கோபி  பகலில் அந்த சாக்கு கட்டிலில் செம தூக்கம் போட்டிருந்தான் . காடு வெட்டி விவசாயம் செய்கிறவர்கள் பயன்படுத்துற மடிக்கிற மரக்கட்டில் அதிசயமாக அவன் வீட்டிலும் ஐயாவால் பயன்பாட்டில் இருக்கிறது . யாழ்ப்பாணத்தில் சுகமான தூக்கம் வருகிற ...இதை யார் பயன்படுத்துகிறார் ? . அவரை சுத்தத் தமிழர் என சமயத்தில்   நினைப்பான் . ஐயாவிடம் அவன் விடுத்து விடுத்து கேள்விகள் கேட்க முடியாது . ஒருநாள் ரகுவிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்து  அவன் மூலமாக  பேட்டி எடுக்க  வேண்டும் . தனக்குள் சிரித்துக் கொண்டு நெட்டி முறித்தான் . அம்மா காதலித்து ஐயாவை முடித்தேன் என்று சொல்வார் . அதுவும் நினைப்பில் வந்தது . அம்மாட வலது கை சின்ன மாமா தான் . அவருக்கும் தம்பிக்கும் இடையில் வயசு வித்தியாசம் நாலு, ஐந்து இருக்கும் . அது தான் ... அக்கா சொன்னால் கேட்பவராக இருந்தார் . அடுத்த ஆண்டில் பிறந்திருந்தால் வில்லனாக அல்லவா இருந்திருப்பார் . ஆனால் , அந்த காலம் இலக்கியக்காதலாக இருந்தது . இன்று இருப்பது போல இல்லை . அட அவனுக்கும் காதலுக்கும் வெகு தூரம் விடுங்கள் . ஐயாவை , அம்மா முதலில் விரும்பவில்லை . அம்மம்மா தான்  , அயலுக்குள் இருந்த அவரை  " " எடியே , இவன் பிரயாசைக்காரனாக இருக்கிறான்,  கட்டுவாயா ? " எனக் கேட்டார் . அம்மா " என்னாலே கறுப்பனைக் கட்ட முடியாது " என்று விட்டுப் போய் விட்டார் .

   பிறகு , அம்மா ஏன் கேட்டார் ? என்ற சிந்தனைகள் வரத் தொடங்கின . கவனிக்கத் தொடங்கினார் . ஐயா ஒரு விருத்தக் கட்டை . அம்மாவை  விரும்பிப் பார்க்கக் கூடியவரில்லை . இப்பத்தை இளைஞரைப் போல ...படிக்கிறேன் ...என கற்பதிலே காலத்தை விரயமாக்கவில்லை .  சுமாராகத் தான் படித்தார் . ஒருமுறை ( ஒ .லெவல் ) பரீட்சை எழுதினார் . அப்புறம் கடை ஒன்றை வைத்தார் . கொஞ்சம் பணம் சேர கடையை நண்பரிடம் கொடுத்து விட்டு காணி ஒன்றை வாங்கிக் கொண்டு ...விவசாயத்தில் காலை பதித்து விட்டார் . அவர்களுக்கு வீடு வளவு இருந்தது. வளவிலே தோட்டமும் செய்யத் தொடங்கி விட்டார் . அவருடைய தங்கச்சிக்கு சீதனமாக வீடும் வளவும் போனது . " அண்ணர் வளவிலே தோட்டம் செய்வார் " ஒப்புக் கொண்டால் தான் கட்டுவேன்  என்றிருக்கிறார் . பாசமலர் அத்தை . அவரும் நல்லவர் . சிரித்துக் கொண்டு சம்மதித்தார் . இப்படி ஒரு கூட்டுக் குடும்பம் .

  அம்மாவுக்கு இந்த பிணைப்பு தான் பிடித்தது . இன்று வரையில் அம்மாவும் அத்தையும் நல்ல சினேகிதியாகத்  தான் இருக்கிறார்கள்  . இந்த மரத்தை துரத்தி பிடித்து தான் காதலிக்க வேண்டி இருந்தது என்று கூறி சிரிப்பார் . அத்தை சப்போர்ட் . தனிய போய் கடையிலே கதைக்க ...வெட்கம் . மாமாவை இழுத்துக் கொண்டு போய் " அது ...நல்லா இல்லை , இது நல்லா இல்லை .." என்று களேபரப்படுத்தி  ...மினக்கெடுத்தி... கடுப்பாக்கி  ...வாங்கி வருவாராம் . ஐயாவுக்கு  விளங்கவில்லை . அத்தை தான் " அண்ணே , உன்னை விரும்புறாளடி.." என்று தெரியப்படுத்த .....வேற என்ன ,  சுபம்  ! தானே . அம்மா , " பிருந்தாவனமும் நந்தகுமாரனும் .... " என்ற பாட்டு எல்லாம்  நல்லா பாடுவார் . ஐயா ரசிக்கிற ஜென்மமில்லை . ரசிப்பது போல நடிப்பார் . பிள்ளைகள் ரசிக்கினமே போதாதா  , என்ன  .   ஐயா இரண்டு போகம் அறுவடை செய்த பிறகு சணலை போட்டு விடுவார் . இதுவும் எள்ளு போல வளரும் . பெரியளவு நீரிறைப்பு வேண்டியதில்லை . சணலை அறுவடை செய்வதில்லை . அப்படியே நிலத்திற்கு உழுது விடுவார் . இயற்கைப் பசளை . இவனுக்கு சணலை அறுவடை செய்து ...நூல் செய்ய வேண்டும்  என்று சிந்தனை இருக்கிறது . தென்னம்பொச்சிலிருந்து கயிறு திரிப்பது போல சணலும் திரிப்பதும் ...ஒரு தொழில் ! . திட்டங்கள் இருக்கிறது . ஐயா வீட்டிலே மாட்டுக் கொட்டில் கட்டியது போல பின் வளவிலே இளைப்பாறும் கொட்டிலும் அமைத்திருக்கிறார் . சாக்குக் கட்டிலில் அங்கே என்ன சுகமான தூக்கம் வருகிறது . பகல் தூக்கத்திற்கு சிறப்பான இடம் . பாளை , விறகுகளும்  மழையில் நனையாமல்  சேகரித்து  வைக்கிறது அங்கே தான் . இவனுக்கு பாம்பும் வந்து சுருண்டு கிடக்கும் என்ற  பயமும் இருக்கிறது . ஐயா எத்தனை பாம்பை வயலிலே கண்டிருப்பார் . அவருக்கு  பாம்பும் ஒரு நண்பன் .

