வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கும். இலக்குகளும் வெவ்வேறாக இருக்கும்.  ஆனால் தாய்மண்ணின் மீதான பாசம் எல்லோருக்கும் பொதுவானது. இடம்பெயர்ந்தாலும், புலம்பெயர்ந்தாலும் அந்த நேசம் மனதை விட்டுச் செல்வதில்லை. அந்த மண் பசுமை கொண்ட விவசாய நிலமாக இருந்துவிட்டால் சொந்தப் பிள்ளைகளைப் போல் பேணிவளர்ப்பதும், வளர்ச்சி கண்டு பூரிப்பதும், பலன் தரும்போது பெருமிதம் கொள்வதும் மனிதஇயல்பு. 

அதே மண்ணை பிரிய நேர்தலும் அன்றி அதன் அழிவைக் காண நேர்தலும் ஒரு விவசாயிக்கு எத்தனை வேதனை தரும் அனுபவம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் பெற்ற பிள்ளைகளை இழப்பதை ஒத்த துயரம் தருவதுதான். இந்த மகிழ்வையும், துயரத்தையும் இலங்கைத் தமிழர் வரலாற்றுடன் இணைத்து 'பச்சைவயல் கனவு' என்ற நாவலை நெஞ்சில் நிறைத்தவர்  எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள்.

2004 இல் வெளிவந்த இந்நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருதினையும் பெற்றுள்ளது என்பது மெருமைக்குரியது. வெளிவந்து இருதசாப்தங்களை நெருங்கும் நிலையில் இன்று வாசித்தாலும்  உயிரோட்டம் மிகுந்த உணர்வுகளைத் தருவது நாவலின் சிறப்பு. இந்நாவல் தனிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கைச் சரிதத்தினூடு சொல்லப்பட்டாலும், ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கைக் குறியீடாகவே எண்ணத் தோன்றுகிறது. அத்துடன் சுதந்திரம் பெற்றது முதல் 2004  வரையிலான இனவன்முறை சார்ந்த வரலாற்றுச் சம்பவங்களின் மீள்பார்வை ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அழிந்து காடாகிப் போன தனது பச்சை வயலின் பசுமையை நெஞ்சில் நிறைத்து,  முதுமையில் ஏங்கும்  தனது தந்தையின் வாழ்க்கை வரலாறாகவே இந்த நாவலை தாமரைச்செல்வி படைத்திருக்கிறார். காடாக இருந்த நிலத்தை, தமது கடும் உழைப்பினால் குருவிகளின் இன்னிசை நிறைந்த, பச்சை வயல்களின் எழில்சூழ் பிரதேசமாக மாற்றிய தனது தந்தையைப் போன்ற எளிமையான மனிதர்களின் நினைவாக இந்த நாவலை கிளிநொச்சி மண்ணுக்கு சமர்ப்பணமாக்கும் படைப்பாளியின் பெருநேசம் மனதைத் தொடுகிறது. அத்துடன் தந்தை வாழும்போதே இந்நூலை  சமர்ப்பணம் செய்ததைப் பெருமையுடன் நினைவு கூர்கிறார். 

சொந்த அனுபவமொன்று நாவலாகப் புனையப்படும் போது அது வாசகருக்கு ஏற்படுத்தும் உணர்வுத்தளம் மிகமிக வலிமையானது. சிவம் என்பவரின் இதயத்தின் வலியை தன் எளிமையான ஆனால் உண்மையான சொற்களால் எமது நெஞ்சில் உருவேற்றும் பணியில் எழுத்தாளரின் கனவு நிஜமாகியுள்ளது. யுத்தத்தின் பேரழிவுகளால் செங்குருதியின் நிறமாகிய கனவுகள், நாவலின் இறுதியில் ஏ 9 பாதையின் மீள்திறப்புடன்  மீண்டும்  பச்சை நிறமாகும் என துளிர்விடும் நம்பிக்கையுடன் நிறைவுக்கு வருகிறது.

