' ஒரே பயிர்ச் செடியில்  ,  ஆண்  பூக்கள் பூத்து , பெண் பூக்களும் பூக்கின்றன ' என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும் ? . சிறிமாவின்  காலத்தில்  , அதிசயமாக இலங்கையில் கல்வி முறையை மாற்றி இருக்கிறார்கள் . அதில் , விவசாயப் பாடமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது . அப்பாடத்திட்டத்தை இன்னும் சீர் படுத்தி இருக்க வேண்டும் . அதிலேயும் இந்த  எளிய கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படவில்லை .  அசேதன பசளைப் பாவிப்பு இருந்தளவுக்கு சேதன  பாவிப்பும்  சொல்லிக் கொடுக்கப் படவில்லை . அது , சீனக் கல்வி முறை . ஒருவேளை அங்கே இருந்த புத்தகத்தையே   அப்படியே  ......தமிழ்படுத்தி , நடைப்படுத்திஇருப்பார்களோ ? .  

   முதல் நிலவிய     கல்வியிலும் அப்படித்தான் நடைபெற்றிருந்தது . ஒரே  காலனி  சிந்தனை , மயக்கம் .  இலங்கையின் அறுபது வீத உணவை.... வழங்குகிற ...தமிழர்களின் ஒத்துழைப்பையும் ( தமிழர் விவசாய முறைகளை  ) கெளரவத்துடன் பெற்றிருக்க வேண்டாமா ? . விவசாய அறிவு அவர்களை விட   இவர்களிடமே  அதிகமாகவே  இருக்கிறது . எதிலும்  ,  இன அலட்சியம்    தொடர்க்கிறது  .  தமிழர் பசளை முறைக்கு முற்றாகவே  கல்தா ! மொழிக்கு அவமரியாதை . நிலம் பறிப்பு . ஒற்றையாட்சி என்ற பம்மாத்துப் போர்வையிலே பயங்கரவாதச் சட்டங்கள்  , அந்த போலி நாட்டைக் காப்பாற்ற அவசரகாலச் சட்டங்கள் வேற  .  நச்சுக்களை உற்பத்தி செய்கிற பார்ளிமெண்ட்   மிலேச்சத்  தனமாக  ஆண்டு வருகிறது . காலனிக் (படுத்திய  நாடுகளின் )  கூட்டம்  , இலங்கையையும் ஒரு இஸ்ரேலாக்கும்  ஒரு  முயற்சியில்    எடுப்பார் கைப் பிள்ளையாக்கி விட்டிருக்கிறது . நேரு   ,  இந்தியா வல்லரசாகி விடும் என  மனக்கணக்கு போட்டார் . அதனால் ஏற்பட்ட தவறு தான் இலங்கையை ஒரு நாடாக இயங்க விட்டது . இன்று உக்ரேன் ரஸ்யாவின் மார்பில் உதைக்கிற ஒன்றாக மாறியது  போல இந்த நாடும்  இந்தியாவிற்கு  .மாறி  விட்டிருக்கிறது .  
 
இரண்டாம் உலகப் போருக்குப் பின் , இன்று வரையிலும்  ஜேர்மனியிலும்  , யப்பானிலும்  அமெரிக்கா  பெரிய இராணுவத்தளங்களைப் போட்டு ( வெளியேறாமலே ) தன் கைப்பாவைகளாகவே வைத்திருக்கின்றது . இவ்விருவருமே  அவர்களது அமைப்பிலே  இருக்கின்றன . நாகரிக அடிமை நிலைகள் .     இந்த கதை ,  இந்த முயற்சி விடுதலைக் காலத்தில் நடக்கிறது .  

    மதிய நேரம் போல சிறு தோழர்களான வரதனும்  , மகியும்  வியர்க்க , விறு ,விறுக்க சைக்கிளில் வந்து  போர்டிக்கோவில் , நிறுத்தி விட்டு  அவனுடைய கதவைத் திறந்து வந்தார்கள் . அவ்வறை பெரிய திண்ணையுடன் கூடிய வீட்டில் வலது கோடியில் அமைந்திருக்கிறது .   ( 20 '  x 20 ' இற்கு  அளவுடையது .) " அண்ணை அவசரம் " என்றார்கள்  . " உள்ளே சென்று " அம்மா வெளியில் போயிட்டு வாரன் " என்று விட்டு சைக்கிளில் ஏறினான் . அவர்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த மகளிர் பிரிவினர்  ,  அக்கிராமத்தின்  மகளிர் தலைவியான சாந்தா அக்காவீட்டிற்கு , அவர் மூலமாகக் கிராமத்துப் பெண்கள் சிலருக்குத் தையல் வகுப்புகள் வைத்துக்  கொண்டிருக்கிறார்கள் .  அன்று சைக்கிளை விட்டு இறங்கிற போது எசகு , பிசகாக காலை ஊன்றியதில் கால்மொலி  பிசகி விட்டது .  அவர்களுக்கு பெண்கள்  யாரையுமே தெரிந்திருக்கவில்லை . மகளிர் புறம்பாக இயங்குகிற அமைப்பு . சென்ற போதே தெரிந்தது .காயப்பட்டவர் நாகுவின் அக்கா . பரியாரியார் வீடு அதிக தூரமில்லை . ஆனால்  , இயக்கச் சமாச்சாரம் . அவர்களுடைய லேடீஸ் சைக்கிளில் ஏற்றி வருவது சிரமம்   எனப் பட்டது . " டேய் ,வரதன்  , நீ இவரை ஏற்றி வா" என்று கூறி  ... ஏற்றிச்  சென்றார்கள் . பரியாரியார் நடுத்தர இளைஞர் . " தங்கச்சி , பார்த்து இறங்கக் கூடாதா " என்று விட்டு நோ எண்ணெய் விட்டு ," அவரை அங்கால பார்க்க வையுங்கள் " என்று தோழியருக்கு கூறி  விட்டு ..ஒரு ' காலசைவு  ' படுத்தினார் . அவர் மனைவி , பெண்பிள்ளைகள் என பார்த்த இரக்கத்தில் எல்லாருக்கும் தேனீர் கொண்டு வந்து கொடுத்தார் . வலியைக் குறைக்க மாத்திரைகளையும் கொடுத்தார் . " 3 ..4 நாளிலே குணமாகி விடும் நிதானம் தவறுற பட்சத்தில் இப்படி நடந்து விடுகிறது . கவனம் " என்று சொல்லி ...விடை கொடுத்தார் . விடுதலைக்கு இலவசச் சேவை . மற்றவர் கூட்டிச் சென்றால் ....குறைந்த பட்சக் கட்டணமாவது கட்ட வேண்டும் . இது நடந்து இரண்டு மாசம் ஓடி  விட்டன .

