ஒப்பிட்டுப் பார்த்து  உளமுடைந்து போகாதீர்
            கிட்டிய வாழ்வினைத் கிழித்துவிட எண்ணாதீர்
            பேராசை அலையில் சிக்குண்டு மாளாதீர்
            பெற்றதை மனமிருத்தி பெருமகிழ்வு எய்திடுவீர்   !

             மாடிமனை மிக்காரும் மனவமைதி கொள்வதில்லை
             மண்குடிசை இருப்பாரும் மனவமைதி கொள்வதில்லை
             வாடிவிடும் மனநிலையால் வருவதுவோ எதுவுமில்லை
             வாய்த்துவிட்ட வாழ்வுவதை மகிழ்வுடனே வாழ்ந்திடுவீர்   !

             ஓடியோடி உழைத்தாலும் ஒருபொருளும் கூடவரா
             கோடிகோடி நிறைந்தாலும் குறையென்றே எண்ணுகிறார்
             தேடியோடி தினமலைந்தும் திருப்திமட்டும் வருவதுண்டோ
              நாடிவந்த வாழ்வுதனை நாம்விரும்பி வாழ்ந்திடுவோம்  !

              மலையிருக்கும் மடுவிருக்கும் இருண்டுமே வேறுநிலை
              ஒப்பிட்டுப் பார்ப்பதிலே ஒருபயனு மங்கில்லை
              கூழ்குடித்தும் பசியடங்கும் குடிசையிலும் மகிழ்வுவரும்
              மனமதனைச் சீராக்கின் வாழ்வங்கே மலர்ச்சியுறும்  !
              
              உறங்குவது ஓர்சாவு விழிப்பதுவே மறுபிறப்பு
              அதற்கிடையில் ஒப்பீடு அவசிமா சிந்திப்போம்
               மூச்சிருக்கும் வரையெமக்குப் பேச்சிருக்கும் எனநினைத்தால்
               ஒப்பிட்டுப் பாராமால் உளமகிழ்ந்து வாழ்ந்திடுவோம் !