வடலி வெளியீடு தினக்குரலுடன் இணைந்து நடாத்தும் சர்வதேச இளம் படைப்பாளர்களுக்கான சிறுகதைப் போட்டி - 2013; முடிவு திகதி: 30-04-2013.வடலி வெளியீடு தினக்குரலுடன் இணைந்து நடாத்தும் சர்வதேச இளம் படைப்பாளர்களுக்கான சிறுகதைப் போட்டி - 2013; முடிவு திகதி: 30-04-2013.ஞாயிறு தினக்குரல் வடலி வெளியீட்டின் ஆதரவுடன் மாபெரும் சிறுகதைப் போட்டி ஒன்றை இளம் எழுத்தாளர்களுக்காக நடத்துகின்றது. உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் எழுத்தாளர்கள் இதில் கலந்துகொள்ளமுடியும். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த சிறுகதைப் போட்டியில் 65,000 ரூபா மொத்தப் பரிசாக வழங்கப்படுகின்றது. எல்லாமாக 13 பேருக்கு பரிசில்களைப் பெறுவதற்கான வாய்பு உள்ளது. அத்துடன் வெற்றிபெறும் சிறுகதைகளை நூலாக வெளியிடுவதற்கும் வடலி வெளியீட்டு நிறுவனம் முன்வந்திருக்கின்றது. வெற்றிபெறும் எழுத்தாளர்களுக்கு பணப் பரிசில்களுடன் நூல்களின் பிரதிகளும் வடலி வெளியீட்டினரால் வழங்கப்படும்.இலங்கையில் இது ஒரு முன்மாதிரியான முயற்சி. சிறுகதைப் போட்டி ஒன்றில் இந்தளவு தொகை பரிசாக வழங்கப்படுவது இலங்கையில் இதுதான் முதல் முறை. உலகம் முழுவதிலுமுள்ள இளம் எழுத்தாளர்கள் களத்தில் குதிக்கலாம்.

 வடலி வெளியீடு தினக்குரலுடன் இணைந்து நடாத்தும் சர்வதேச இளம் படைப்பாளர்களுக்கான சிறுகதைப் போட்டி - 2013; முடிவு திகதி: 30-04-2013.

தகவல்: த.அகிலன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://agiilan.com/