தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள், பட்டதாரி மாணவர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.

அன்பான நினைவூட்டல் அழைப்பிதழ்

அன்புடையீர், அண்ணாமலை கனடா தமிழ் - நுண்கலை- யோகா ஆய்வரங்கம் மாதந்தோறும் நடத்தும்  சங்க இலக்கியக் கருத்தரங்கத்தின் 13ஆவது கருத்தரங்கம் டிசெம்பர் மாதம் ஞாயிறு 18.12.2022 ஆந் திகதி  இந்திய நேரம் மாலை 6:30 மணி,  கனடா நேரம் காலை 9:00 மணி நேரத்திற்,  “பழந்தமிழ் இலக்கிங்களில் நாடகக் கூறுகள் - ஓர் ஆய்வு”

என்ற தலைப்பில் முனைவர் கோ. கருணாகரன் அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார்.  இந்த ஆய்வரங்கிற் பங்குகொண்டு உங்கள் கருத்துக்களையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்தரங்க அறிவித்தல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி வணக்கம்.
அன்புடன்.
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி.
தலைவர் - தமிழ்த்துறை
தென்னாசிய நுண்கலை கற்கை மையம்
அண்ணாமலை கனடா.
23.12.2022

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.