* ஓவியம் - AI

கறுப்பு ஜூலை

மரண​ வாடையும்
அகதி அவலமும்
லங்கா ரத்னாக்கப்பல்
கறுப்பு ஜூலையை
கண் முன்னே நிறுத்தும் .

காமமும் கொடூரமும்
காடைத்தனமும்
தலை கொண்ட​ நாட்கள்
மனிதத்தை இன்னும்
கேள்வி கேட்கும் .

வரலாற்றுச் சிதைவுகளுக்குள்ளே
வாழும் மனிதர்கள்
பதியப்படாத​ புத்தகங்களாய்ப்
புதைந்து
போய் விடக் கூடாது .

ஆவணங்களுடன்
ஆதாரமாய் 
மீண்டும் எழுவோம்  !

தமிழ் வாழ்க​ !

தமிழ்க் கலாச்சாரம் என்று 
செய்யப்படும் நிகழ்வுகளில்
தமிழ் அருகி வருகிறதைத் தான் 
காண​ முடிகிறது .

அதிசய​ மானிடனே

யார் , யார் மீதோ கோவம் 
கொள்வதாய் நினைத்து
உன் முகத்தை ஏன்
அகோரப்படுத்திக் கொள்கிறாய்?
அதன் பயன் அறியாயோ !

ஆடம்பரங்களை 
தேவைகளாக​ எண்ணும்
நீ 
அடிப்பதைத் தேவைகளுக்கு 
அல்லல்
படுபவர்களை 
மறந்து விடுவது ஏனோ?

 காலவெள்ளம்

முதலாம் , இரண்டாம் வகுப்புகளில்
படித்த​ மாதவனும் ,
தேன்மொழியும் எங்கே
இருக்கிறார்கள்?
தெரியா விட்டாலும் 
அவர்கள் என் நினைவுகளில்
நிலைத்து இருக்கத் தான் 
செய்கிறார்கள் .

அடுத்து
ஒன்பதாம் வகுப்பு வரையில்
படித்தவர்களில் 
சிலர்
இன்றும் தொடர்பில்
உள்ளனர் .
அந்த​ நாட்கள் விளையாட்டுக்களும் 
பகிடிகளும்...
ஆங்காங்கே
நினைவுகளை
நிரப்பும்.
அடுத்துப்  பழகிய​
தோழர்களின் பசுமையான​ நினைவுகள் 
உயர்தர​ வகுப்பின்
சிலரைத் தவிர​ பலருடன் 
தொடர்புகள் அற்றுப் போனாலும்
அவர்களில் ஒரு சிலரை நினைவுத் திரைகளில் 
நீக்க​ முடியாதவை . 
பல்கலைக்கழக​ நாட்கள்
அரசியலுடன் சில​ கணம் நின்று 
மறைந்து போனது.

என்றும் ஊரில் இருந்து ஒன்றாய்
திரிந்து உறவாடிக் கொண்டிருக்கும்
சிலர் நினைவுவெளியை
பெரிதும் நிரப்பி நிற்கின்றனர்.

வீழ்ச்சி

ஏதோ ஒரு வகையில்
எல்லோரும் நம்பிக்கையைத் தான்
விதைக்கப் பார்க்கிறார்கள்
ஆனாலும்
அமைதி இழந்த​ இதயம்
அவநம்பிக்கையைத் தான் சுமக்கிறது .

அப்பா

நயாகரா வீழ்ச்சியால் ( சிதறல்களால்) நனைந்த​
பொழுதுகளில்
ஆற்று அருவியில் அப்பாவுடன்
குளித்த​ நாட்கள் 
வந்து கண்ணீராய் 
கசிந்து கொண்டது .

போர்

வேகமும் தூரமும் கணித்துக்
கொண்டு வேதாளங்கள் புறப்பட்ட​ 
பின்பு வெந்து போவது 
மனித​ உயிர்கள் தானே .

வெற்று உடல்களை விதைப்பதற்கா
பல​ வேதாங்களைக் கற்றோம் .