   கடந்த மாதம் நடந்த பிரதேச ( எ .ஜி .எ ) கூட்டத்திலே , தொழிற்சங்கத்தோழர் இளங்கோ " நம் வயல்களில் நிறைய குளங்கள் வாய்க்கால்கள் மண் நிரம்பிக் கிடக்கின்றன .  வயல்கள் தோறும் ஒரு போகச் செய்கை மட்டுமே நடை பெறுகின்றன . பிறகு சிலர் எள்ளு ,கொள்ளு ,சணல் ...போடுகிறார்கள் . ஆஹா...முந்திய காலத்தில் பருத்தியும் கூட  போட்டிருக்கிறார்கள் போல தெரிகிறது .  அன்று ...நீர் நிலைகளை பராமறிக்காமல் விட்டால் குற்றம் . அரசர்கள் அதில் பருந்துப் பார்வையுடனே இருந்திருக்கிறார்கள் . இலங்கை தன்னிறைவான நாடாகவே திகழ்ந்திருக்கிறது .  போர்கள் நடந்தாலும் குளம் குட்டைகளை அழியாது பேணி இருக்கிறார்கள் . இன்று  , வடக்கு ., கிழக்கு மாகாணங்களே மோசமான நிலையை எய்தி இருக்கின்றன . மற்றைய மாகாணங்களில் இங்கே இருக்கிற போன்ற வெய்யிலும் இல்லை . வறட்சியும் இல்லை . இருந்த போதிலும் இங்குள்ள விவசாயிகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் . காலனி ஆட்சிக்குப் பிறகு தான் இந்த  இனவாதம் உயர்ந்து இம்மாகாணங்களும் மக்களும் புறக்கணிப்புகுள்ளாகி  இருக்கின்றனர் . இன்று ஆட்சியுள்ளவர்கள் ....இனப்படுகொலைகளைக் கூட நிகழ்த்துபவர்களாக  மாறிப் போய் விட்டிருக்கிறார்கள் " .

   " வீணே கிடக்கும் நிலங்களை கேட்டுப் பெற்று  ..3- 3  அரை மாதங்களில் நாம் ஏதாவது பயிர்களைப் போட்டுப் பார்க்கலாம் . எள்ளு  , சணல் ..இவற்றைக் கூட செய்கை பண்ணலாம் . தொழிற்சங்களூடாக அவற்றை  பயன்படுத்தி தொழில் முயற்சிகளிலும் கூட  இறங்கலாம் " என்ற கருத்தை சேகர் தோழர்   முன் வைத்தார் . மகளிர் அமைப்புத் தலைவி நாங்கள் செய்து பார்க்கிறோம் " என்றனர் . அரசியல் அமைப்புத் தோழர்கள் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள் என தெரிவிக்கப் பட்டது . ராமனோடு கூட வந்திருந்த  சாந்தன் " எங்கட ஒரு பரப்பு வயல் துண்டை தருகிறேன் . விரும்பினால் ...முயற்சித்துப் பார்க்கலாம் " என்றான் . அராலி ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது . லேடிஸ் சைக்கிளில் ஓடித்திரிகிறவர்கள்   "எங்களால் வர  முடியும் " என்றார்கள் . இப்ப வந்து கஸ்டப்படுகிறார்கள் . சிலர் அவரையும் சுழற்சியாக பயிரிடுகிறார்கள் என்றார்கள் . இவர்கள் அவரைப்பயிரைத் தெரிந்து விட்டிருக்கிறார்கள் .

   காலில் காயப்பட்ட சாந்திக்கு கால்  குணமாகி விட்டிருந்தது .  நிலத்தைப் பார்வை இட வந்திருந்தார்கள் .  

