ஆச்சி மனோரமாதிரையுலகில்  நடிக்கும்பொழுது  தான்  இணைந்து  நடிக்கப்பயந்த மூன்று  கலைஞர்களைப்பற்றி  நடிகர்திலகம்  சிவாஜி கணேசன்  ஒரு சந்தர்ப்பத்தில்  கூறியிருந்தார். அம்மூவரும்:  நடிகையர்  திலகம்  சாவித்திரி,   நடிகவேள்  எம்.ஆர். ராதா,   சகலகலா  ஆச்சி  மனோரமா.   இன்று இவர்கள்  அனைவரும் திரையுலகை   விட்டு  விடைபெற்றுவிட்டனர்.   இறுதியாக  கடந்த  10 ஆம்  திகதி  சென்றவர்  ஆயிரம்  படங்களுக்கு  மேல்   நடித்து சாதனைகள்   பல  நிகழ்த்திய  மனோரமா. தமிழ்சினிமா  மிகைநடிப்பாற்றலுக்கு  பெயர் பெற்றது. நாடக மேடைகளிலிருந்து  அந்தக்காலத்தில்  வந்த  நடிகர்,  நடிகைகளும் அவர்களுக்கு  உணர்ச்சியூட்டும்  வசனம்  எழுதிக்கொடுத்தவர்களும் சினிமா  என்றால்  இப்படித்தான்  இருக்கும் -  இருக்கவேண்டும்  என்ற   கற்பிதம்  தந்தவர்கள். அதனால்   யதார்த்தப்பண்புவாத  தமிழ்ப்படங்களின்  எண்ணிக்கை தமிழ்  சினிமாவில்  குறைந்தது. இந்தக்கருத்தை   இலங்கைப் பேராசிரியர்  கா. சிவத்தம்பி  அவர்களும் கனடா  மூர்த்தி  சிவாஜி  கணேசன்  மறைந்தபொழுது  தயாரித்த 'சிவாஜிகணேசன்   ஒரு  பண்பாட்டுக்குறிப்பு'  என்ற  ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.

மனோரமா  1937  ஆம்  ஆண்டு  மே  மாதம் 26 ஆம்  திகதி   தமிழ்நாட்டில்  தஞ்சாவூரில்  மன்னார்க்குடியில்  பிறந்தவர். ஏழ்மையான  குடும்பத்தில்  பிறந்த  இவர்  கற்றது  ஆறாம்  தரம் வரையில்தான்.   வறுமையில்  வாடிய  இவருடைய  குடும்பம் காரைக்குடிக்கு   அருகில்  பள்ளத்தூர்  என்ற  இடத்திற்கு இடம்பெயர்ந்தது. கோபி  சாந்தா  என்ற  இயற்பெயர்கொண்டிருந்தவருக்கு  கற்றலில் ஆற்றல்  இருந்தபோதிலும்,  மேலும்  கற்பதற்கு  குடும்பத்தின் பொருளாதார    நிலைமை  இடம்கொடுக்கவில்லை.   சிறுமியாக இருக்கும்பொழுதே  துடிப்போடு  பேசும்  ஆற்றல் இவருக்கிருந்தமையினால்   அவருடை  12  வயதில்  நாடக சபாக்களின் நிகழ்ச்சிகளில்   தோன்றினார். பள்ளத்தூரிலிருந்து   நாடக  சபா  மேடைகளுக்கு  இவர்  வந்தமையால்  அந்த  வட்டத்தில்  இவர்  பள்ளத்தூர்  பாப்பா  என்றே முதலில்   அழைக்கப்பட்டார்.   பின்னர்  இவருக்கு -  இவர் ஆரம்ப காலங்களில்  நடித்த  நாடக   இயக்குநர்  ஒருவர்  மனோரமா  என்ற புதிய    பெயரைச்சூட்டினார். இவர்போன்று  தமது   இயற்பெயர்களை   தமிழ்  சினிமாவில் மாற்றிக்கொண்ட   நடிக,   நடிகையர்    ஏராளம்.