 இரண்டு கட்டில்கள் அங்கே இருக்கின்றன . நண்பர் ஆரும் வந்தால் அங்கே இருந்து தான் கதைத்துக் கொண்டிருப்பார்கள் . பெண்டு பிள்ளைகள் தான் வீட்டிற்குள்ளே ...இருந்து கதைப்பவர்கள்.  அதிலே  ஒரு சுதந்திரமும் நிலவுகிறது . வயல் தொழிலாளி . எவருக்குமே மணமான பிறகு , நட்பு வட்டம் குழம்பி விடுகிறது . சுளிபுரம் ஒரு கிராமம் . எல்லாரும் தெரிந்தவர்கள் . குழப்பாது ....நீளவே காணப்படுகிறது . இளைப்பாறும் கொட்டில் . அந்த அமைப்பு முறை அவனுக்கு நிறையவே  பிடித்திருக்கிறது . ஐயாவோட ... வயலுக்கு  ,தோட்டத்திற்கு ...என இழுபடுறவன் . தோட்டப் பாத்தியில் தக்காளி ,கத்திரி , வெண்டி ,பூசணியும் , வளவில்..., வாழை , கீரை  , மரவள்ளி    என  எல்லாமே வைத்திருக்கிறார்கள் . அத்தைக்கு ஐந்து பிள்ளைகள் , இவர்கள் வீட்டிலே ஒண்ணே ஒண்ணு ,கண்ணே கண்ணு ...என அவனும் , தங்கச்சி சாந்தாவும் . பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பது வீட்டாரின் கனவு . அவர்கள் மட்டுமில்லை அயலவர்களும் இந்த இனப்பிரச்சனை காலத்திலும்  பசி இல்லாமல் வாழ்கிறார்கள் . இரத்த ஜூலை ஏற்பட்டது . இனப்படுகொலை ஒன்று நிறைவேறியது . அது சுண்டி விட்ட நாதம் ...அடங்கவே இல்லை .  சிங்கள கலவரம் பலி வாங்கிறது போல " வேலை  , வேலை .." என கொழும்பிற்கு சென்றவர்களில் அரைவாசிப்  பேருக்கு மேலே பலி எடுத்து விட்டது . ' கலவரம்  என்பது ' சரியான வார்த்தையல்ல . அது , ஒரு பகுதியின் மிலேச்சத் தனமான , ரண்டமான தாக்குதல்  ! . பெடியளுக்கே தெரியாத சூத்திரமாக விடுதலைப் போராட்டம் கவிந்து விட்டிருக்கிறது . ரகு ,   திடுமென " டேய் , தாமரையிலே சேர்ந்து போராட வேண்டுமடா ! , நீயும் வாராயா? " என்று கேட்டான் . ஒன்றாக திரிகிறவர்கள் . எப்படி அவனுள் அந்த எண்ணம் ஏற்பட்டது .அவனுக்கு மூளை வேலை செய்யவில்லை . " அவன் சென்றால் ஐயாவோட வலது கை ஒடிந்து விடும் " என்ற சிந்தனை நெஞ்சிலே தடையாக எழவே செய்தது .

ஒரு நாள்,  அவனுடைய சைக்கிளில் தொற்றி  , கரைக்கு வந்தவன் வள்ளத்தில் ஏறப் போறதைப் பற்றி ஒரு சொல் கூறியிருக்கவில்லை . பாவி ,  வள்ளத்தில் ஏறுற போது    " நீயும் வரப் போறாயா ? " கேட்டான் . கோபி , அங்கே நின்ற அயலுக்க இருக்கிற குமாரிடம் சைக்கிளைக் கொடுத்து " ஐயாட்ட கொடுத்து விடு . நான் இயக்கதிற்கு போறேன் ' என்று சொல்லி விடு " என்று  ஏறி விட்டான் .  

