூரின் இலக்கிய கர்த்தாக்கள்"  என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரும் எழுதினார். அதே இதழில் இவர் அண்மைக்கால அறுவடைகள் என்ற தலைப்பில் வாராந்தம் எழுதிய தொடர் ஐந்து ஆண்டுகாலம் வெளியான ஒரு மெகா தொடர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. மேற்குறிப்பிடப்பட்ட தொடர்கள் ஈழத்து இலக்கியவளர்ச்சியின் செல்நெறிப்போக்கினை அடையாளம் காட்டுவதாகவும் அமைந்திருந்தது. 

ஒரு படைப்பாளி எத்தனை கதைகள் எழுதியிருக்கிறான்? எத்தனை நூல்களை வரவாக்கியிருக்கிறான்? என்பதில் பெரிய சாதனை இல்லை. தான் நேசித்த இலக்கியத்துறையில் எத்தனைபேரை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி அடையாளப்படுத்தியிருக்கிறான் என்பதிலும் எத்தனைபேருக்கு இலக்கிய உலகில் அறிமுகம் பெற்றுக்கொடுத்து இனம்காண்பித்து வளர்த்திருக்கின்றான் என்பதிலும்தான் அவனது மேதா விலாசம் கவனத்தைப் பெறுகிறது.

நண்பர் இரத்தினவேலோன், தனது சொந்தப்படைப்புளையும் வெளியிட்டு, தனது பிரதேசத்து இலக்கிய ஆளுமைகளைப்பற்றிய குறிப்புகளையும் எழுதியவர். சமகால இலக்கிய அறுவடைகளைப்பற்றி பதிவுசெய்து வாசகர்களுக்கு அடையாளம் காண்பித்தவர். இந்தப்பணியை செய்வதற்கு விசாலமான மனம் வேண்டும்.  அதனால்தான் இவர் ஈழத்து இலக்கிய உலகினால் நேசிக்கப்படுகிறார். 

டொமினிக்ஜீவாவின் மல்லிகை, 2007 ஆம் ஆண்டு இவரை அட்டைப்பட அதிதியாக கௌரவித்தது.  கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஜீவநதி இதழும் இம்மாதம் இந்த மணிவிழா நாயகனை அட்டைப்பட அதிதியாக்கியிருக்கிறது என்பதிலிருந்தும் இதழாளர்களினதும் நேசிப்பிற்குரியவர் எங்கள் இரத்தினவேலோன் என்பதையும் இங்கு பதிவுசெய்யவிரும்புகின்றேன். வாழும் காலத்திலேயே இத்தகைய அங்கீகாரத்தை வழங்கும் குறிப்பிட்ட இதழ்களையும் நாம் அவசியம் பாராட்டத்தான் வேண்டும். 

லண்டனில் 2006 இல் நடந்த பூபாளராகங்கள் விழாவிற்கும் இரத்தினவேலோன் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டார்.

வீரகேசரியில் நாமிருவரும் பணியாற்றிய காலம் எமக்கு வசந்தகாலம்தான். கருத்தொருமித்த நண்பர்களாகப்பழகினோம். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியை 1984 இல் இவர்தான் எனக்கு முதலில் காண்பித்தார். அன்றுதான் கோகிலா மகேந்திரனையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். கோகிலாவின் முரண்பாடுகள் அறுவடை நூலின் வெளியீட்டுவிழாவில் இருவரும் உரையாற்றினோம். 1987 ஆம் ஆண்டு முற்பகுதியில் நான் நாட்டைவிட்டு வெளியேற ஆயத்தமானபோது இவர் மிகவும் கவலைப்பட்டார். 

இலக்கிய நண்பர்களுடன் எங்கள் ஊருக்கு வந்து எனக்கு விடைகொடுக்கும்போது, " இனி எனக்குக் கந்தோரே வெறுமையாக இருக்கும்" என்று நாதழுதழுக்கச் சொன்னார். அதற்கு நான், " தம்பி, நண்பர்கள் உருவாக்கப்படுவார்களே தவிர, பிறப்பதில்லை" என்றேன். " பலரும் உங்களைப்போல எளிமையாக, உண்மையாக எத்தனைபேராலை பழகமுடியும்" என்றார். அதற்கு நான், " இடத்தால் பிரிந்தாலும் இணைந்த இதயத்தோடு இலக்கியத்தோட்டத்தில் நின்று ஒன்றுபட்டு உழைப்போம்" எனக்கைகொடுத்து பிரிந்தேன்.

இந்த உரையாடலையும் அப்படியே பதிவுசெய்து, ஒரு பிரியாவிடை மடலை 1987 ஆம் ஆண்டு மார்ச் மாத மல்லிகையில் விரிவாக எழுதி அந்த இதழையும் எனக்கு அனுப்பிவைத்தார்.

ஆண்டுகள் உருண்டோடிவிடும். நினைவுகள் நிலைத்து நிற்கும். அன்று அவரைவிட்டு இடத்தால் பிரிந்தாலும் தொடர்ச்சியாக எமக்கிடையிலான இலக்கிய உறவு நீடிக்கின்றது. இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் இவரையும் நான் சந்திக்கத்தவறுவதில்லை. 

எமது இலக்கியப்பயணத்தில் சக பயணியாக வந்துகொண்டிருக்கும் நண்பர் புலோலியூர் இரத்தினவேலோனை அவரது மணிவிழாக்காலத்தில் நெஞ்சம் மகிழ வாழ்த்துகின்றேன்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here