   அவர்களுக்கு  கிராமத்திற்கு  முந்தி வந்திருந்த , தெரிந்த  நாகு ,  படையின் தேடுதல் வேட்டையின் போது வீதியில் சுடுபட்டு இறந்து போனவன் . அந்த துக்கம் நெஞ்சிலே எல்லோருக்கும் இருக்கிறது .  அந்த தோழரின் அக்கா  சாந்தியும்  தோழியர் ...என்பதால் ...பெடியள்கள் விழுந்து விழுந்து உதவுகிறார்கள் .  ட்ராக்டர்  கார கண்ணனுக்கு டீசலுக்கு காசைக் கொடுத்து உழுது விட்டிருந்தனர் . புரட்டப்பட்ட மண்ணில் இருக்கிற கல்லு, களைவேர்களை...என பலதைப் பொறுக்கி பெடியள் கொடுத்த சிறிய கடகத்தில் சேர்க்க  , பெடியள் எடுத்துச் சென்று  வேலி ஓரம் கொட்டி விட்டு திரும்ப சேர்க்கக் கொடுத்தார்கள் . பெடியளும் ...இருந்து  பொறுக்கினார்கள் . தோழியரும் " அக்கா..., அக்கா .." என்று கேட்கிற பெடியள்களுக்கு  அன்புடன் பொறுமையாக கூறிக் கொண்டிருந்தார்கள் .  ராமன் , ரமேஸ் போன்ற பெரிய தோழர்கள்  பாத்தி கீறி   நீர்  செல்லுறதுக்கான வாய்க்காலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள் . உச்சி வெய்யில் தலையைப் பிளந்தது . வேலி நிழலில் ஓரளவான மண் பானையில் நீரும் செம்பும் , இரண்டு , மூன்று தகரப் பேணிகளும் வேற  இருந்தன . அன்று தண்ணீரை போத்தலில் அடைக்கிற பாவனை தொடங்கி இருக்கவில்லை . பதினொரு மணி போல சாந்தன் வீட்டிலே இருந்து அலுமினியப் பானையில் தேனீரை அவனுடைய சின்னத் தங்கச்சியும் , குட்டி மச்சான் குலமும் எடுத்து வந்தார்கள் . காய்ந்து கறுத்திருந்த போது ...குடிக்க இதமாக இருந்தது . காத்து வீச ...சுகமாக இருந்தது . நிழலில் இருந்து வேலியோரம் தத்திக் கொத்திக் கொண்டிருந்த புளுனிக் குருவிகளை  வேடிக்கை பார்த்தார்கள் . " 7  சகோதரிகள் " என்கிறார்கள் . வீட்டிலே பெண்கள் என்றால்  .... செல்லம் தான் . அந்தப் பார்வை ...இதிலேயும் படிந்திருக்க வேண்டும் .

    இந்த ஒரு பரப்பிலே பெரிய நீள்சதுரப் பாத்திகளாக்கி  வரப்பு வாய்க்காலையும் கட்டி பக்கப்பாடாக  ஒரு பெரிய வாய்க்காலை ஓட விட்டாலே நீரை ஓரளவுக்கு  முழுப்பயிருக்கும் வழங்க முடியும் " என்று சந்திரன் சொல்ல ராமன் சிரித்தான் . " இஞ்ஜினியராக  ரோடு போடுகிறோம் " என்றான் . தோழியர்களுக்கும் எப்படி போடுறது என்று தெரிந்திருக்கவில்லை . " வித்துவானைக் கேட்டு தான் சொல்கிறேன் " என்றான் . வித்துவான் (பட்டப்பேர்) இயற்கை விவசாயி ஆசிரியரின் இடைப்பட்ட மகன் . அவன் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்  . பிறகென்ன ! . அந்த நிலத்தில் மட்டுமே கிணறு இருந்தது . சாந்தனின் வீட்டு வளவாக இருந்த துண்டு நிலத்தை பிறகு வயலாக்கி விட்டார்கள் போல இருக்கிறது . ஒரு காலத்தில்  பனை மரங்கள் நின்றிருக்கலாம் . மரங்களை தறித்த பிறகு  ..இப்படியும் ஆகி இருக்கலாம். மரத்தை விற்றுவிட்டால் அவர்களே வந்து வெட்டி  துப்பரவுபடுத்தி விட்டும் போய் விடுவார்கள் .  அராலியும்  பனங்காட்டை அழித்து உருப்பெற்ற கிராமங்களில் ஒன்று தான்  . இன்னமும் சில இடங்களில் பனை மரங்கள் செறிவாகவே காணப்படுகின்றன .

