விண்ணில் ஓசையிட்டு செல்லும் விமானம்,
விரைந்து ஓடும் மாநகர இரயில்கள்,
சிக்னலில் தவித்துக் கொண்டிருக்கும்
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்,
அனுதினமும் பறக்கும் அவசர ஊர்திகள்,
பரபரப்பில் ஓடும் மருத்துவர்,
அவர்களுக்கு வழிவிடாமல் செல்லும்
மானிடக்கூட்டம்!

மரத்தை மறக்கச் செய்யும் மக்கள்தொகை,
எச்சில் உணவுகளை உண்ணும் காக்கைக் கூட்டம்,
அங்கங்கே தேங்கி நிற்கும் சாக்கடைகள்,
பணமில்லையெனில்
பகுத்தறிவுப் படத்திற்கு கூட
அனுமதி மறுக்கும் திரையரங்குகள்
என எதிர்மறை கவிவரையும் படி செய்தது
தலைநகர்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.