- பதிவுகள் வாசகர்கள்,  ஆக்கப்பங்களிப்பளிக்கும் அனைவருக்கும் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.  -

பிளவுகளால் பிரிந்திருக்கும்  பூவுலகில்
புரிந்துணர்வு பூக்கட்டும்; மலரட்டும்.
வளமான வாழ்வுக்கு மானுடர்தம்
வாழ்வில் வேண்டாத பிரிவுகள்
வீணே! வீணே! வீணே!
பிறக்குமிப் புத்தாண்டில் இப்
புரிந்துணர்வு பிறக்கட்டும்.

கட்டடக்காட்டுக் கனவுகளில்
களிக்கும் ககனத்தின் கனவுகள்
கலையட்டும் - ககனம்
எட்டுத் திக்கெங்கும் சிறகடிக்கும்
சிட்டுக் குருவிகளின் கனவுகளில்
சிறக்கட்டும்.

வர்க்கம், வர்ணமொழிந்த வையகம்
சொர்க்கம் எனத் திகழட்டும்.
வந்திருக்கும்  புதுவருடம் பாருக்கு
வழங்கட்டும் வளம்மிகு உலகை.

இதுவரை இருந்த இன்னல் நீக்கி
எதுவரினும் எதிர்த்தோட்டி எங்கும்
புதுவருடப் புத்தாண்டு பிறக்கட்டும்.
பெய்யட்டும் இன்பப் பெருமழை.