பாரதி  இலக்கிய சங்கமும் காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்தும் இலக்கிய மாநாடு  11இடம்   காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி; 2 நாட்கள்; 4 அரங்குகள்; 20 அமர்வுகள்; 35 படைப்பாளிகள்; 50 ஆய்வுக் கட்டுரைகள்!
 
செப்டம்பர் 9,10, 2011:

பொன்னீலன் அரங்கு                   - படைப்பு வெளி
லட்சுமிஅம்மாள் அரங்கு             - பெண்கள் இலக்கியம்
டொமினிக் ஜீவா அரங்கு            - ஈழ, புலம்பெயர்,புகலிட இலக்கியம்
குற்றாலம் ஆர்ட்டிஸ்ட் அரங்கு - இலக்கியமும் கலையும்

கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுகதை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நாவலாசிரியர்கள், விமரிசகர்கள் நாடக இயக்குநர்கள், ஓவியர்கள்,

இசை வல்லுநர்கள், கிராமியக் கலை வல்லுநர்கள், ஆய்வாளர்கள்,வாசக அன்பர்கள் நேற்றைய தடங்கள், இன்றைய கேள்விகள், நாளைய

எதிர்பார்ப்புகள், வரை படங்கள் அழித்த இலக்கியங்கள், பெண்ணின் பெருவெளிகள், நூல் அறிமுகங்கள், கலந்துரையாடல்கள், கலைகளின்

வாசிப்பில் வாழ்வு.....இன்னும் இன்னுமாக தமிழனின் சிந்தனைத் தளத்தின்  அடுத்த நகர்வுக்கு அடிகோலும் இலக்கிய மாநாட்டில்  உங்களது பதிவும் இடம்பெற அழைக்கின்றோம்.
 
மாணவ, மாணவிகள் தங்குமிட வசதி கல்லூரியிலேயே செய்து தரப் படும். பங்கு பெற விரும்பும் இலக்கிய அன்பர்கள்  முன்பதிவு செய்வது தங்குமிட உணவு ஏற்பாட்டிற்கு உதவும்.
 
முன்பதிவு செய்ய:

திலகபாமா
2/3136/8 பெருமாள் நகர்
விஸ்வநத்தம்
சிவகாசி 
 
thilagabama
mathi integrated health centre p ltd
2/3136/8 perumal nagar
viswanatham
sivakasi 626189
9443124688
www.mathibama.blogspot.com

திலகபாமா:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.