ரகுவும் , கோபியும் ஒரு வருசம் கழித்தே ஒன்றாய் திரும்ப தளத்திற்கு வந்து …இறங்கினார்கள் . ஐயா கறுத்துப் போயிருந்தார் . ஐயா பெரிதும் தனித்துப் போனார் . உடம்பிலே உயிர் இருக்கும் மட்டும் ஓடும் என்றாலும் கோபி இருக்கிற போதே துடிப்புடன் ஓடக் கூடியது . வீட்டிலே , அவன் இல்லாத சோகம் குமைந்து கொண்டிருந்தது . ரகுவின் அம்மாவும் , அவன் தங்கை விஜயாவும் அடிக்கடி வந்து அங்கேயும் உயிர் வளர்த்துக் கொண்டிருந்தார்கள் . ” உவன் அழைத்துப் போவான் …என்று தெரியாது அக்கா …” என்று கூறி தேற்றி வந்தார் .ரகுவிற்கு இரண்டு அண்ணைமார் இருந்தனர் . எனவே அவன் வீட்டிலே இடி விழுந்த நிலை நிலவவில்லை . ஒரு வருசம் என்பது நீண்ட காலம் . ஆறு மாசத்தில் பயிற்சி முடிந்து விடுறது இருந்தது .இவர்கள் இருவரும் முகாமில் வேலை செய்வதும் , உப பயிற்சியாளர்களாகவும் …என நீண்டு விட்டது .

ஐயா , அவனை கட்டிக் கொண்டு அழவில்லை . அவர்க்கு கண்ணீர் காய்ந்து விட்டது .அம்மாவும் , சாந்தாவுமே ” அண்ணே , அண்ணே … ” என்று கண்ணீர் விட்டனர் .ரகுவும் , விஜயாவும் கூட வந்திருந்தார்கள் . ” ஐயா , என்னிலே தான் தவறு . கடைசி நேரம் இவனை அழைத்திருக்கக் கூடாது .ம்! , முதலே சொல்லி இருந்தால் வந்திருக்க மாட்டான் . என்ர வாய் …பழக்க தோசத்தில் கேட்டு விட்டது . நான் கேட்டு , ‘ இல்லை ‘ என்று சொல்ல இவனுக்கு மனம் வரவில்லை . யோசியாமல் வந்து விட்டான் ” என்றான் . அவர் இருவரையும் பார்த்தார் . ‘ இங்கே இருந்திருந்தால் இந்த பொலிவுடன் இருக்க மாட்டார்கள் ‘ என்ற எண்ணம் அவருள் ஓடியது . தோளிற்கு மேலே வளர்ந்து விட்ட பிள்ளைகள் . தவிர , இனப்படுகொலை நின்று விடவா … போகிறது ? , இரண்டு , மூன்று …என தொடர்ந்தும் நடைப் பெறப் போகிற அரசியல் . பெருமூச்சு தான் அவரால் விட முடிந்தது .

இயக்கத்திலும் அரசியல் பிரிவுக்கும் , இராணுவப் பிரிவிற்குமிடையில் பிரச்சனைகள் நிலவின . இரு துருவம் போல விலகல் அதிகரிப்பது போலவும் பயமுறுத்தியது . அரசியல் பிரிவு தான் பெரும் முடிவுகளை தீர்மானிப்பவை . இவர்கள் இருவரும் இராணுவப் பிரிவினர் . அரசியல் பிரிவிலும் நண்பர்களைக் கொண்டவர்கள் . ” என்னடா, இப்படி இருக்கிறதே ” என்று கோபி கமலியுடன் கவலைப் பட்டான் . ” டேய் , நாங்கள் ( ரகுவும் ) குத்தகைக்கு காணி எடுத்து தோட்டம் செய்யலாமா ? அனுமதிப்பீர்களா ? ” என்று கேட்டான் . ” தாராளமாக செய்யலாம் ” என்று யதார்த்த நிலமைப் பார்த்து கூறினான் . வீட்டு தோட்டத்தில் ஐயாவுக்கு உதவி செயிறதோடு , இவர்களுக்கும் ஒரு வேலை போல குத்தகைக்கு சிறு நிலம் எடுத்தார்கள் . பயிற்சி உடலை நல்லாவே பலப்படுத்தி திடப்படுத்தி இருந்தது . இருவருக்குமே வீட்டு வழியால் விவசாய அறிவு இருந்தது . கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்த ஆறுமுகம் ஆசிரியரின் வழிகாட்டலில் முழுதாகவே இயற்கை முறையில் , முதலில் மரவள்ளியையே பெருமளவில் வைத்தார்கள் . தோட்டப் பயிர்களையும் வைத்தார்கள் . வீட்டிலே கலவை முறை . ஐயாவுக்கு மறுபடியும் தோழனானான் . ஆனால் , இராணுவம் தேடல் போட்டால் …ஓட வேண்டியிருக்கும் . இயல்பு நிலை குழம்பி விட்டது . சில மனித மிருகங்களால் அனைவரின் நிம்மதியும் குலைந்து விட்டது . கோபியின் ஊரை , கிழக்கு மாகாணத்தை எல்லாம் அரசாங்கம் ஆள முடியாது . ஐயாவிற்கும் விளங்கிறது தான் . ஆனால் , என்ன செய்வது ? .

