கனடாவில் வதியும் எழுத்தாளரும் ஆசிரியருமான ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா அவுஸ்திரேலியா வருகை தருகிறார். ஶ்ரீரஞ்சனியுடனான   இலக்கிய சந்திப்பும், அவரது புதிய சிறுகதைத் தொகுதி ஒன்றே வேறே நூலின் அறிமுக அரங்கும் மெல்பனில்  இம்மாதம் 30 ஆம் திகதி  ( 30-10-2022 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர்,  எழுத்தாளர் திருமதி சகுந்தலா கணநாதன் அவர்களின் தலைமையில் மெல்பனில் வேர்மன் தெற்கு சமூக இல்லத்தில் ( Vermont South Community House – Karo bran Drive,   Vermont South, Vic – 3133 )  நடைபெறும். இலங்கை மகுடம் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவருகின்றது.