   கிணறு வந்ததை அறிய அன்று கூகுளும் இல்லை விக்கிமீடியாவும் இல்லை . அந்தக் கிணறு ஓரளவு மட்டம் வரையில் நீரைக் கொண்டிருக்கிறது . குளங்களும் , வாய்க்கால்களும் நீருடன் உயிர்ப்பாக இருந்திருந்தால் நீர் மட்டமும் கூடவாக இருந்திருக்கலாம் . இலங்கை அரசு மட்டுமில்லை , மக்களும் தான் புத்திசாலிகளாக இருக்கவில்லை . மழை நீரை நம்பியே ஒரு போக நெற்செய்கையே வயல்களில் நடை பெறுகின்றன. சாந்தன் அந்த கிணறை  வைத்து தான் "எங்கட ஒரு பரப்பு நெற்காணியிலே முயற்சித்துப் பாருங்களன் " என்று அழைத்திருக்கிறான் . எப்படியோ காலை வைத்து விட்டார்கள் .  இனி என்ன !  " கடமையைச் செய் .  பலனை எல்லாம் எதிர் பார்த்துக் கொண்டு நிற்க முடியாது ." " லெவ்ட் , ரைட் ! , லெவ்ட் ரைட்  " .  
*********
அவரைப் பயிருக்கு பெண் பூக்கள் பூக்க  ஒரளவு  வளர கெட்டுகளின் நுனிகளைக் கிள்ளி விட வேண்டுமாம் . அதை"  ஜி ஒன்று " எனப்படுகிறது . அப்படி செறிவாக வளர , வளர இரண்டு ஜி , மூன்று ஜி...என கிள்ளி  ,   கிள்ளுறதை நிறுத்த வேண்டும் . ஜி என்பது சந்ததி  . இந்த நுள்ளி , கிள்ளிச் சமாச்சாரம் மிக  , மிக    முக்கியமானது .  பிறகு  செடி  ஒவ்வொன்றுமே சடைக்கும்  .  பொலிவாகி நிலத்திலும் வேர்களை உரமாக ஊன்றும் . இந்த விசயம்   ஒன்றும்  எமக்கு அன்று தெரிந்திருக்கவில்லை . போதிய நேரமும் இருந்தது .  ஆட்களும் இருந்தார்கள் . அறிந்திருந்தால் அன்றைக்குச் சாதனை படைத்திருக்கலாம் . பத்தாக்குறைக்கு நீரை தோழர்கள் வேளாவேளைக்கு இறைத்துக் கொண்டுதான் வந்தார்கள்  . எரிபொருள் செலவுக்காக ....மானியத்தில் கிராமத்து வீட்டு     எல்லாம்  இறைத்துத் தள்ளினார்கள் . ஓரிறைப்புக்கு இருபது ரூபா மாத்திரமே வாங்கப்பட்டது . சேறு அள்ளி , தூர் வாறி ...ஊற்று நீரையே பாத்திரத்தில் பிடித்துக் குடுத்த  போது வீட்டுக்காரர்கள்  மகிழ்ச்சியுற்றனர் . கிராமத்துத் தண்ணீர் எல்லாம் பல்வேறு சுவையுடயவை . ராமன் வீடு ...பாசி மணம் . பக்கத்து வீட்டில் ...சிறிது கசப்பு . ஒருவர் வீட்டில் சிறிது எரிபொருள்  மணம் . கழிவிடத்தில் எழுகிற மெதனோல் எப்படியோ சேர்ந்து விட்டிருக்கிறதோ  ?  , அன்று அவன்  கீழே பெற்றோல் ...ஏதும் கிடக்கிறதோ என்று தான் நினைத்தான் . ஆனால் முதல் ஊற்றில் ஒரு இனிமை கிடக்கிறது .'  நம்ம நீர் ஜூஸாகவும் இருக்கிறதே ' என்ற நகைச்சுவை உணர்வும் இருக்கிறதே . பல்வேறு தேவைகளிற்குப் பாவிக்கிற நீரை அன்று ...அவர்கள் ஆசை தீரக் குடித்தார்கள் . கங்கா அமுதம் . போங்கள்  .  நீரிறைப்பு அப்படிக் கலகலைப்பையும் ஏற்படுத்தியது . வீட்டாரும் தேனீர் ,  தின்பண்ட பலகாரம் எனக் கொடுத்து உபசரிக்கவும் தவறவில்லை . உழைப்பை எப்படி எல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் வழங்கிச்  சிந்தினார்கள்  . இயக்கத்துக்கு முதலில் ராமன்  கிராமத்துப் பெடியளுடன் சேர்ந்து நல்ல தண்ணீர்க் கிணறை இறைத்திருந்தான் . அச்சமயம் ,   வளர்ந்த  ஒரே ஒரு சிங்க இறால் பலவித நிறங்களில்  பளிச்சிட  இவர்களிடம் அகப்பட்டிருந்தது . அந்த அழகில் சொக்கிப் போனார்கள் . அதைக் குறித்து ஒவ்வொருவரும் ...தெரிந்ததைக் கூறியதும்  அட்டகாசம் தான் .  சுட்டு சாப்பிட்டதை இன்னும் மறக்க முடியவில்லை . இறங்கி கலக்கிறவர்களுடன் இவனும் இறங்கி விடுவான் . அதனாலே அழுத்தமாக பதியிறது நிகழ்ந்திருக்கிறது .  இன்று இவன் குட்டித் தலைவன் . கண்ணனைப் போல மேய்ப்பவன் . இருந்தாலும் ஒரிரண்டில் இறங்கித்தான் இருக்கிறான் . பெடியளுடன் சேர்ந்து வேலை செய்கிற போது அவர்களுடைய சந்தோசம் தாறுமாறாகப் பிய்த்துக்  கொண்டு போய் விடும் . இவனும் கூட  அப்படிதானே இயக்க விசயங்களை புரிந்து கொள்கிறான் .

     அவன் 9 மணிக்கு மேலேயே தோட்டப்பக்கம் செல்வான் .  அனேகமாக  10 ம் ஆகி விடும் .  சிறு தோழர்கள் வேளைக்கே வந்து உதவத் தொடங்கி இருப்பார்கள் . '  சிறு போகப்பயிர் விளைச்சலைத் தரும்  ' என்ற நம்பிக்கையில்தான் கால் வைத்திருக்கிறார்கள் . காலத்தைப்  போகம் என்றது  விளைச்சலைத் தந்து சந்தோசப்படுத்தும்  என்ற அர்த்தத்திலேயே  இருக்கிறது . தமிழில் ஒரு சொல்லையே  நல்லவிதமாகவும் சொல்ல பாவிக்கிறார்  .  அதன் செறிவைக் கூட்டி அதே சொல்லை  இன்னொரு விதமாக சொல்லவும் பாவிக்கிறார்கள்.  இருச் சொல் பாவிப்பு  முறை  . போகம் என்பதன் நேரடி அர்த்தம் மகிழ்ச்சி , களிப்பு . நெற் செய்கையோ  ....காலமோ அல்ல  . ஆனால்  , அமோகமாக விளைந்து  பயனை அளிக்கனும்...என்ற பிரார்த்தனையுடன் ,  ஒருவித வணக்கத்துடன் தெரிவிப்பதுற்கு  , இந்த இரவல்  சொல்லை  எடுத்து கையாளுகிறார்கள் . இதே போல முதலில் படிக்கட்டுக்களை மேலே ஏறுவதுக்காகவே கட்டினார்கள்  .  கற்கிறதும் ஏறுவதாகவே  இருக்க வேண்டும் ....என்று  இரவல்  சொல்லிலே " படி , படி " என்று   சொல்லப்படுகிறது . இப்படி  அர்த்தமில்லாத  ....ஒன்றுக்கும்  கூட  பயன்படுதுறதும்   இருக்கிறது .  