இளைப்பாறும் கொட்டிலிலிருந்து ஐயா இரவிரவாக அவனிடம் விளக்கம் கேட்டது அவனுக்கு அழுகையையே ஏற்படுத்தியது .மாணாக்கனிடம் ஆசிரியர் வகுப்பு எடுக்கிறார் . .அவருடைய அனுபவம் எங்கே ? ” ஐயா , எங்களுடைய முதன்மையான பலவீனம் பயம் தான் . பல்வேறுபட்ட எண்ணங்களில் பயம் பல உருவங்களில் வெளிப்படுகிறது . ஒரு பய விதையைக் கூட ஊன்றி வளர விட்டால் விருட்சமாகி விடும் .நாம் வளர மாட்டோம் . வளர்ச்சிகள் ( முன்னேற்றங்கள் ) தடைப்பட்டு விடுகிறது . இப்ப , இந்த அரசாங்கம் தமிழ் பெடியள்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறதே . இன சனத் தொகை பிரகாரம் எமக்குரிய வீத அரச ( அமைச்சு வழி ) வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும் . அதோடு எமது சுய பொருளாதாரமும் ( தனியாக) கட்டப்பட்டிருந்தாலே முன்னேற்றகரமாக வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் . இரண்டுமே இல்லை . காலம் விரயமாகி வீணாகவே போகிறது . பதிலுக்கு நாம் துணிவை கையில் எடுத்தால் அச்சங்கள் ஒவ்வொன்ராக விலகி விடும் . அதுக்கு தான் போராடுகிறோம் . ஐயா , நாம் , எம் சிறு புகைப்படம் கூட உறவினர்க்கு கொடுக்க யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும் ” என்றான் . ஐயா உயிர்ப்பில்லாமல் சிரித்தார் . எமக்கு எதிரி இந்த அரசா ? , காலனி அரசா ( பிரிட்டன் வகையிறாக்கள் )…என்றே தெரியவில்லை . பிரிட்டனாக இருந்தால்… போராட்டம் வெல்லப் போவதில்லை . அமெரிக்கா , கனடாவுக்கு ரஸ்ய வெறுப்பு அதிகம் . ஒவ்வொரு நாடுகளுமே ஒவ்வொன்றை மோசமாக வெறுக்கிறது . மூன்றாம் போரிற்கு துடித்துக் கொண்டிருப்பவை . இந்த இலட்சணத்தில் சிறிய நாடு …கணக்கிலே எடுக்கப்பட மாட்டாது . இலங்கை இரண்டு நாடாக பிரியவில்லை . தவிர , அனைத்துமே அறம் கொண்ட நாடுகளும் இல்லை , போலியானவை . அவர் எதையும் சொல்லி அவனின் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பவில்லை . இந்தியா , இன்னும் வல்லரசாக வரவேண்டும் . உருப்பெற்றால் தான் … முரண்பாடுகள் வளர்ந்து , வளரும் , ரஸ்ய வெறுப்பு என்பதும் முரண்பாடு தான் , இந்த நாடுகளின் வேர்கள் இலங்கைக்கு நீள்வதை வெட்டி விடும் . தனிமைப் படுத்தப் பட்டால் … செத்த பாம்பு . பிறகு , அது இனப்படுகொலை பற்றியே …நினைத்துப் பார்க்க முடியாது . ஐயா , உயிர்ப்பில்லாமல் சிரித்தார் .

இங்கே வெறும் பயமூட்டுவதாக மட்டும் இல்லை . அபாயகரமாக இருக்கிறது .நல்லவர்கள் இருந்தால் ஊர் வாழும் .கெட்டவர்களே பெருகிக் கொண்டிருந்தால் …அமிழும் . எப்படி பார்த்தாலும் முதல் பலவீனம் ‘ பயம் ‘ தான் என்று கோபிக்கு புரிகிறது . நம்பிக்கையூட்ட வார்த்தைகள் தான் இல்லை . .ஐயா , நாம் விவசாயத்தைப் பார்ப்போம் . உலகமே அமிழ்ந்தாலும் உணவு தான் வாழ வைக்கும் . உணவை எந்த பயங்கரவாதத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது . வவசாய அறிவியல் நம்மிடமும் இருக்கிறது . உந்த உலகத்தின் வேர்களை வெட்டிக் கொண்டு நம் வழியில் செல்வோம் . உந்த இலங்கை எங்களிடமும் பிச்சை கேட்கட்டும் . உவங்களை விட நாம் தாம் சுதந்திர மனிதர்கள் . அவனுடைய கோபம் அவருக்கு புரியாததில்லை . தமிழ்ச் சினிமா மாதிரி தனிக் குழு இராணுவமாக சண்டித்தனம் புரியும் படையினரை அடித்து துவசம் பண்ணலாம் என்று சிறு பிள்ளைத்தனமாக நினைக்கிறார்கள் . அவருக்கும் எப்படி எதிர் கொள்வதென்று புரியவில்லை . பிரெஞ்சுப் புரட்சி போல… பிரான்சிலே ஏற்படுத்தினால் தான் ….ஆகா ! , அங்கிருக்கும் இலக்கியவாதிகளுடன் தொடர்புகள் கொண்டு …, அங்கே இருந்து தொடங்க வேண்டுமோ ? . ஆனால் , அது மீளவும் காலனிய வேற்கள் விட்டும் , இங்கே இருக்கிற மாதிரி ஜனாதிபதியைத் தலைவராகவும் கொண்ட முட்டாள் தனத்திலும் வீழ்ந்திருக்கிறதே . பிரான்ஸ் தூரமாக இருக்கிறது மட்டுமில்லை , போர்வெறி பிடித்த நாடாகவும் தற்போது இருக்கிறது . ரஸ்யப் புரட்சிக்கு களமாக இருந்த நாடு . அந்த கள நிலை இப்பவும் இருக்கவே செய்யும் . ஐயா உலகப்புரட்சியாளராக சிந்திக்கிறார் . அவருக்குப் பிறந்தவனில்லையா ,அது தான் கோபியையும் குழப்புறது போல . வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போல இருந்தது . மண்ணைக் கொத்துற போது சுற்றிவர யாரும் இல்லாத போது …அட்டகாசமாக சிரிக்க வேண்டும் . முடிவெடுத்துக் கொண்டார் .

