கவிதை: ஆராதனை

என்னை
ஆரத்தழுவி
அரவணைத்த அன்புத் தாயே!
நீ பிரிந்து
யாருமற்ற அநாதையாய் என்னை
அழ வைத்தாயே!
 
துடுப்பிழந்த படகாய்
துயரக் கடலில்
தத்தளிக்கும் என்னை
கரைசேர்ப்பார் யாருண்டு?
தாயன்புக்கு ஈடாக
தரணியிலே ஏதுண்டு?

உன் பிரிவுத் துயர் தாளாமல்
ஓயாது புலம்பும் எனக்கு..
ஒத்தடம் தர
உனை அன்றி
யார் வருவார் துணைக்கு?

உன்னை எண்ணியே
உயிர் சுற்றுது
ஒவ்வொரு திக்கும்!
உனக்காக
என்னுள்ளம்
ஓயாது ப்ரார்த்திக்கும்!!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.