     இது எழுத்துத் தமிழ்  அல்ல  , மக்களின் பாவிப்பு  தமிழ் . எழுத்து முறை  என்பது  வேற  .  அது அன்று செய்யுளில் தான் இருந்தது .  அதில் , நேரடி அர்த்தத்தில் என்ன இருக்கிறதோ அதில் உள்ள ...நல்லது  , அற்றது ...என்ற   கவலையின்றி  அந்தச் சொல்  கையாளப் பட்டிருக்கிறது  . செய்யுள் தான் சொற்களின் முதல்  அரங்கேற்ற மேடையாக இருந்தது . செய்யுளை விளங்கிக் கொள்ள பண்டிதத் தமிழ் (தெரிந்திருக்க ) திறமை இருக்க  வேண்டும் . தமிழை முறையாகவும் கற்க வேண்டும் . அரசர்கள் அனைவருமே சபையிலே நிகழ்த்தி அசர வைத்திருக்கிறார்கள் . மக்களையும் தமிழை கற்கத் தள்ளி இருக்கிறார்கள்  .  கற்றவருக்கு மதிப்பு . புலவர்களுக்கு பொன் முடுச்சு  . ஒவ்வொரு சொற்களுமே பட்டை தீட்டி செழுமைப்படுத்தியே வருகின்றது .  சங்கம் வைத்த தமிழ் என்பது அதைத் தான் ....போல இருக்கிறது . தமக்குள்   மோசமாக   அடித்துக் கொண்டார்கள் . பழி தீர்த்துக் கொண்டார்கள் . ஆனால் , செழுமைப்படுத்துவதை ...கை விடவில்லை .  வென்றவர் ,தோற்றவர் பாகுபாடின்றி ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறன .  தொடர்ந்து கொண்டே இருந்தார்கள் . எளிமையாகவும் பல்வேறு விதமாகப் பயன்பட்டு பட்டி தொட்டியெல்லாம்  பட்டையைக் கிளப்பிக் கொண்டிமிருந்திருகிறது .  பழம் தமிழ் அழியாது செழுமையுற்று வளமை பெறறிருக்கிறது  

     சாண்டில்யனின்  நாவலில் வரும் அரச வம்சத்தவர் அனைவருமே   பர்ணசாலையிலே தமிழைக் கற்று புலமையுடனே திரிகிறார்கள்  .  கல்கியை விட  சண்டில்யனின் நாவல்களில் சங்க இலக்கியங்களை  அதிகமாகவும் அறியலாம் . ' காமம் ' மனித விஞ்ஞானம் தான் என்று எழுத்தாளர் வேறு  கூறுவதையும்  அறிகிறோம் . ராமன் ஒவ்வொரு தடவையும் வாசிக்கிற     போதும்   அந்தந்த  சரித்திர காலத்திற்கே போய் விடுகிறான் ." நீ சரித்திரக்கதைகளையே எழுது" என அவரைப் பிடித்து தள்ளியவரே ,   கல்கி   ....என்றும் கூறப்படுகிறது . இருவரிடமும் தமிழனின் சிறப்பைக் கூற வேண்டும் என்ற ஓர்மம் ஓங்கிக்  கிடக்கிறது .  சிங்களம் வெறும் இரவல் மொழியே . மொழிகளுக்கிருக்கிற வளமை இருக்கிறது தவிர , இதைப் போல விரிந்த பார்வை  பரந்த வளமை கிடையாது . இலங்கையில் சிங்களவர்களை பெரும்பான்மையாக்கியவர்கள் ஐரோப்பிய நாட்டினர் தாமோ ?  என்று அவன் சந்தேகப் படுகிறான் . அவர்களுள்ளும் அந்த விதையை  , பயத்தையும்  ஊன்றி விட்டிருக்கிறார்கள் . இன்று இனப்படுகொலை நிகழ்த்துவதற்கு அன்றே   பிளான் போடப்பட்டு விட்டது . இவர்கள்   புத்தரின் , தேரர்களின் காலடிகளில் அல்ல , காலனியரின் கால்களிலே விழுந்து கிடக்கிறார்கள் . எல்லா மதவாதிகளிகளும் ஒரு விதத்தில்   அடிப்படைவாதிகள் தாம் . அவர்களால் வேற மாதிரி குரைக்க முடியாது . " என்னருமைத் தாயகமே , தமிழீழ அன்னையே உன்னை விலங்குகளிலிருந்து விடுவிக்க   முடியாத    கையறுநிலையில் இருக்கிறேனே "  ...ராமனுக்கும்  மனக்குரலை அகற்றும் வழி தெரியவில்லை .