கோபியும் , ரகுவும் பின்னேரங்களில் வலக்கம்பரைக்குப் போகிறார்கள் . ரகு தான் இந்த குத்தகை ஐடியாவை வெளியிட்டவன் . ” நமக்குத் தான் வேலை இல்லை . குத்தகையிலே வைக்கிறது … தான் நம்வேலை . இந்த தொழினுட்பக் கல்லூரியில் படிக்கிறவர்களுக்கும் ஒரு விசயம் புரியிறதில்லை பார் ” . அங்கே பழைய நண்பரான சேகரையும் சந்திக்கிறவர்கள் . அவன் தொ . கல்லூரியில் அப்ப படம் வரைஞர் கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தான் . ” படித்தும் , இங்கே வேலை … எடுக்க முடியாது போல இருக்கிறதடா ? ” மூக்கால் அழுது கொண்டுமிருப்பான் . அப்ப , அவர்களுக்கு புரியவில்லை . இப்ப , புரிகிறது . ” அவன் ஒரு முட்டாள் என்று . அவன் மட்டுமில்லை நிறைய பேர் அப்படி தான் இருக்கிறார்கள் . அவன் அந்த வகுப்பிற்குப் போற போதே வேலை எடுத்து விட்டான் …என்பதை தெரியாதவனாக இருக்கிறான் . வேலை என்பது வெற்று காகிததிற்காக செய்யப்படுவதில்லை . கமலியிடம் சொல்லி இருந்தால் அவனுக்குத் தேவையான கருவிகளை தோழர்களைக் கொண்டே செய்து கொடுத்திருப்பான் . நிலவளவைப் பாடத்திற்கு கொக்குவில் வீதீயில் மட்ட அளவை செய்தார்கள் . அதே சமயம் இந்த சுளிபுரத்து வீதிகளையும் வாசிகசாலைக் குழுவை கையில் போட்டுக் கொண்டு , சுளிபுரத்து வீதிகளை அளவை செய்து நிலவுயர வரைபை தயாரித்திருக்க வேண்டும் . குளம் , குட்டை ,வாய்க்கால் எல்லாம் இருக்கின்றன . பரந்த வேலையாகச் செய்திருக்கலாம் . விவசாயத்தைப் போல இவையும் மக்களிற்கு உபயோகமாக இருந்திருக்கும் . அடுத்த கட்டமாக சிரமதானப் படலம் நடந்திருக்கும் . விவசாயமும் மற்ற இடங்களை விட …ஒருபடி முடுக்கி நடை போட்டுக் கொண்டிருக்குமடா ” .அவர்கள் பேசுவது …கிட்டதட்ட சரி தான் . பார்வை எப்பவும் விரிந்ததாக இருக்க வேண்டும் . கிராமப்புறங்களில் சிலர் அந்த வழியில் நடை போடுபவர்களாகவே இருக்கிறார்கள் . அராலியில் பாரதி வாசிகசாலை கிளியண்ணர் , அவ்விடத்தில் ஒரு எளிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் . அவ்விடத்துப் பெடியள்களை படித்தவர்களாகவும் விளையாட்டு , மற்றும் வேலைகளில் புத்திசாலியினராகவும் விளங்க அவர் தான் காரணம் . அங்கே உள்ள குலனையில் மழைச் சகதியாக இருந்த ஒழுங்கைப் பாதையை …அவ்விடத்துப் பெடியளைக் கொண்டே திருத்தி அமைத்தது கலையரசி வாசிகசாலைக்குப் புதிதாய் வந்த பெடியள்ககள் தான் .இப்படி வட்டுக்கோட்டை , வடமராட்சி எல்லாம் கணிசமான பேர்கள் இருக்கிறார்கள் . சுடுகாடாய் யாழ்ப்பாணம் போனாலும் மீள எழவே செய்யும் . கட்டி எழுப்புறவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் . சமூகமும் படிக்க வேண்டிய பாடம் .

ஒவ்வொரு தமிழ்ப்பிரதேசத்தின் படங்களையும் சேகர் போன்றவர்களால் ...வரைய முடியும் . கிராம ,பட்டின , நகரப் என ஊர்ப்படங்களை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள் . துல்லியமாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளையும் அதில் குறிப்பிட முடியும் .  வெளிநாட்டவர் ஏப்பம் விட்ட பகுதிகளையும் சுட்டிக் காட்ட முடியும் . சுதந்திர உணர்வு நிலைத்து இருக்கிற போது ஒரு காலத்தில் கீயூபாவைப் போல நம்நிலத்தையும் நம்மால் மீட்டெடுக்க முடியும் . போர்க்லாண்ட் தீவை பிரிட்டன் வைத்திருக்கிறது . அணிசேரா நாடுகளின்  கொள்கை , ' காலனி கையகப்படுத்தி இருக்கிற பகுதிகள் விடுவிக்கப்பட வேண்டும்  ' என்பது   ! .ஆர்ஜன்டீனா நினைத்தால் ...ஒருகாலத்தில் அதனை பெற்று விடவே முடியும் . கனடா , அமெரிக்கா ,. அவுஸ்ரேலியா ...கூட  பெரிதாகவிருந்தாலும் கூட அவை காலனிய நாடுகள்  தாம் . அவற்றில் இருக்கிற சுதேச மக்களும் அதிக உரிமைமைகளை பெறவே முடியும் .