தொடக்கத்தில்  வைரம்  நாடக  சபாவில்  நடித்துவந்த  மனோரமா, எஸ்.எஸ். ராஜேந்திரனின்  நாடகங்களிலும்  நடித்து  அவருடைய நாடக  மன்றத்தின்  நிரந்தர  நாயகியானார்.  கலைஞர்  கருணாநிதி, அறிஞர்   அண்ணாத்துரை   ஆகியோரும்  இவருடன்  பல  நாடகங்களில்   இணைந்து  நடித்துள்ளனர். இவருடைய   நடிப்பாற்றலை   தொடர்ந்து  கவனித்து வந்த  எஸ்.எஸ். ராஜேந்திரன்   1950  இற்குப்பின்னர்  இவரை   சென்னைக்கு  அழைத்து வந்து    திரையுலகிற்கு  அறிமுகப்படுத்தினார். ராஜேந்திரனும்  தேவிகாவும்  இணைந்து  நடித்த  ஒரு  படத்தில் மனோரமாவுக்கும்    வேடம்  கிடைத்தது.  ஆனால்,  அந்தத்   திரைப்படம் தயாரிப்பில்   பாதியில்  நின்று  வெளிவரவில்லை.    சிவாஜி,  எம்.ஜீ.ஆர் நடித்த  சில  படங்களும்  முன்னர்  வெளிவராமல்  தயாரிப்பில்  வந்த சிக்கல்களினால்    இடையில்  நின்றுள்ளன. மனோரமா   நடித்து முதலில்  வெளியான  படம்  கண்ணதாசன் தயாரித்து  கதை,  வசனம்  எழுதிய  மாலையிட்ட  மங்கை.   இதனை ஜீ.ஆர். நாதன்   இயக்கியிருந்தார்.   டி.ஆர். மகாலிங்கத்துடன்  இணைந்து    அந்தப்படத்தில்  நடித்த  மனோரமா,  பலமொழிகளிலும் பேசி  நடிக்கும்  ஆற்றலும்  மிக்கவர். பல   தமிழ்த்திரைப்படங்களில்  மெட்ராஸ்  தமிழும் - அக்ரஹாரத்தமிழும்  பேசி  அசத்தியிருக்கிறார்.

நாடகங்களில்  கருணாநிதி,   அண்ணாத்துரை  ஆகியோருடன் நடித்துள்ள    மனோரமா,   தமிழக  முதல்வர்களாக அவர்களுக்குப்பின்னர்    பதவிக்கு  வந்த  எம்.ஜீ.ஆர்,   ஜானகி, ஜெயலலிதா    ஆகியோருடனும் -   ஆந்திராவின்  முதல்வராக  இருந்த    என்.ரி.ராமராவ்  நடிகராக  இருந்தபொழுது  அவருடனும் சிவாஜி,   ஜெமினி,   ராஜேந்திரன்,  எம்.ஆர்.ராதா,   நாகேஷ்,  சோ, பாலையா ,  முத்துராமன்,   சிவகுமார்,   ரவிச்சந்திரன்,  கமல்ஹாசன், ரஜினி காந்த்  மற்றும்  பல  முன்னணி   நடிகைகளுடனும்  இன்றைய இளம்  தலைமுறையினருடனும்  நடித்து  தமது  திரையுலக வாழ்வில்  ஆயிரம்  படங்களுக்கு  மேல்  நடித்த  சாதனையாளர். மனோரமா  நகைச்சுவை  நடிப்பில்   மட்டுமன்றி  குணச்சித்திர நடிப்பிலும்   தனது   திறமையை   காட்டியிருப்பவர்.  சில  படங்களில் வில்லியாகவும்   தோன்றினார்.   மகளாக - காதலியாக,   தாயாக , பாட்டியாக   நடித்த  படங்கள்  அனைத்திலும்  அவர்  பங்கு சோடை போனதில்லை.    அதனால்தான்  இவருடன்  நடிக்கும்பொழுது  தான் மிகவும்   எச்சரிக்கையாக  இருப்பதாக  சிவாஜி கணேசன் சொல்லியிருக்கிறார். சிவாஜி  தாம்  நடிக்கும்  படங்களில்  தமது  மிகை   நடிப்பினால் தனித்துத்தெரிவார்.    ஆனால்,  அவருடைய அந்தத்தனித்துவங்களையும்    சாதுரியமாகக்கடந்து,  குறிப்பிட்ட காட்சிகளில்   மனோரமா  அசத்திவிடுவார். தமிழ்த்திரையுலகம்   என்னதான்  நட்சத்திரங்கள்  மின்னும் கனவுத்தொழிற்சாலையாக  இருந்தாலும்  அங்கும்  சிக்கல்கள்  ஏராளம்   நீடிக்கிறது. சில    படங்களில்  தம்மை  விட  உயர்வாக  ஒரு  நடிகர் நடித்துவிட்டால்  இயக்குநரிடமும்  எடிட்டரிடமும்  தமது செல்வாக்கை   பிரயோகித்து,  தனியாகச்சொல்லி  அந்தக்காட்சியை கத்திரியினால்  வெட்டவைத்த  முன்னணி  நடிகர்,   நடிகைகளும் இருந்திருக்கின்றனர். சில  நடனக்காட்சிகளில்  கூட்டமாக  வந்து  ஆடும்  துணை நடிகைகளில்   யாராவது  தன்னைவிட  அழகாக  இருந்தால் கெமராவை   அந்த  நடிகைகள்  பக்கம்  அதிகம்  திருப்பாமல் கச்சிதமாக   நடந்துகொள்ளவேண்டும்  என்று  கெமராமேன்களுக்கு உத்தரவிடும்  நடிகைகளும்  இருக்கிறார்கள்.  காரணம்    அந்தத்  துணை   நடிகைகளின்  அழகுத்தோற்றம் தயாரிப்பாளர்கள்   விநியோகஸ்தர்களை    கவர்ந்துவிட்டால்  அவர்கள் தமது    அடுத்த  படத்தில்  தம்மை  நீக்கிவிட்டு  அழகிய புதுமுகங்களுக்கு  இடம்கொடுத்துவிடுவார்கள்  என்ற  பயம்தான். சகநடிகர்களின்  திறமையை   மதிக்காமல்  அந்தரங்கமாக கத்தரிக்கோலை   பாவிக்கச்செய்யும்  சில  முன்னணி   நடிகர்கள்  பற்றி ஒருசமயம்   ஜெயலலிதாவே   சிவாஜி  கணேசனின்  150  ஆவது படம்  சவாலே  சமாளி  படத்தின்    நூறாவது  நாள்  விழாவில் சிவாஜிகணேசனுக்கு   முன்னாலேயே    சொல்லியவர்.  ஆனால்,  சிவாஜிகணேசன்   அப்படியல்ல.   தன்னுடன்  இணைந்து  நடித்தவர்கள் சிறிய   பாத்திரம்  ஏற்றாலும்  அவர்களை  ஊக்குவிக்கும்  நல்ல பண்புள்ளவர்   என்றும்  பாராட்டியிருக்கிறார். ஜெயலலிதாவுக்கும்   எம்.ஜீ.ஆருக்கும்   அவ்வேளையில்  சுமுகமான உறவு   இருக்கவில்லை.   அதனால்  அந்தக்கருத்து  எம்.ஜீ.ஆருக்கு உவப்பானதில்லை   என்றே   அன்றைய  சினிமா  இதழ்கள் பதிவு செய்திருந்தன.

