நோர்வேயில் இந்திய தூதராயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்நோர்வே ஈழத்தமிழர் அவையின் ஏற்பாட்டில் 05ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணிதொடக்கம் நான்கு மணிவரை இந்திய தூதரகத்திற்கு முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. ஈழத்தமிழர்களின் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமையை வெளிப்படுத்த பொது வாக்கெடுப்பு நடாத்த கோரியும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

காலம:  05.04.13
நேரம்: 15:00 – 16:00
இடம்: இந்திய தூதரகம்  முன்பாக  (Niels Juels gata 30, 0272 OSLO)

நோர்வே ஈழத்தமிழர் அவை

“வீழ்வது அவமானமல்ல. ஆனால்
வீழ்ந்து கிடப்பதுதான் பெருத்த அவமானம்”

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.