தென்மராட்சியை பிறப்பிடமாகக் கொண்ட பொறுப்பற்ற விளையாட்டுப் பிள்ளையான  இளைஞன் சிவம், தனது அண்ணனின் வழிகாட்டுதலை ஏற்று, அந்நாளில் வனவிலங்குகளும், விஷஜந்துக்களும் உலவும் காடாக இருந்த கிளிநொச்சி குமரபுரம் பிரதேசத்தில் தனது முயற்சியினால் வயல் செய்து முன்னேறிய கதையிது. முன்னேற்றத்தின் ஒவ்வொரு கணமும் மிகத் தரமான கலைப்படத்தின் சிறப்புடனும் உயிர்ப்புடனும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் அன்றைய காலகட்டத்தில் பகிர்ந்தளிக்கப் பட்ட விவசாய நிலங்களும், கிராம விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலங்களும், அன்றைய வடக்கு மக்களில் பலரது முன்னேற்றத்துக்கும் காரணமாக அமைந்தது வரலாறு.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற நாட்களுக்கு முன்னதாக  ஆரம்பமாகும் இந்த உயிர்சரிதம், இனப்பிரச்சனையின் ஒவ்வொரு கட்டத்திலும் நின்று நிதானித்து அதன் பேரழிவுகளை ஒரு விவசாயியின் கண்களூடாகக் காட்டுகிறது. ஐம்பத்தெட்டு, எழுபத்தேழு, எண்பத்து மூன்று இனக்கலவரங்கள்,  அமைதிப்படை என்ற பெயரில் இங்கு வந்த இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள், பேரழிவைத் தந்த இலங்கை இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களான பெருமழை, இரணைமடுக்குளம் உடைப்பெடுக்கும் காலங்கள் என பலவேறு இடர்களின் போது விவசாயிகளின் மனஉளைச்சலும், கடன்சுமையும், உடைமைகளுக்கான பேரழிவுகளும் அவர்களின் கண்ணீரை களக்காட்சிகளுடன் மனதில் படிமமாக்குகின்றன.

இனப்பிரச்சனையின்  மூலாதாரத்தை வேரறுக்கும் முகமாக  தமிழ் இளைய தலைமுறையினரது ஆயுதகலாசார தோற்றப்பாடும், மிதவாதத்திலிருந்து தீவிரவாதத்துக்கான  மக்களின் ஆதரவும் உளமார்ந்த விருப்பும்  நியாயப்படுத்தப்பட்டுஉள்ளன. இயக்கப் போராளிகள் பலரை நினைவுகூரும் கதையாளர், எழுபதுகளில் ஜே.வி.பி கலவரம், 1983 இனக்கலவரம் என்பவற்றை அடுத்து கூழக்கடா கும்பலாய் பறந்த ஆனையிறவு வெளியெங்கும் இராணுவ முகாம்களின் தோற்றத்தினை பதைப்புடன் வெளிப்படுத்துகிறார்.

இயங்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்த போது போக்குவரத்துதடை, பொருளாதாரத் தடை  என அரசின் ஒடுக்கு முறைகள் உச்சம் பெற்றன. அன்றாட வாழ்வியல் சரிந்து வீழ்ந்தது. இங்கு விவசாயிகள் பயிருக்கான உரங்களை பெறுவதிலும். தமது விளைச்சல்களை சந்தைப் படுத்துவதிலும் ஏற்பட்ட இடர்பாடுகளை  ஒரு சாதாரண பொதுமகன் புரிந்து கொள்ளும்படி கூறுகிறார். சொத்துசுகங்களை விட்டு ஓடி ஔிந்து நிலவரம் சற்றே சரியாகும் போது மீண்டு வருவதும், எல்லாமே மண்மேடாகக் கிடப்பதைக் காணும் போதும், மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழும் போதும் எத்தனை நெஞ்சுரம் மிக்க மக்கள் என்று வியப்பு உண்டாகிறது. 

 இராணுவ தாக்குதல்களில் குண்டு பட்டு இறந்தவர்களை   அந்தந்த இடங்களிலேயே விட்டுப் பிரிதலும், நெருங்கிய உறவுகளின் மரணத்திற்கு கூட சமூகமளிக்க முடியாத அவலங்களையும் கடந்து வந்தவர்கள் எமது மக்கள். இடம்பெயரும் மக்களின் அவலநிலையினை பொய்மை கலக்காத மொழியில் படைத்து வாசகரின் உள்ளத்தை ரணகளமாக்குகிறார் .

இத்தகைய இடர்மிகுந்த நேரங்களில் தம்மை விட எளியோருக்கும், ஆதரவற்றோருக்கும், இடம் பெயர்ந்தோருக்கும் உதவும் மனிதநேயமும், நேர்மையான மனம் கொண்ட மனிதர்களும் எழுத்தாளரின் படைப்புகளில் அடிக்கடி காணக்கிடைக்கும் உயர்பண்புகள். இது எக்காலத்திலும் தேவைப்படும் மனிதப்பண்புகள் என வலியுறுத்தும் படைப்பாளியின் எழுத்து நேர்மை பாராட்டுக்கு உரியது. இனக் கலவரங்களுக்கு முன் இனமதமொழி பேதமின்றி  கிளிநொச்சிப் பிரதேசத்தின் வயல்வெளிகளை வளப்படுத்திய மக்கள் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணிப்பதை வேதனையுடன் அவதானித்து, மனமாற்றத்துக்கான மையப்புள்ளி மக்களால் தெரிவு செய்யப்படும்  அரசின் கைகளில்தான் இருக்கிறது என்பதையும் மறைமுகமாகக் கூறி நிற்கிறார்.

