அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ள படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான  திரு. லெ. முருகபூபதியின்  நுல்களின் வரிசையில் 30 ஆவது வரவாக வெளிவந்துள்ள சினிமா: பார்த்ததும் கேட்டதும் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 02 ஆம் திகதி ( 02-07-2023 ) மாலை 4-00 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி அல்வாய் கலைஅகத்தில் எழுத்தாளர் திரு. கொற்றை பி. கிருஷ்ணானந்தன் தலைமையில் நடைபெறும்.

யாழ். ஜீவநதி வெளியீடாக வந்துள்ள சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூலின் வெளியீட்டுரையை  எழுத்தாளர் திரு. இ.சு. முரளீதரன் நிகழ்த்துவார். இந்நூல்  பற்றிய தமது கருத்துரையை  திரு.  ‘’ அலை  “ யேசுராசா தெரிவிப்பார்.

நூலாசிரியர் திரு. லெ. முருகபூபதி தனது ஏற்புரையுடன் தனது இலக்கிய அனுபவங்கள் குறித்தும் பேசுவார்.  அல்வாய்  அவை அமைப்பின் 59 ஆவது கூட்டத் தொடராக இந்நிழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.