   இரவல் போரிலே  , இரவல்  இனப்படுகொலையிலே ...போரை  வென்று ,   இன்று  வெட்கமில்லாது இறுமாப்பு கொள்கிறார்கள் .  அற முறைகளில் கிடைக்காத வெற்றி  , வெற்றியே இல்லை .  இந்த  மாதிரியே   ' இரவல் புரட்சி '  என்று சொல்லியே  கழுகும் ,   முல்லை இயக்கத்தை அடித்து படுகொலையும்    செய்து விட்டது  .  செய்ய வைத்து விட்டார்கள் .   ஒரே மூலம்  .

     வளமை தமிழில் மற்றயவையை  (மொழிகளை ) விட அதிகமாகவே இருக்கிறதால்  ,  6ம் நூற்றாண்டில் உருப் பெறத் தொடங்கிய சிங்கள மொழிக்கும் தமிழ் மேல் பொறாமையும் கூட  வளர்திருக்கிறது . காலனிக் கூட்டமும்  , பலஸ்தீனர்களை ஒழிப்பது போலவே தமிழர்களையும் அடக்குகுமுறைக்குள்ளாக்கி  இலங்கையையும்  இஸ்ரேலாக்கும் திட்டத்தை  தொடர்கிறது . இரவல் புரட்சி கடைசியில் , இவர்களுக்கே   தீமையையும் கொண்டு வரப் போகிறது . காலனிக் கூட்டத்தால் , வழங்கப்பட்ட ஆயுதங்களால் ( தடை செய்யப்பட்டவற்றை வழங்கியவை இவையே  ) இரண்டு முறைகள் இனப்படுகொலைகளை வேற நிகழ்த்தி தமிழரை கதற அடித்து  விட்டிருக்கிறார்கள் . சிங்கள இளைஞர்களிலும் பகுதறிவு இயக்கம் இல்லாததால் ...தமிழ் இனம்  பாதிக்கப்பட்டுக் கொண்டே செல்கிறது . இலங்கையில் ஒரு வகை நாஜிய ஆட்சியே  நிலவி வருகிறது .

    பொய்மைகளைக்  கூறி , கூறி உண்மையாக்கிற காலனிகள் ,  இந்த நாட்டையும் ஜனநாயக நாடு எனச்   செப்புகின்றன . (சப்புகின்றன) .

     காலனிக் கூட்டம் , என்றுமே ஜனநாயக உரிமைகளில் ஆர்வம் கொண்டவை  கிடையாது  . நாஜிய அரசாங்களைக் கட்டி எழுப்புவதிலே நாட்டம் கொண்டவை .  பிறகொர் சந்தர்ப்பம் வாய்க்கிற போது  , கனடா போன்ற கூட்டிலே  கிடக்கிற  ஒன்றை    " ஜனநாயகம் இல்லை " என்று  கத்த வைத்து அடித்து தரை மட்டமாக்கவும்   செய்பவை  . முடியுமல்லவா . " ஈராக்   "எல்லோரும் நேரடியாகப் பார்க்கிற  நல்ல   உதாரணம் .  உண்மையான ஜனநாயகம் சிறுநாடுகளில் உண்மையாக  மலர்ந்து காலனிக் கூட்டத்திற்கு தடைகள்  சிறுக விதிக்கிற போது சில மாற்றங்களைக் காணலாம் . தென் அமெரிக்காவின் (இவர்களின் ) கடன் பொறிகள் பற்றிய பாடங்கள் அவசியம் படிக்க வேண்டியவை . படியாத போது எந்த தெளிவும் அடையப் போவதில்லை தாம் . அன்று நாம் ...வெறித்தாஸ்  தமிழ் வானொலி மூலமாகத் தான் செய்திகளை கேள்வியுற்றோம் . மற்றையவை   (செய்தி நிறுவனங்கள் ) தூர தேசத்திலேயே கிடந்தன .

