அன்பு மகளுக்கு அப்பாவின் கீதை !

மகளே ,
வாழ்க்கை பல​ வண்ணங்கள்
நிறைந்தது ,அதனை ரசிக்கவும்
அதன் அர்த்தங்களைப் புரிந்து
கொள்ளவும் என்றும்
முயற்சித்துக் கொண்டே இரு !

விஞ்ஞானம் சொல்லாத
கோணங்களில் வாழ்வு பல​
பரிமாணங்களை கொண்டது
அவை காலத்தோடு புரிந்தும்
சில​ கடந்தும் போய் விடும் .

கலைகளில் என்றும் ஈடுபாட்டை
வைத்துக் கொள் அவை உனக்கு
தெரியாமலே ஒரு தியான​ நிலையை
ஏற்படுத்திச் செல்லும் .

நல்ல​ ரசிககர்களே சிறந்த​
கலைஞர்கள் ஆக​ முடியும் என்பதை
புரிந்து கொள் .​

மொழி என்பது ஒரு தொடர்பு ஊடகம்
என்று சிறிதாகக்
கருதி விடாதே , அங்கே தான்
பண்பாட்டு விழுமியங்கள் மிகுந்து
புதைந்து கிடக்கின்றன​ .

சிலவேளைகளில் மெளனமே
சிறந்த​ மொழியாகி விடுகிறது
சொல்லாத​ சொற்களுக்கே
பல்வேறு அர்த்தங்கள் உண்டு
மனதால் பேசும் போது தான்
மகத்தான​ உறவு அங்கே நிலைக்கிறது !

இலக்கியங்களை தேடி வாசிக்கும்
போது தான் பல​ மனிதர்களின்
வாழ்வுக்குள் நீயும் வாழ்ந்து
அனுபவம் பெற​ முடியும் .

ஆன்மீகம் என்பது உன்னை
உனக்குள்ளே தேடுவது ,அதற்கு பல​
வகை தொடர்புகளையும் கடந்து
போக​ வேண்டும் .

கடமை உணர்வையும் கருணை
உள்ளத்தையும் வளர்த்துக்
கொண்டால் மனித​ வாழ்வு
மகத்துவம் பெறும் .

எந்த​ வீணையும் ஒலியை தனக்கு
புதைத்து வைத்துக்
கொள்வதில்லை ,  அவை கேட்பவர்
காதுகளிற்கு இன்பம் அளிக்கிறது .

எந்த​ முத்தும் கடலில் கிடந்தே
வாழ்வை முடித்துக் கொள்வதில்லை
அது மற்றவர்கள் கரங்களில் தான்
அலங்காரம் பெறுகிறது .

இயற்கை பல​ புதினங்களை
உனக்கு என்றும் காட்டிக்
கொண்டே இருக்கும் , புரிய​
முயற்சித்துக் கொண்டே இரு .

உண்மை நிலையை புரிந்து நன்மை
பல​ புரிந்து
நாளும் வளமுடன் வாழ்க​ !

சிலம்பரசி

அண்ணன் மன்னன் கல்லினாலும்
தம்பி புலவன்
சொல்லினாலும் கண்ணகியை கோவிலிலும்
காப்பியத்திலும் தீட்டி வைத்தனர்
வாழ​ வழி காட்டி வைத்தனர் .

கால் சிலம்பு எமக்கு
ஒரு நூல் தந்தது
கலைகளின் சிறப்பை அது
சொல்லி நின்றது .

வாழ்வு

ஏதோ சில​ இருப்புக்களை தக்க​
வைத்துக் கொள்ள​
இயங்க​ வேண்டியிருக்கிறது
அது தான் இங்கே
'வாழ்வு ' என​ வரையறுக்கப் படுகிறது .

துரத்தும் நினைவு

என்னை அத்தியாயம்
அத்தியாயமாக​ தொகுத்தும் பார்க்க​ நீ இருக்கும் போது
நான் மட்டும் ஏனோ
விலகிப் பார்க்கத் துடிக்கிறேன் .
நானோ வாழ்க்கைச் சமன்பாட்டை
எழுதத் துடிக்கிறேன்
நீ ஏனோ சமனிலிகளை மட்டும்
நிலை நிறுத்தப் பார்க்கிறாய் .

தேய்பிறை

இவள் சிரிப்பில் உலகமே
மயங்கி நின்றது ஒரு காலம்
இவளைப் பார்த்து சிரித்து
நிற்கிறது நிகழ்காலம்
ஏன் இந்த​ மயக்கமும் ,
வெறுப்பும் , இறுமார்ப்பும் .
வாலிபம் மட்டுமா வசந்தமானது ,
வயோதிபமும் ஒரு வரப்பிரசாதமே
தெளிந்த​ ஓடைக்கு
தெரு விளக்கு எதற்கு !