மனோரமா    பாத்திரத்தை   உணர்ந்து  முயற்சித்து  நடிப்பவர். நவரசங்களும்   அவரிடம்  காட்சிக்கு  ஏற்றவாறு  பிரதிபலிக்கும். தமிழ்   உச்சரிப்பிலும்  தேர்ந்தவர்.  அத்துடன் பிறமொழிப்பிரயோகங்களையும்    லாவகமாக வெளிப்படுத்தக்கூடியவர்.    பேச்சில்  மட்டுமல்ல  தான்  பாடிய பாடல்களிலும்   அதனைக்கையாண்டுள்ளார். சூரியகாந்தி   படத்தில்  வரும்  தெரியாதோ   நோக்கு   தெரியாதோ ..... வில்   அக்ரஹாரத்தமிழும்,  பொம்மலாட்டம்  படத்தில்  வா ...வா.... வாத்தியாரே... வராங்காட்டி   நான்  விடமாட்டேன்...  ஜாம்பஜார்  ஜாக்கு நான்   சைதாப்பேட்டை   கொக்கு   என்றும்,    பாட்டி   சொல்லைத்தட்டாதே  படத்தில்  டில்லிக்கு  ராஜாவானாலும்  என்ற பாட்டில்  நல்ல  தமிழிலும்  அவர்  பாடியிருக்கிறார்.

