இலக்கியவெளி அரையாண்டு இதழ்கள் அறிமுகமும் உரையாடலும் 28.05.2023 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுநூலக குவிமாடத்தில் இடம்பெறவுள்ளது. மூத்த படைப்பாளி ஐ. சாந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் இதுவரை வெளிவந்த மூன்று இதழ்களாகிய தி.ஜா சிறப்பிதழ், கவிதைச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ்கள் பற்றிய கருத்துரைகளை
வடகோவை வரதராஜன், ந.குகபரன், வேல்.நந்தகுமார், இ.இராஜேஸ்கண்ணன், சின்னராஜா விமலன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

4ஆவது இதழாகிய பஞ்சாங்கம் சிறப்பிதழ் தமிழ்நாட்டில் வெளியிடப்பெற்றது. 5ஆவது இதழாகிய மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் இந்நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.  கனடாவிலிருந்து அகில் சாம்பசிவத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இவ்விதழில் ஈழ, தமிழக, புலம்பெயர் படைப்பாளிகள் எழுதிவருகின்றனர்.  இலக்கிய நண்பர்களையும் ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம். - இலக்கியவெளி சார்பாக சு. குணேஸ்வரன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.