என்னை  மிகவும் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் சரத்பாபு. அவரது அமைதியான யாரையும் கவரும் முக அழகுடன் கூடிய ஆளுமையும், இதயங்களை வருடிச்  செல்லும் குரலும் எப்போதும் என்னை ஆகர்சிப்பவை. அது அவரது உண்மைக் குரலா அல்லது வேறு யாராவது அவருக்குக் குரல் கொடுத்தார்களா என்பது தெரியாது.  ஆனால் அந்தக் குரலும், அவரது நடிப்பும், சிரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.
அவரது மறைவுச் செய்தியினை இன்று இணையம் மூலம் அறிந்தேன். அண்மையில் அவர் மறைந்ததாக முகநூலில் வதந்தியொன்று  பரவியது நினைவுக்கு வந்தது. ஆனால் இது வதந்தியல்ல என்பதைத் தமிழக முதல்வரின் இரங்கல் செய்தி புலப்படுத்தியது. இதுவரை காலமும் தன் நடிப்பால் எம்மையெல்லாம் மகிழ்வித்து வந்தார் சரத்பாபு. அவரது இழப்பால் வாடும் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.

அவரது நினைவாக 'முள்ளும் மலரும்' படத்தில் இடம்  பெற்றுள்ள , ஜேசுதாஸ் குரலில், இசைஞானியின் இசையில், கவியரசரின் எழுத்தில், சோபா & சரத்பாவுவின் நடிப்பில், பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில் மற்றும் இயக்கத்தில் ஒலிக்கும் 'செந்தாழம் பூவில்' பாடலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

https://www.youtube.com/watch?v=8e17naoTrmE