நாள்: சனிக்கிழமை (11-06-2011)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)
ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.

முதல் பகுதி: (3 மணி)
கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil. அவர்கள் பங்கேற்று நடிப்பு தொடர்பாக பேசவிருக்கிறார். திரைப்படங்களில், நடிப்பு எப்போது மிகப்படுத்தப்படுகிறது, இயக்குனர்கள் நடிகராவதன் அவசியம் என்ன? போன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்து சார்லி அவர்கள் பேசவிருக்கிறார்.

 

சார்லி திரைப்பட நடிகராக இருந்தாலும், இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சென்னையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு இருக்காய் இல்லையென்றால் தரையில் உட்கார்ந்து நிகழ்வை ரசிக்கும் மனநிலை கொண்டவர்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரைப்பட இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய குறும்படம் திரையிடப்படுகிறது. எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்கள் எழுதி சாகித்ய அகடமி விருது பெற்ற "விசாரணைக் கமிசன்" நாவலை வசந்த் அவர்கள் குறும்படமாக இயக்கியுள்ளார்.

குறும்படத்தின் பெயர்: விசாரணைக் கமிசன்
இயக்குனர் பெயர்: வசந்த்
கால அளவு:  01 மணி / 15 நிமிடங்கள்
 
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
இந்த மாதம் மூன்றாம் பகுதியில் திரைப்பட இயக்குனர் வசந்த், எழுத்தாளர் சா. கந்தசாமி, இக்குறும்படத்தில் நடித்த, தேனீ முருகன், லட்சுமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
 
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.