புதைகுழி

இந்த​ மிருக​ இனம் மட்டும் தான்
உயிரோடு புதைத்து விட்டு
எலும்பை எண்ணிப் பார்க்கிறது
ஆனால் , உயிரின் மதிப்பு
உலகைக் கடந்தும் 
உபதேசம் செய்கிறது .

சாட்டு

எந்த​ ஒரு நிகழ்வும் தானாக​ நடந்து
விடுவதில்லை , தேவைகளை ஒட்டித்
தேர்வு செய்தே நடக்கின்றன .

கண்ணீர்

பிச்சைக்காரனின் பொய்யும்
வழக்கறிஞரின் பொய்யும்
உண்மையைக் கட்டி வைக்கத் தான் 
பார்க்கிறது
ஆனால் மனிதர்களின் கண்ணீர்
அதை அறிய​ வைத்து விடுகிறது .

சாதனையாளர்

சாதனையாளர் வர​ வேண்டுமெனில்
சாதிகளைக் கடந்த​ சமூகம் உருவாக​ வேண்டும்
பாதை அமைத்து வாய்ப்புக்கள் 
வழங்கப்பட​ வேண்டும்
ஆய்வுக்கூடங்கள் 
இல்லாமலே ஆய்வாளர்கள்
வரவில்லை என்று வாதம்
செய்வதை
எப்படி ஏற்க​ முடியும் ?

தனிமனித​ வழிபாடு

யாரோ ஒருவரின் சிறிய​
சந்தோசத்திற்காக​ வாழ்வின் சில​
வருடங்களை தொலைத்த​ பின்பும் 
தனது சந்தோசம்
தொலைக்கப் படுவதை உணாராமல்
காலத்தை கடத்தி விட்ட​ சில​
மனிதர்களுக்காக​
கண்ணீர் வடிப்பதை விட​ ஏதும் செய்ய​ துடிக்கிறேன் .

சுற்றுலா

சுற்றுலா போனோம்
அனுபவப் பாடம் படித்து வர​
பாடத்தை விட்டு
படத்தை மட்டும் 
எடுத்து வந்தோம்
கைபேசி கனத்திருக்க​

உலகம்

பசித்தவர்களின் தலையில் கையை
வைத்து இவர்கள் கொடுக்கும்
ஆசீர்வாதம்
இவர்களுக்கோ இல்லை இந்த​
உலகிக்கோ எதைச் சொல்லி விடப்
போகிறது?
மாய​ வித்தைக்காரர்களால் 
மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்
மறுபடியும்.

சக்தி

அன்னை அவள்
ஆக்கச் சக்தியின் உறைவிடம்
உண்மை அன்பின் இணைவிடம்
காதல் நிறைந்த​ கனிவிடம்
கலைகள்  64  இன் பிறப்பிடம்
காலம் மாறக் காதலுடன் ...
இவை கண்டே மகிழ்வோம்
அவளிடம் .

பறவை

சிறகை நம்பும் 
எந்தப் பறவையும்
கிளைகளை நம்பி ஒரு நாளும்
இளைப்பு ஆறுவதில்லை

குழந்தை

ஒவ்வொரு குழந்தையும்
முதன்முதலில் உலகின் பரிசம் 
கிடைக்கும் போது
அதை அழுகையால் வெளிப்படுத்துகின்றது .

ரோபோ

இயந்திர​ உலகில் வாழ்வது
அவஸ்தை என்றவர்கள் இனிவரும்
இயந்திர​ மனிதர்களோடு எப்படித்
தான் வாழப் போகிறார்களோ ?

அகதி

கிளி கூட்டில் அகப்பட்டுக்
கிடந்தாலும்
அதன் நினைவுகள் பறப்பு
வெளியில் அல்லவா அலைந்து
கொண்டு இருக்கிறது
அதே போலத்தான் அகதியின்
நினைவுகளும் 
நித்தம்   அந்த​ உயிர்நிலத்தை
உணர்வுகளோடு சுற்றி வரும் .