    பயிர்ச் செய்கையில் இருக்கிற சில நுட்பங்களையுமே கையாளாததால் "  போகம் "  ஆக பரிமளிக்காது  போய் விட்டது .  மனம்  சோர்ந்து போனார்கள். தோல்வியைச் சுமப்பது என்பதும் மன அழுத்தம் தான் . செயல்களில் அறியாமையுடன் இறங்கக் கூடாது என்பதற்காக தான் கால் வைத்து அனுபவப் பட்டவர்களது புத்தகங்களை  வாசிக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்  . ஒவ்வொருவரையும் எழுதச் சொல்லியும் கூறுகிறார்கள் . பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்  ஏதோ எழுதி சமர்பித்து வாரதும் இருக்கவே செய்கிறது .  புத்தகமாக்கிறதை அரசாங்கமே செய்ய வேண்டும் . மானிய வழிகளிலும் உதவி செய்ய வேண்டும் .   எமக்கு அரசாங்கமே இல்லாததால் எல்லாமே ததிங்கிணத்தோம்  . சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எந்த அமைப்புமே எமக்கு எஜமானாக முடியாது . எனவே ,  எந்தக் காலத்திலும் சிங்கள அரசாங்கம் எம்முடைய அரசாங்கமே இல்லை .   படுதோல்வியாக இராது சராசரி தோல்வியாக  நிலவுகிற போது ...அழுத்தம் என்ற நிலைக்குச் செல்லாது . அப்படி இல்லாததால்  பாதிக்கப் பட்டார்கள் . கடைசியில்  , வாங்கிய கடனை திருப்பி அளிக்க முடியவில்லை . இயல்பானவர்களுக்கு நேர்ந்திருந்தால் வட்டியுடன் செலுத்த வேண்டிருந்திருக்கும் . வர்த்தகரின் கொடை மனம் .  " பரவாயில்லை  , திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை " என்று தெரிவித்தார் . தோழர் செந்தில் தான் தூதராக இருக்கிறாரே . கிராமத்தில் சாதனைகளைப் புரிந்த " யமகா நீர்ப்பம்பி" யை மானிப்பாய் முகாமிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள் . வெற்றி அடைந்திருந்தால் . அராலியிலே இன்னொரு காணித்துண்டில்  இன்னொரு பயிரைச் செய்கை பண்ணி வீறு கொண்டு எழுந்திருப்பார்கள் .  விடுதலைக் குழுக்களின் அரசியலில் பிரச்சனைப் பூக்கள்  வேறு  பூக்கத் தொடங்கி இருந்தன . நல்லது நடக்க புத்திசாலியாக இருந்திருக்க வேண்டும் .  அதிலேயும்  இருக்க  தவறி விட்டு விட்டார்கள் . கெட்டதன் அறுவடையை வெட்டி தானே ஆக வேண்டும் .  சகோதரச் சண்டித்தனம் வளர்ந்து  ....தோழர்களையே  சந்தேகிக்கும் அளவுற்கு  இயக்கங்களில்  குழம்பி ,   சகோதர படுகொலைகளுமே பிறகு நடந்து போய்  விட்டிருந்தன . இதற்கு ரஸ்யப் படைப்புக்களை மாஸ்கோ பதிப்பகம்  அந்தந்த நன்நாடுகளின் தாய் மொழிகளில்  பதிப்பதை நிறுத்தி விட்டதும் ஒரு காரணம்  என்றும் சொல்லலாம் . புரட்சியில் புடம் போட்ட அவர்களது அனுபவங்கள்  ...பிரச்சனைகளிற்கு தீர்வுகளையும் கூறிக் கொண்டிருந்தன . நம்மவர்களுக்கு  பட்டி மன்றம் நடத்தத் தான் திறமை  இருந்தது தவிர, அடிப்படை அரசியல் அறிவு இருக்கவில்லை .  அவ் எழுத்தாளர்களின் தொடர்புகளும் நேரடியாகவும் நிலவி இருந்திருந்தால்  ...நம்மாலும் வெளியே வந்திருக்க முடியும் அல்லவா . வாய்ப்பில்லா விட்டால் என்ன  ? ,  வாய்ப்புகளை " நாமும்  கட்டிக் கொள்ளலாமே "  என்ற    சிந்தனை  நமக்கிருக்கவில்லை . காலனி நாகரிகத்தில் ...சீரழிந்தும் போய் கொத்தடிமைகளாக  வேறு இருக்கிறோம் . நமது சமூக சிந்தனைகளும் இவர்களது  சட்டவேலிகளுக்குள்ளேயே .... வளர்க்கப் பட்டிருக்கிறது .

**************
     ரஸ்யா  , புரட்சிக் கருத்துக்களைக் கொண்டு செல்வதற்காக 90  வீதமானவர்களையே படிப்பறிவுள்ளவராக்கி இருந்தார்கள் . முதியோர் கல்வித் திட்டம் எல்லாம் ரஸ்யர்களாலே ஏற்படுத்தப் பட்டவை . வறிய மக்களுக்கான கல்வித்திட்டங்கள் அங்கேயிருந்தே விரிவாக பூத்திருக்கின்றன .  மலையகக்கல்வியும் , தமிழ்க்கல்விக்கு எதிரான சிங்களச் சட்டங்களும்  , உரிமைகள் அற்ற போக்குகளும்  காலனி நாடுகளின் கல்வியும் எத்தகைய நிலையில் இருந்தன என்பதைக் கூறுகின்றன .  அவர்களின்  சாதாரணத் தோழர் கூட " வீரம் விளைந்தது " என நூலைச்  சிறப்பாக எழுதுகிறார் . நம்மவர்க்கோ இங்கே வாசிப்பறிவு இரண்டு வீதமாகவே பாதாளத்தைத்   தொட்டு இருக்கிறது  . நாம் தோற்கவில்லை .  நம் செயற்பாடுகள் போதியதாக இருக்கவில்லை என்பதே உண்மை . நம் அருமைத் தலைவர்கள் வேறு  சீன வழி  , ரஸ்ய வழி என பிரிந்து திக்குத் திசை தெரியாமல் காட்டில்  அலைகிறார்கள் . தமிழர் மத்தியில் ரஸ்ய மொழி எழுதப் பேசத் தெரிந்தவர்கள் சிறிய வீதத்தில் இருக்கிறார்கள் . அவர்களை ஒன்றிணைக்க வேண்டாமா ? . மீண்டும் சோவியத் அமைப்பு வீறு கொண்டு  எழ (வே ) வேண்டும் . ரஸ்யா , இன்று ஒரு சமரச அரசியலுக்கு வந்திருந்தாலும்  , அங்கே புரட்சி 2 ...எழ முடியாத   ஒன்றல்ல . மாறவே முடியாதவை என்று உலகில் ஒன்றுமே  இல்லை  . அன்றைய  யாழ்ப்பாணத்தில் ( மாகாணத்தில் )  விடுதலைச் சூழலில் தற்போதைய கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் சிலர்  யாழ்த் தோழர்களுடன் அங்கே திரிந்து  அவர்கள் நம்பிக்கைகளையும் விதைத்து  கொண்டுமிருந்திருக்கிறார்கள் . இன்று ,  அவையே  நம்பிக்கைக் கீற்றுக்களாக ஊடுருவியும் இருக்கின்றன .     " நம்  சிங்கள இனத்தில் " பகுத்தறிவு இயக்கம் " இல்லை  .  எழ வில்லை . நாம் நிச்சியமாக அதைக்கட்டிக் கொள்வோம் " என்கிறார்கள் .  அவர்களுடைய  குழுவில்  ... கூட  இன்னமும் கட்டிக் கொள்ளப்படவில்லை  தான்  , தவிர , சில தோழர்கள் தங்களுக்குள் கட்டிக் கொண்டு  விட்டிருக்கிறார்கள் . " வடக்கு , கிழக்கைப் பிரிக்க வழக்கைப் போட்டது முட்டாள் தனம் , அது  பூர்ஸ்வா சிந்தனை "  என்று கருத்தையும் தெரிவிக்கிறார்கள் . நாடு கடத்தப்பட்ட  அவர்கள் ... தற்போது செயலற்றிருக்கலாம் . ஒருநாள்  ....செயல்படுவார் . மாற்றுவார் . எல்லாத்தையுமே மாற்றுவார்கள் .