ஒளிக்கு நிறை இருக்கலாம்
இல்லை என்று கணக்குப் போட்டே
காலம் பல​ கடந்து விட்டோம் , இனியும்
கருத்துக்கள் மாறலாம்
காரணம் தொடரலாம்
ஒளியியல் ஒரு அற்புதமான​
புதையல்.
தேடிக் கொண்டே இருப்போம் .

உன் துள்ளும் கண்களுக்குள்
புகுந்து தான் இதயம் இசைத்ததோ
என் எண்ணத்துள் நிறைந்து தான்
எல்லை தாண்டி
என்னைச் சேர்ந்தாயே
வானமே வேடிக்கை நிறைந்தது
அதில் நாமும் வேடிக்கைச்
செய்வோம்  ,
வாழ்வே ஒரு வானவேடிக்கை தானே .

கம்யூனிசம்

மனிதன் இறந்த​ பின்பு தான்
பொதுவுடைமை ஆகிறான்
பேதமைகள் அகற்றிப் பிணம்
என்று பெயரிட்டு .


காதல்

அவன் ,

உடம்பெல்லாம் கண்ணாய்
உனைப் பார்க்க​ வேண்டும்
உன் உருவே
என் விழியின்
இமை காக்க​ வேண்டும் .

சுட்டு எரித்தாலும் சூரியனே
தாமரை உனைக் கண்டு தானே
மலர்கிறது .
பட்டு அழித்தாலும் மழையே
பயிர்கள் உனை நோக்கித்
தானே கிடக்கின்றன​ .

எல்லாவற்றையும் விட​
காதல் மிக​ அழகான்து , ஆகவே
அதுவே காவியமாகி விடுகிறது  !

அவள் ,

வருவான்  என் மாளிகைக்கு
வண்ண​ மலர் கொண்டு
தருவான் என் கைகளிலே
தங்க​ மலர்ச் செண்டு
மருவில்  கை தொட்டு
மங்கை எனை மீட்டு
உருவே உருகிடவே
உயிரை எனில் சேர்ப்பான்
பருவம் தடுமாற​ பாதை பலவாக​
வருவான் என் மாளிகைக்கு
வண்ண​ மலர் கொண்டு ...!

நடை

வயதும் அனுபவமும் மனிதனை
வழி நடத்திச்
செல்கின்றது ,
அதனால் , உறவுகளில் அவனுக்கு
உள்ள​
புரிந்துணர்வும் , தேவையும் வயதோடு
மாறிச் செல்கின்றது .

பிஞ்சு

அந்த​ இரு வயது சிறுமி காட்டிய​
அன்பை வெளிப்படுத்தும்
கை அடையாளம்
கண்களை பனிக்கச் செய்து
நிற்கிறது
எப்படித் தான் இவற்றை
எல்லாம் இலகுவாகக்
கற்றுக் கொண்டு விடுகிறார்களோ ?

புலப்பெயர்வு

இந்த​ நாட்கள் இனிய​ நாட்களே !

புதிய​ பூமியில் கால்களை
பதித்த​ நினைவுகளைச்
சுமக்கும் இந்த​ நாட்கள்
இனிமையானவையே .

புதிய​ பல​ மாற்றங்களை
விதைத்து
இனிய​ பல​ நிகழ்வுகளை
இதயத்துக்கு
அளித்த​
இந்த​ நாட்கள்  
இனிமையானவையே .

அன்பைச் சொல்லி
அரவணைக்கவும்
அறிவை வளர்க்க​ அணைத்தும்
நிறைந்த​
இந்த​ நாட்கள்
இனிமையானவையே .

அருகில் குடும்பலும்
ஆறுதலுக்கு நண்பர்களும்
பண்புடன் பழ்கும் பணித்
தோழர்களும் நிறைந்த​
இந்த​ நாட்கள்
இனிமையானவையே .

இளமை இசை பாடவும் ரசித்து
இருந்து
முதுமையை மறக்கவும் மலர்ந்து
வரும்
இந்த​ நாட்கள்
இனிமையானவையே .

எதோ ஒன்றை புதிதாய் எந்நாளும்
கற்றுத் தரும் இதயங்கள் சூழ்ந்த​
இந்த​ நாட்கள்
இனிமையானவையே !

(33 வருடங்கள் கடந்து விட்டன​ )

சங்கடம்

நீ அறத்துக்கு கட்டுப்பட்டு
நின்ற​ போது அவர்கள்
உன்னை கட்டி வைத்துப் பார்ப்பதில்
குறியாக​ நின்றார்கள்
திடீர் என​ எல்லாம் மாறி விடும்
என்ற​ மாயாவிக்
கதைகளுக்குள் கனவு கண்டு
நீயும் எம்மை விட்டுப் போய்
விடாதே .
உனது விளக்கை
நீயே தான் தேட​ வேண்டும் .

அனுப்பியவர் மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.