" என்ன அப்பிராணியாய் இருக்கிறே . அணுகுண்டை ...கண்டுபிடித்து வைத்திருக்கினம் . போட்டு நாட்டை அழித்துக் கொள்வினம் தவிர உரிமைகளைக் கொடுக்க மாட்டார்கள் " என்ற வாதம் இருக்கிறது தான் . ஏலியனுக்கும் பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்  .  எல்லாம் மாறும் . யப்பானின் மேல் ...போட்டார்கள் தானே . அழிந்தா விட்டது . கேவலமுகம் தானே வெளிப்பட்டது . காலனிய நாடுகள் எல்லா சமாதான வரைபுகளையும் செயலிழக்க வைப்பதிலே  குறியாய் இருக்கின்றன . ( இலங்கையில் இனப்படுகொலையை நிகழ்த்தியது . இலங்கை ,இந்திய ஒப்பந்தத்தை   தடைபடுதுறது  இந்தியாவல்ல , இவர்கள் என்பது புரி ய கனகாலம் எடுக்காது ) .

ஒருநாள் பலத்த விமர்சனத்திற்கு வரும் .  கனடாவில் பழங்குடியினரைச் சேர்ந்த ...ஒரு தலைவர் " பார்ளிமெண்ட் " நச்சு வாதங்களை ஏற்படுத்துற இடம் " என்று பகிரங்கமாக  கூறி இருக்கிறாரே . நேர்மையானவர்களின் வாரிசுகளிலிருந்தும்  நச்சுகளும் பிறக்கின்றனவே ...என்பதைக் காண்கிறோம் . வெளிப்படுகிறார்களில்லையா ? . காலம் மாறும் . கம்யூன் போல ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி செயலில் இறங்க வேண்டும் . காலனி ஆட்சியிலிருந்து விலகிய பிறகும் நாம்  அவர்கள் நாகரீக அடிமைகளாகவே தொடர்ந்தும் இருக்கிறோம் . அதிலிருந்தும் வெளியில் வரவே    இல்லை . தமிழில் தமிழ்த் தாவரவியல் பெயர்களைக் கொண்ட ஒரு பாட நூலை தயாரித்து விட்டாலே ...நம்மால் தமிழில்   தாவரவியல் பாடத்தை நடத்தி விட   முடியும் . ஒரு அலகை ...ஏற்படுத்தவா முடியாது . முடியும் . நாகரீக அடிமைகளின் கட்டுப்பாட்டில் கிடக்கிறோம் . விடுபட வேண்டும் . போராட்டம் தோற்றாலும்  ,  போராட்ட அனுபவம் வேண்டும் தான் என்று  ஐயாவிற்கு புரிகிறது . அதனால் தான் அவர் கோபியை கண்டிக்கவில்லை .

  சேகரைப் போல இருக்கக் கூடாது  என்று நினைத்திருக்கிறார்கள் . போற போது சில்லாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ' ஈழப்பொருளாதாரம் ' பற்றிய கட்டுரைகளை  எழுதி மனிதன் என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்ததை அறிந்திருந்தார்கள் . அரசடி வாசிகசாலைத் தலைவர்  அதில் குறிப்பிட்ட இயற்கை எரிவாயு தயாரிப்புக் கிடங்கை ஏற்படுத்தி வீட்டு சமையலுக்கு பயன்படுத்தி வந்தார் . அவரைப் போய் இருவரும் சந்தித்தார்கள் . சேகரையும் கையோடு கூட்டிச் சென்றிருந்தார்கள் . அவன் செயிற  வேலையாய் இருக்கலாம் .  ஏற்கனெவே சில காணித்துண்டுகளை அளந்து ஊர்ஜிதப்படுத்த மீள அளந்திருக்கிறான் . ஒரிருவருக்கு வீட்டுப் பிளான் கீறி ...அனுமதி பெற்று கட்ட குடுத்திருக்கிறான். எப்பன் அளவு வேலை செய்து தானிருக்கிறான் . சேவா வேலையில் அதை விரித்திருக்க ...அறிவியல் காணப்படவில்லை தான் . சமூகமும் வேலைகள் பற்றி அறியவே வேண்டியிருக்கிறது . அவன் அளவுகளுடன் ஸ்கெட்ஜை வரந்து கொண்டான் ."  எரிவாயு  வர ஒரு மாதம் கூட எடுக்கும் . பொறுமையாக கையாள வேண்டும் . " என்று கூறியதை நினைவில் வைத்துக் கொண்டார்கள் . ஊரில் பொறியியல் படித்த  இன்ஜினியர் குணபாலுவை  சந்தித்து தொடர்பில் வைத்துக் கொண்டார்கள் . முதலில் ரகு வீட்டிலே கிடங்கை சீமேந்து கற்களால் சிறிய அளவில்  எழுப்பினார்கள் . அரசடி தலைவரும் வந்து பார்த்து திருப்தி தெரிவித்த போதே  சந்தோசமாக இருந்தது .