   இன்றைய நாளில் , ராமனுக்குத் தீடீரென ஒரிரவு கனவும் ஏற்பட்டது .  அதில் , அவன் ,சுனில் , காமினி , சந்திரன் கோபு தோழர்கள் ஒரே அறையில்  படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்  . காலை விடிய முதல் கண் விழிக்கிறான் . கட்டில் இருந்த இடத்தில் பாட்டா ஒரு சோடி செறுப்பு ...கிடக்க கட்டிலைக் காணவில்லை .  அதிலே கோபி படுத்திருந்தவன் . நிலத்தில் காய்ந்த கறுப்பு  ஒயில் சிந்திய அடையாளம் . என்ன நடந்தது ? . காமினியைக் காணவில்லை . திகைப்பாக இருக்கிறது . அவசரப்பட்டு முடிவுக்கு வரக் கூடாது .  ஆனால் , அடையாளம் ? ...சிங்கள இளைஞர்கள்  திருந்துற ஜென்மங்கள் இல்லையா ? எங்களுடன் சேர்ந்து பழகிறதும் நடிப்பா..? சுனில் இருக்கிறான் . ஒரிருவரால் , உண்மையானவனும் சந்தேகிக்க நேரிட்டு  விடுமோ ? .  கோபி காணாமல் ஆக்கப் பட்டவன் தானோ ?   .  நிதானமில்லாது  ஓடும் மனம் . இருவரும் சேர்ந்துகட்டிலைத் தூக்கிச் சென்றிருப்பார்களோ,  திரும்பி வாரதுக்குள் தவறுகள் நிகழ்ந்து விடுமோ ?.." .... கனவும் குழப்புகிறது . தலையே குப்பைக் கூடையாகிப் போய் விட்டது .
  நம்மாலும்  , வடக்கு , கிழக்கு மாகாணங்களில்   கை விடப்பட்டு இருக்கிற  குளங்கள் வாய்க்கால்களை திருத்தவா முடியாது ?  கூட்டுக் கைகளைச் சேர்த்தால்  இலங்கை அரசு , பிச்சை கேட்டு   கடனைப் பெற்று ...கடன்பொறியில் சிக்கி செய்ய வேண்டியும் இருக்காது .  . நம்மாலே செப்பனிட்டு விட முடியும் . அங்காலே , .... பகுதறிவு இயக்கம் செயற்பட வேண்டும்  . செயல்பட்டு  ....புத்தர் சிலைகளை நடாமலும்  , நிலவுறுகிற அமைதியை குழப்பாமலும்  ...இருந்தாலே போதுமே . பிரார்த்திப்போம் . காலனிக் கூட்டம் ,  அதைச் செய்ய அனுமதிக்காது என்பதும் தெரியும் .  பகுத்தறிவு இயக்கம் சிங்களப் பகுதியில் வீறு கொண்டு எழுவது , எழுப்பப்படுவது  தான் ஒரே வழி . கடைசி வழி  .  அது நிகழ்கிற போது  பதர்களை  ஊதி எறிந்து விடும் . தமிழருக்கு பிரஜா உரிமை ' அளிக்கும் ' உரிமை வேறு சுயமாகவும்  இருக்க வேண்டும் . நாம் கேட்கும் ஒவ்வொரு உரிமையும்    தவறானதல்ல என்பது மாறிய பிறகு அவர்களுக்கு   நன்கு  புரியும் . கற்றாரைக் கற்றாரே காமுறுவார் ,  கலவரங்களில் கொலைகளைச் செய்த காடையரை அல்ல .  13ம் திருத்தச் சட்டம் என்று தான்  இலங்கையின் சமாதான ஒப்பந்தத்தைச் சொல்கிறார்கள்  . 13 என ...ஏற்கனவே இருந்ததில் தான் சமாதானத்திற்காக சில திருத்தங்களைச் சேர்த்திருக்கிறார்களா  ?  எதை எதிர்த்துப்  பேசுகிறார்கள் . இந்தியா சேர்த்ததையா , அல்லது  ஏற்கனவே இருந்ததையா ? .  இந்த சொல்லாடல் (  பிரிப்பு  ) ஒரு குழப்பத்தை  விளைவிக்கவில்லையா  ? . சிந்திக்க வேண்டிய விசயம் .  இவற்றை எல்லாம் நமக்கும்    தெளிவுப் படுத்த  எமக்கு அச்சகங்களும் , பிரசுரங்களும் , புத்தககங்களும்   நிறைய அளவில் வெளியாக  வேண்டியும் இருக்கிறது .

<இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.