இவை தகவல்களாக மட்டுமன்றி உணர்வாகவும் பதிகின்றன. வடக்கிற்கு வெளியே வாழும் இத் துன்பங்களை அனுபவிக்காதவர்களுக்கும் கூட இத்தனை  துன்பங்களா என்ற உணர்வை ஏற்படுத்தல் எழுத்தின் வெற்றி.என்னென்ன துன்பங்கள் நேரினும் இதுவரை தன்னம்பிக்கையை தமிழர்கள் இழக்கவில்லை என்றே தோன்றுகிறது. 

பரந்தன் குமரபுரத்தில் சாம்பல் காடாக இருக்கும் தனது வீட்டு முற்றத்து  மண்ணை கண்ணீர் மல்க  முழந்தாளிட்டு முத்தமிட்ட  சிவத்தாரின்   நிலைகண்டு நெகிழாத நெஞ்சங்கள் இருக்க முடியாது. அவரது  நம்பிக்கை போலவே நமது இனத்தின் நம்பிக்கைகளும் மெய்ப்பட வேண்டும்.

தாமரைச்செல்வி அவர்களின் எழுத்து இலக்கியத்தின் அழகியல் எழுச்சியை  மட்டுமே சார்ந்திருக்கவில்லை. இன்பியலும், துன்பியலும் கலந்த தன் எழுத்தினூடாக சுதந்திரத்தின் பின் தனது சமூகம் சந்தித்த உரிமை மறுப்புகள், இனவன்முறைகள், போரின் கொடுமை, இடம்பெயர்வின் அவலங்கள் என்பவற்றை எழுத்தில் கொண்டு வருவதன்   மூலம் எதிர்கால வரலாற்றுக்கான சான்றுகளையும் தர முயல்கிறார். 

அறம்சார்ந்த எழுத்தின் சொந்தக்காரரான படைப்பாளி தன் எழுத்தின் எல்லைகளையும் கொள்கைகளையும் தெளிவுற வகுத்துக் கொண்டவர். தனது எழுத்து வன்மையை நிரூபிக்கும் முகமாகவேனும் தனிமனித மனத்தின் குரூரமான பக்கங்களை தனது படைப்புகளில்  தொட்டுச் செல்லவில்லை. தமிழ் இளைஞர்களின் இயக்க நடவடிக்கைகளை விருப்புடன் கூடிய மென்கோணத்திலேயே அணுகும் இவர், இயக்கங்களுக்கு இடையிலான காட்டிக் கொடுத்தல்களை எந்த இடத்திலும் தொட்டுச் செல்லவில்லை. இதே உன்னத இலட்சியம் இயக்கங்களிடையேயும் இருந்திருந்தால், தமிழ்மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்க மாட்டார்கள் என்னும் எண்ணம் மனதில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.

காமமும் இலக்கிய வரம்புகளுக்கு உட்பட்டதே. எனினும் பாலியல் சாராத எழுத்துகளும் வெற்றி பெற முடியும் என நிருபித்த உயர் இலக்கியப் பரிசில்களின் சொந்தக்காரர் இவர். எந்த வயதினரும் சங்கடமேதுமின்றி வாசிக்க வைக்கும் கண்ணியமான எழுத்துகள் இவருடையவை. எழுத்தின் துணிவு காமத்தை முன்னிறுத்துவதல்ல. தமிழினத்தின் வரலாற்றில் பேரினவாத அரசுகளின் அடக்குமுறை, இராணுவ அட்டூழியங்களை  உள்ளது உள்ளபடி பதிவு செய்வதில்தான் என்பதை உணர்ந்தவர். 2004 என்ற காலப்பகுதி   இத்தகைய வெளிப் படுத்தல்களுக்கு  சற்றே சாதகமான காலப்பகுதியாகவும் அமைந்திருந்தது. உண்மையை எழுதல் என்ற  நேர்மைக்கு கிடைத்த வெற்றியாக  சாகித்திய விருதினைக் கொள்ளலாம்.

வீழ்தல் என்பது எழுகையே என A 9 பாதை திறப்புடன் ஆரம்பித்த தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகள், மிகச்சில ஆண்டுகளுக்குள் மீண்டும் 2009 இல் அனைத்தையும் இழந்து  அஸ்தமித்துப் போயினும், உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைகளென துன்பங்களை மறந்து மீண்டும் மறுமலரச்சி கண்டது.

இறுதிப் போருக்குப் பின்னரான வன்னி மக்களின் வாழ்வில் 'எதுவும் கடந்து போகும்' என்ற வாழ்வியலைக் கண்டு வியப்படையாத மனிதமனம் இருக்க முடியாது.இந்த மண் இழந்தவை எல்லாவற்றையும் தரும், மறுபடி வாழ்வும் தரும் எனும் நம்பிக்கை ஔியுடன் நிறைவு பெறுகிறது 'பச்சைவயல் கனவு' எனும் உயர்படைப்பு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here