வெகுஜனப்போராளி கிருஷ்ணபிள்ளை நூல் வெளியீடு“வெகுஜனப்போராளி கிருஷ்ணபிள்ளை” என்ற நினைவு நூல் 05.09.2011 அன்று காலை தொண்டைமானாற்றில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. கிருஷ்ணபிள்ளையின் 31 வது நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற அதிபர் செ. சதானந்தன் தலைமை வகித்தார். நிகழ்வில் சி.க செந்திவேல் அவர்களுக்கு நூலின் முதற்பிரதியை கிருஷ்ணபிள்ளையின் மகன் கி. நவநீதன் வழங்கினார். இந்நூலில் வே.சிவயோகன், சி.காசெந்திவேல், ,சி.வன்னியகுலம், க.தங்கவடிவேல், செ.திருநாவுக்கரசு, கி.கணேசன், நந்தினிசேவியர்,  எம்.கே சிவாஜிலிங்கம், வையாபுரி,  தெணியான்,  திருமதி பிறேமா மதுரநாயகம், வ.சின்னத்தம்பி, தணிகையன்,  குணசிங்கம் மற்றும் சீனியர் குணநாயகம் ஆகியோரின் கட்டுரைகள் ,குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றோடு நூலின் இறுதியில் மறைந்த கிருஷ்ணபிள்ளை அவர்கள் எழுதிய சில கவிதைகளும் எழுத்தாளர் டானியல் மறைவின்போது எழுதிய கட்டுரை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி பிறேமா மதுரநாயகம், மூத்த எழுத்தாளர் தெணியான், ஆசிரியர் சு. குணேஸ்வரன், ஓய்வுபெற்ற கரவெட்டி கோட்டக்கல்வி அதிகாரி த. தவேந்திரராஜா, கவிஞர் சின்னராஜன், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.நன்றியுரையை கிருஷ்ணபிள்ளை நவநீதன் தெரிவித்தார்.   - <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>