ஆற்றாத நோய்!
உன்னை
அணுவணுவாய்
சாகடிக்கும்
சுயகொல்லி!

கண்ணுக்கு தெரியாமல்
கனல் மூட்டும்!
காட்டுத்தீயாய் பரவி
உயிர் குடிக்கும்
உணர்வைக்
கெடுக்கும்!

நாடி நரம்பெல்லாம்
நர்த்தனம்
புரிய வைக்கும்
நட்டுவனார்!
தாளம் தப்பினால்
பதற வைத்து
சுயதண்டனை
நிறைவேற்றும்!

குடியானவன் தொடங்கி
கோடீஸ்வரன் வரை
பாரபட்சம் இல்லாமல்
பல மனங்களை
பற்றவைத்து
பல்லாங்குழி ஆடும்!

சிலசமயம்
சுயவிளம்பரம் செய்யும்!
பல சமயம்
யாரும் அறியாமல்
மனதிற்குள்
மண்ணூலியாய்
வாழ்ந்து
மனதை நஞ்சாக்கும்!

அவரவர்
மனதில் ஆழமாய்
குடியிருக்கும்
அனைவராலும்
ஒப்புக்கொள்ள
முடியாது!

உன் (கோபம்) கை விடுத்து
என்(அன்பு) கை கோர்ப்பதே
யாவர்க்கும்
நலமே!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.