  ஐயா , இப்ப தளர்ந்து போயிருந்தார் .  கோபியை நினைத்து பெருமைபடவும் செய்தார் . பொறுப்பான பையன்  . தங்கச்சி மேல் பாசத்தை வைத்திருக்கிறான் . ஒரு துளி பெரு வெள்ளமாகும்  . ஒரு அலகு  பிறகு கட்டிடமாகிறது .  வலக்கம்பறை தேர்முட்டி தான் அனைவரின் கூடுமிடமாக இருந்தது . இரணுவப்பிரிவிற்கு ( பயிற்சி பெற்றவர்களிற்கு ) பொறுப்பாக குகன் இருந்தான் . இருந்தாலும்  அரசியல் பிரிவு கமலி தான் அவன் குரு ; ஆசிரியர் ...எல்லாம்  .செயல்படுறது குகனின் கீழ் தான் .விடுதலை பெரிய கனவு . கால் வைப்புக்கள்  . இருளுமா , வெளிக்குமா என்பதெல்லாம் தெரியாது . எதிர் பாராத செலவுக்கென கட்டடக்கலைஞர் வீடு கட்டுற போது முழுத்தொகையில் இரண்டு வீதம் ஒதுக்கி வைப்பார் . மதிப்பீடுற போது அதையும் சேர்த்து தான் செலவு கூறப்படும் . அதே போல கமலி  "  எமக்கும் தெரியாத புதிய பிரச்சனைகள் இயக்கத்தில் எழலாம்  .அதற்கும் தயாராக இருக்க வேண்டும் " என்பான் . அங்கிருக்கிற எழுத்தாளர் பாலன் விடுதலைப் பற்றிய கதைகளை எழுதி வந்தார் . அரசடி வாசிகசாலையில்  கிடைக்கும் கையெழுத்துப் பிரதியில் வாசித்து வந்தான் . ரகு இவனைப் போல வாசிப்பவனில்லை .இவன் " நல்லா எழுதி இருக்கிறாரடா " என்று சொல்லுறதை வாசிப்பான் . அவர் எழுதிய " கொலை " என்ற சிறுகதை கோபியை திகைக்க வைத்திருந்தது .  " தயவு செய்து யாருமே அயலில் கண்ணில் படக் கூடிய இடத்தில் கொலைக்கருவிகள் எதையும் வைத்திராதீர்கள்  ...." என்ற தொடக்கத்துடன்  தொடங்கிறது . மனித மனம் இருக்கிறதே அது இருண்ட மனம் . சிங்களவருக்கு படைகள் , அதிகாரங்கள் ...இவை எல்லாம் கொலை ஆயுதங்கள் அயலிலே இருக்கின்றன . இவர் அதிலே அழுத்திக் குறிப்பிட்டது விவசாயத்தில் பூச்சிக்கு அடிக்கும்  மருந்துகளை . மனிதன் , நல்லதை யோசித்து நல்லவனாக வாழ முயற்சிக்கிற ஒரு குதிரையையும்  ,இருண்ட குணங்களை  உடைய ஆழ்மனக் குதிரையும் கொண்டு இழுக்கப்படுற ஒரு வண்டி . அதுவே அவனுக்குரிய நடத்தையை தீர்மானிக்கிறது . அதனாலே ஒரு நிலையில் கடவுளாகவும்  , ஒரு நிலையில் மிருகமாகவும் முகத்தை வெளிப்படுத்துகிறான் .அலெக்சாண்டர்  குடிமயக்கத்தில் பேச்சு தடித்தபோது பக்கத்திலிருந்த ஈட்டியுடன் அவன் உயிரையே போர்க்களத்தில் காப்பாற்றிய நண்பன் மேல் பாய்ந்து விட்டான் . அவன் ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தான் . இவனுக்குப் பக்கத்திலே ஈட்டி இருந்திரா விட்டால் அன்று அவன் இறந்திருக்க மாட்டான் . அசோகனுக்கு கெட்ட எண்ணங்கள்  ஆயுதங்கள் . பல சகோதரர்களைக் கொன்றான் .எம். ஜி .ஆரை எம் .ஆர் .ராதா சுட்டுக் கொல்ல முயன்றார் . இப்படியே தொடர்கிறது ....                 கடைசியில்  ,  கொலைக்கருவிக்கு நண்பர் , உறவினர் எல்லாம் தெரியாது ....என்று முடிகிறது .

 இவன் முதல் வேலையாக இளைப்பாறும் கொட்டிலில் கூரான கத்தி ...என சந்தேகப்படும் எல்லாப் பொருட்களையும் அகற்றினான் . ரகு , அடிக்கடி  அதிலேயே வந்து சந்திப்பவன் . கோபிக்கு தன் மேலே சந்தேகம் வந்து விட்டது . அவன் இயக்கத்தில் பெருமளவில்  சுடுகருவிகள் புழக்கம் இருக்கவில்லை ." சமூகப் பிரச்சனைக்களுக்கு மரத்தால் வடிவமைக்கப்பட்ட பொம்மைத்துவக்குகளையே சாக்கால் சுத்திக் கொண்டு போறோம்" என்று கமலி தெரிவித்திருந்தான் .

 மரவள்ளி நல்லாய் வந்தது . இயற்கைப் பசளையால் தள ,தளவென இருந்தது . " தம்பி ..." என்று அழைத்து   வந்த இருவருக்கு  இரண்டு செடிகளை இழுத்து கிழங்குகளைக் கொடுத்து விட்டு ஒரு செடியை ரகுவிற்கும்,அவன் வீட்டிற்கும்  இழுத்து கிழங்குகளை எடுத்துக் கொள்ள  , ரகு " டேய்  , நீ      போ . வீட்டிலே எனக்கு ஒரு வேலை இருக்கு " என்று கழன்று விட்டான் .                

