அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும்,  எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஆவூரான் சந்திரனுக்கு இந்த ஆண்டு மணிவிழாக் காலம்.  இவர் எழுதிய சின்னான் ( குறுநாவல் ) வெளியீடு,  ஜனவரி  28 ஆம் திகதி ( 28-01-2023 ) சனிக்கிழமை மாலை      3-00 மணிக்கு மெல்பனில்  பேர்விக் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் நடைபெறும். முகவரி: 112, High Street, Berwick, Vic – 3806

எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர் திருமதி சாந்தினி புவநேந்திரராஜா அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் , எழுத்தாளர் ஆவூரானின் வாழ்வும் பணிகளும் பற்றியும் சின்னான் குறுநாவல் பற்றியும் இலக்கிய ஆர்வலர்கள் உரையாற்றுவர்.
ஆவூரானின் முதலாவது கதைத் தொகுதியான ஆத்மாவைத் தொலைத்தவர்கள் நூல்  சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூலை கொழும்பு ஞானம் இலக்கியப் பண்ணை பதிப்பித்தது.  தற்போது வெளியாகியிருக்கும் சின்னான் குறுநாவல்  யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக ஆவூரானின் மணிவிழாக்காலத்தில் வரவாகியுள்ளது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.