திரைலகில்  அனைவருக்கும்  தனிப்பட்ட  முறையிலும்  தாயாகவும் சகோதரியாகவும்   ஆச்சியாகவும்  வாழ்ந்து  அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.   2002  இல்  இவருக்கு  பத்மஸ்ரீ  விருது  கிடைத்ததும்   சென்னையில்  நடந்த  பாராட்டு விழாவில்  அனைத்து தலைமுறை   நடிகர்  நடிகைகளும் திரண்டு  வந்து  கௌரவித்தனர். பிலிம்பெஃயார்  விருது  தமிழக  அரசின்  விருது  உட்பட  பல விருதுகளும்  பரிசுகளும்  பெற்றுள்ள  மனோரமா,  உலக  நாடுகள் பலவற்றில்  ஏராளமான  கலை நிகழ்ச்சிகளில்  பங்கேற்றவர். அனைவருடனும்   பந்தா  இல்லாமல்  சகஜமாக  பழகும் இயல்புள்ளவர்.    இறுதிக்காலத்தில்  அவர்  சில  நோய் உபாதைகளுக்கு    உள்ளாகியிருந்தார்.   சூரியா  நடித்த  சிங்கம் (Part -  1) முதலாவது  படத்தில்  அவர்  பாட்டியாக  நடித்திருப்பார்.   ஆனால், அதன்  வசூல்  வெற்றியைத்  தொடர்ந்து  வெளியான   சிங்கம் (Part-02) இரண்டாவது    படத்தில்,   முதல்  படத்தின்  தொடர்ச்சிக்காக மனோரமாவை  இணைத்திருந்தாலும்  மிகமிகக்குறைந்த வசனங்களை மாத்திரம்பேசி  ஒரு  சில  காட்சிகளில்  மாத்திரமே  தோன்றினார். அப்பொழுதே  அவருக்கு  நோயின்  தாக்கம்  தொடங்கிவிட்டது என்பதற்கு    சிங்கம் - 02   அறிகுறியாக   அமைந்தது.

சென்னையில்  தியாகராய  நகரில்  இந்திய  கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைமைக்காரியாலயத்திற்கு    அருகில்    சிவாஜி   கணேசனின் அன்னை  இல்லாம்  வீடு  அமைந்துள்ளது.    அதற்கு   முன்பாக மனோரமாவின்   மகன்    பூபதியின்  பெயரில்  பூபதி  இல்லம் அமைந்துள்ளது. இவர்  தனது  மகனையும்  திரையுலகிற்கு  கொண்டுவந்தார்.  ஆனால்  மகன்  பூபதியால்  சோபிக்க  முடியவில்லை.   தனிப்பட்ட  வாழ்வில் ஒரு   நடிகை   எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும்  மனோரமாவும் சந்தித்துள்ளார்.    அவருடைய  காதல்  திருமணமும்  பூபதியின் பிறப்பின்    பின்னர்  முறிந்தது.    தமது  குடும்ப உறவினர்களுக்கெல்லாம்    உழைத்துப்போட்ட  பெரிய குடும்பத்தலைவி  மனோரமா.   ஆனால்,  குடும்ப  உறவுகளும் சில சொத்து    தகராறுகளில்  அவரை   நீதிமன்றம்  வரையில் இழுத்திருக்கின்றன.

இவரும்  ஒரு சமயம்  தேர்தல்  மேடைகளில்  ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்கச்சென்று   ரஜினி காந்துக்கு    எதிராகப்பேசி விமர்சனங்களுக்கும்   ஆளாகியவர்.   எப்படி  வடிவேலு   விஜய்காந்துக்கு    எதிராகப்பேசி  தொல்லைகளுக்கு  ஆளானாரோ அவ்வாறே   மனோரமாவும்  ரஜினியின்  ரசிகர்களின் விமர்சனங்களுக்கு    ஆளானார்.    எனினும்,  ரஜினி காந்த்  மிகவும் பெருந்தன்மையுடன்   அவருடைய   கருத்துச்சொல்லும்   உரிமையை மதித்தார்.

நடிகர்   நாகேஷின்  மனைவி  ரெஜினாவின்  தம்பி  ஒருவரின்  மர்ம மரணத்தையடுத்து   அந்தக்குடும்பம்  விசாரணைகளுக்கு உள்ளானபோது  நாகேஷுடன்  அவ்வேளையில்  அதிக  படங்களில் நடித்துக்கொண்டிருந்த  மனோரமாவும்  விசாரிக்கப்பட்டார். ஏழ்மையில்  பிறந்து,  உரிய  கல்வி  வாய்ப்பு பெறமுடியாமல் குடும்பத்தை  தமது  நடிப்பினால்  காப்பாற்றுவதற்கு  தமது  12 வயதிலேயே  நடிக்கச்சென்ற  மனோரமா  திரையுலகிலும் ரசிகப்பெருமக்களிடமும்   ஒரு  மதிப்பிற்குரிய  ஆச்சியாகவே விடைபெற்றுக்கொண்டு   மறைந்துள்ளார். மனோரமா   தமிழ்த்திரையுலகில்  ஒரு  சகாப்தம்.   அவர்  குறித்த ஆவணப்படங்கள்   எதிர்காலத்தில்   தயாராக   வேண்டும். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here