மாறி விட்டான்

பேரறிவாளன்  ஆக​ மாறிய​
மனிதன்
பேர் அழிவாளன் ஆக​ மாறிய​ கதை தான் உலகப்
போர்களும் அணுகுண்டு
அச்சுறுத்தல்களும் .

மலை மனிதர்

இவை நாம் கைப்பட்டுப் பறிக்கப்
பட்ட​ கொழுந்துகள் , ஆனால் இவை 
முதல் தர​ தேயிலை ஆனதும்
நுகரவோ , ருசிக்கவோ எமக்கு
அருகதை இல்லை
நாங்களும் இந்த​ இலைகளைப்
போலவே காய்ந்தோம். ஆனால் எம்
வாழ்வில் என்றும் மாற்றம் இல்லை .

நேசம்

நீ நேசித்த​ மனிதர்கள்
காலம் கடந்து போய் இன்று
நேசிக்க​ கூடிய​ நிலையில் 
இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நேசம் மட்டும் 
எங்கோ ஒரு மூலையில்
உறைந்து கிடக்கும்
கண்ணீர் கூட​ காய்ந்து போன​
இந்த​ நாட்களில் .

கணம்

நாளை வாழலாம் என்று
ஒத்திப் போடுறவர்கள்
இன்றும் வாழ்வதில்லை
இனியும் வாழ்வதில்லை
வாழ்க்கை அந்தந்த​ கணங்களில்
தொகுப்பே அன்றி எதுவும் இல்லை .

புதியவர்கள்

இவர்கள் புதிய நீதிபதிகள் தான்
தண்ட​னையைக் கொடுத்து விட்டு
அல்லவா தீர்ப்புப் புத்தகத்தை
தேடுகிறார்கள் எதை எதையோ
எழுதிக் கொள்ள​ .

சருகுமாலை

ஒரு மனிதன் இழப்பின் பின்
படத்திற்கு மாலை போட்டு வைத்துக்
கொண்டு வாழ்க்கையைப் படிப்பதை 
விட​ அவர் இருக்கும் போதே
வாழ்க்கையை புரிந்து வாழ்ந்தால்
அது உனக்கும் நல்லது அவருக்கும் 
நல்லது அல்லவா !

'தீ ' பற்ற​ வைக்கும் நேரத்துக்குக்
முன்னேயே எதை எதையே
பற்ற​ வைக்கக் கூடிய​
தகுதி பெற்ற​ பலரும் இங்கே
வாழத்தான் செய்கிறார்கள் .

இந்த​ முயலின் வேகம் தன் உயிரை
காப்பதற்கானது அதே போல் 
இந்த​ மாணவனின் கல்வி 
ஒரு தலைமுறை மாற்றத்துக்கும்
ஆனது .
எனவே அங்கே ஒரு வேகமும் 
இங்கே ஒரு விவேகமும் 
இருக்கத் தான் செய்யும் .

அகவை அறுபது

வயது என்பது எண்ணிக்கை அல்ல​ 
எல்லாக் கோள்களும் பிறந்த​
நேரத்தில் இருந்தது போல் ஓரளவு
அதே இடத்திற்கு வர​ எடுக்கும் நேரம்
ஒரு சகாப்தம் முடிந்து
மறு சகாப்தம் தொடங்கும் காலம்
இங்கே எல்லாக் கோடுகளிலும்
தாண்டியும்
தாண்டாமலும் பயணித்து
பெற்ற​ அனுபவங்களும்
நினைவுகளும் நிறைந்து கிடக்கும்
பாலகனாக​ பந்துடன் ஓடிய​ காலமும்
பழகிய​ தோழர்களும்
விடலைப் பருவத்தில் வந்த​
வித​ விதமான​ நினைவுகளும்
விசித்திரமான​ சந்திப்புகளும்
காளைப் பருவத்தில் வந்த​ 
கவிதையும் காதலும்
மழழை இன்பத்தை
மகிழ்வுடன் தந்தது
மிதந்த​ கனவுகளை 
நினைவுகளாக்கி நிறுத்தப் பார்த்ததும்
மறவோன் பருவத்தில் 
இறையைத் தேடலும்
இசையைத் தேடலும்
இயல்புடன் கலந்தது
திறவோன் பருவம்
திறனுடன் மலரட்டும்
திட்டம் இட்ட​ திசைகளில்
நடக்கட்டும்
முதுவோன் பருவத்தை 
முழுமையுடன் வரவேற்க​ 
காத்திருக்கிறேன் .

