'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வரும் 'பொன்னி நதி பாக்கணுமே' பாடல் திரைப்படத்தில் முழுமையாகக் காட்டப்படவில்லை. எதற்காகக் காட்டவில்லை? காட்டாதது முட்டாள்தனமான முடிவு. முழுமையாகக் காட்டியிருக்க வேண்டுமென்பது என் கருத்து.
இக்காணொளியில் பாடலை முழுமையாகப் பார்க்கலாம். கேட்கலாம். பாருங்கள். கேளுங்கள்.
 
படம் - பொன்னியின் செல்வன் 1
இசை - ஏ.ஆர்.ரகுமான்
பாடலாசிரியர் - இளங்கோ கிருஷ்ணன்.
பாடியவர்கள் - ஏ.ஆ.ரகுமான், ஏ.ஆர்.ரெய்கானா, பம்பா பாக்யா
 
https://www.youtube.com/watch?v=14nAMb8bYSk பாடல் முழுமையாக:
 
ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்
 
நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்
 
பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல
 
பொட்டல் கடந்து
புழுதி கடந்து
தரிசு கடந்து
கரிசல் கடந்து
அந்தோ நான் இவ்வழகினிலே
காலம் மறந்ததென்ன
 
மண்ணே உன் மார்பில் கிடக்க
அச்சோ ஓர் ஆச முளைக்க
என் காலம் கனியாதோ
என் கால்கள் தணியாதோ
 
பொன்னி மகள்
லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்
 
வீரா சோழ புரி
பார்த்து விரைவா நீ
நாவுகழகா தாவும் நதியாய்
சகா கனவை முடிடா
 
பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
 
காற்ற போல
செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி
 
சோழ சிலைதான் இவளோ
சோல கருதாய் சிரிச்சா
ஈழ மின்னல் உன்னால
நானும் ரசிச்சிட ஆகாதா
கூடாதே
 
ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
கடமை இருக்குது எழுந்திரு
சீறி பாய்ந்திடும் அம்பாக
கால தங்கம் போனாலே
தம்பியே என்னாலும் வருமோடா
 
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
 
பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல
 
செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி
அந்தோ நான் இவ்வழகினிலே