பாயும் நினைவுகளாய்
மறைந்து கிடக்கின்றன.

வலி சுமந்த சமூகம்,
விடியலைத் தேடி ஓடும் மனிதரில்
விழுந்த காயங்கள் ஆயிரம்—
ஒவ்வொரு அடியிலும்
மௌனத்தின் சிதறல்கள்.,
மனிதன் தேடும் விடியல்
தூரத்தில் மங்கலாய் தெரிகிறது.

குரல் எழுப்பாத நெஞ்சங்கள்
காற்றில் கலந்துவிடும் போது,
நீதியின் நிழல் கூட
தன் பாதையை மறந்துவிடுகிறது.

ஆனால்—

அந்த கரும்புகையின் பின்னால்
ஒளிந்து கொண்டிருக்கும் தீப்பொறி,
ஒரு நாள் வெடித்து எழும்;
மௌனத்தின் சங்கிலிகளை உடைத்து
சத்தமாக பேசும்.
அக்கினிக் குஞ்சு 
சிறகு விரிக்கும்!

அப்போது,
யுகத்தின் காவலகம்
அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து
உண்மையின் வெளிச்சத்தை
மீண்டும் காக்கத் தொடங்கும்.