துயர​ நாட்கள்

கொடுமை நடப்பதும்
குரல் கொடுப்பதும்
எதைக் காட்டுகிறது
நாம் இன்றும் ஒரு கொடூர​
சமூகத்தில் இருப்பதைத் தான்
காட்டுகிறது
அதுவும் மிக அழுத்தமான​
குரல்கள் எழுப்படாத​ நிலையும்
இதையே 
குறிக்கிறது .

மானுட​ துயர்களின் போது ஒன்று
படாமல் தனித்தனி தீவுகளாக​ நின்று
என்ன​ சுகம் கண்டு விடப்
போகிறோமோ
அத்துயர் நம்மைச் சூழும் வரை .
 
பேத்தியின் வருகை

உனது முகம் பார்க்க​ 
உயிரே துடித்திருக்க​
உந்தன் அசைவுகளில் 
உள்ளம் மகிழ்ந்திருக்க​
இங்கு பலர் பாலினத்தை
பதிந்து உரைக்க​
இனிய​ உன் வரவை
எண்ணி
இதயம் 
இசைத்திருக்க​
வருவாய் கண்ணே
எம் வாழ்வின் வசந்தமாக​  !

கருவுற்ற​ ஆயிரம் சொற்கள்
காற்றில் குப்பைகளாகவே
சேர்கின்றன​. கருவுள்ள​ ஒரு சொல்
மனிதனின் கலக்கத்தை தீர்க்கிறது.

உன்னைக் காணத் துடித்த​ கண்கள்
கண்ட​ போது பனித்துளிகளை
அல்லவா பொழிகிறது அந்த​ நீரில்
கூட​ உன் விம்பம் கரைவதை
நினைத்துக் கதறுகின்றேன் .

கண்மணிகளை உருட்டி 
நீ பார்த்த​ பார்வைக்கு
அர்த்தம் என்ன்வென்று
நீயும் சொல்லப் போவதில்லை
நானும் தெரிந்து கொள்ள​
முடியவில்லை
எனினும்
கடத்தப்பட்டி அந்த​ உணர்வு
ஒரு பெரும் ஈர்ப்பு சக்தியாக​
என்னைத் தொழிற்பட​ வைக்கிறது
என்பதில்
எந்த​ மாற்றுக் கருத்தும்
இல்லை

பிழை

மனித​ நாகரீகம் பேசும் இந்த​ 
மனிதர்கள் தான்
மனிதனை அடிமையாக்கி
விற்பனை செய்தார்கள்
அதிலும் குடும்ப​ உறுப்பினர்களை
பிரித்து வேறு இடங்களில்
விற்றார்கள்
அது தானோ மனித​ நாகரீகம் ?
மிருகங்களுக்கும் இந்த​ கதி
வேண்டாம் ;
மனிதர்களை
மதிக்கப் பழகுவதே நாகரீகம் !

மாயை!

நான் கைபேசியை பிடித்து
பார்த்திருக்க​
செயற்கை தொழினுட்பம்
உணவு ஊட்டட்டும்
காலுறை போட்டு விடட்டும்

வயோதிபத்தில்  மனிதனுக்கு 
மிஞ்சும் நினைவுகள் கூட​ சிலருக்கு
கிடைக்காமல் நினைவுகளை
இழந்து போகின்றது
நினைவாற்றலை பேணுவதற்கு
நினைவிருக்கும் போதே
நிதம் முயல்வோமாக​ !

கலை இலக்கியத்திற்காகய்
காலத்தை ஈந்தவர்களும்
மனித​ வளர்ச்சிற்காய்
மான்புடன் உழைத்தவர்களுமே
காலத்தைக் கடந்து
கண்களில் நிறைவானவர்களாக​ 
நிற்கிறார்கள் .