அன்று அவன் மட்டுமே வலக்கம்பறைக்குச் சென்றான் . ” கமலி , எனக்கு காலையிலே ஒரு கனவு வந்தது . படபடப்பு இன்னமும் அடங்குதில்லை ” என்றான் . ” சொல்லு ” என்றான் . ” எனக்கு முன்னால் ஒரு ஸ்டூல் கிடக்கிறது . அதிலே ஒரு கைத்துப்பாக்கி கிடக்கிறது . தோழர் ஒருவர் எனககு முன்னால் என்னவோ பேசிக் கொண்டிருக்கிறார் .நான் தீடீரென எடுத்து அவனை டுப் , டுப் ‘ என சுட்டு விடுகிறேன் . எனக்கு அந்த எண்ணமே இருக்கவில்லை . கை துறு , துறுத்து சுட்டு விடுகிறது . என்னடா இதற்கு அர்த்தம் ” என்று கேட்கிறான் . ” தொடர்ந்தும் ஏதாவது கண்டாயா? …” கேட்கிறார் . ” ரகு , கூறுகிறான் . துவக்கை எடுத்து பார்க்கிற போது தவறுதலாக தட்டுபட்டது .. என்று சொல் ‘ என்கிறான் . நான் தானே சுட்டேன் ” பரிதாபகரமாக முகத்தை வைத்திருக்கிறான் .

" நம்மவர்களிடம் ஆயுத வறுமை கிடக்கிறது . துவக்கு வாங்க முடியாத நிலை .வாய்ப்பில்லை .கற்பனையை நிஜம் என எடுக்க வேண்டியதில்லை .சுடுறது பெரில்லை .சுட்டவன் அந்த மனவுளைச்சலிலிருந்து வெளிய வாரது தான் பெரிய விசயம் . உனக்கு இரண்டுமே இல்லை .மனதைப் போட்டு வீணாக குழப்பிக் கொண்டிராதே . எம். ஜி ..., ரஜனி  படத்தில் வந்த ஒரு காட்சி போல நினைத்துக் கொள்  . இன்றைய சினிமா , சிறுகதைகள்  ...இப்படித்  தான்  நடக்க வேண்டும் என்கின்றன விட்டுத் தள்ளு ." என்றான் . நல்ல காலம் ரகுவுடன் பகிரவில்லை .கனவில் அவன் சுட்டது ரகுவைத் தான் அது தான் அவனுள் முள்ளாய் குத்திக் கொண்டது . கமலியே , ஆற்றுப்படுத்துறான் . அவனால் அப்படியே சொல்லவும் முடியவில்லை . வீட்ட வந்தவன் தடி , பொல்லு  ,கல்லு  ( செங்கல் ) எல்லாம் எடுத்து கொட்டிலிலிருந்து எடுத்து தூரமாக போய் வேலியோடு போட்டான் . வேண்டாமய்யா .  மனித மனம் இல்லை  , விலங்கு மனம்  . புத்தர் , எப்படியய்யா புத்தரானார் ? . அவனுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது .

‘ அரசியல் பிரிவிற்கு , இராணுவப்பிரிவு முக்கியமான நிகழ்வுகளை தெரிவித்து விட்டே இறங்க வேண்டும் ‘ என்ற விவாதம் விலாவாரியாக நடந்து கொண்டிருந்தது . இவர்களுடைய வள்ளத்தில் , பயிற்சிக்கு அனுப்ப தோழர்களை வைத்திருக்கிற போது , இராணுவப் பிரிவுத் தலைவர் ஒருவர் ,தாம் தெரிவு செய்த தோழர்கள் சிலரை ஏற்றி அனுப்பி விட்டிருந்தார் . இது உள் பிரச்சனை . வெளிப் பிரச்சனை ஒன்றும் கிடந்தது . அவ்விடத்தில் , இராணுவம் , அரசியல் பிரிவு தோழர் சேர்ந்து இயங்கி வார ரஞ்சிதம் குழு என்றொரு பிரிவும் இயங்கி வருகிறது . உண்மையில் அது ஒரு பிறிம்பான பிரிவே கிடையாது . இந்த இரு அமைப்பிலும் கட்டப்பட்டிருந்த ஒரு மத்திய பிரிவு . தாக்கம் விளைவிக்கக் கூடியசமூகப் பிரச்சனைகளை கையாண்டு வருகிறது . தாமரை இயக்கமும் வடக்கு , கிழக்கு மாகாணம் எல்லாம் பரந்து கட்டப்பட்ட விரிந்த குழு . ஒவ்வொரு பிரதேசமும் அதற்கென தனித்துவ தன்மைகளைக் கொண்டிருந்தன . திருமலை , மட்டகளப்பு , போல , முல்லைத்தீவு , வவுனியா இல்லை . கிளிநொச்சி போல யாழ்ப்பாணம் இல்லை . இந்த நிலமைகளில் அனுபவமில்லாத பல்கலைக்கழக மாணவர்கள் கட்டமைப்பு வடிவத்தை விலகி நடப்பதாக விமர்சினங்களை வைத்து வந்தன .

தெரியப்படுத்தல் , அனுமதிப் பெறுதல் , ரிப்போர்ட் சமர்பித்தல் …எல்லாம் கட்டாயப்படுத்தப் பட்டன . தாமரையிலும் லெனின் கட்சியையைப் போல செம் ,வெண் பிரிவுகள் கருத்துப் போக்கில் எழுந்து கொண்டிருந்தன . தோழர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை .வவுனியா , முல்லைத்தீவு ,கிளிநொச்சியில் “சண்டியர்” என்ற குழுவினர் இருக்கவில்லை . யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு பிரதேசக் கூறுகளிலுமே இயக்கங்களை விட கூடுதலாகவே இருந்தன . வன்முறைக் கும்பல்கள் . கூத்தில் , கொட்டைக்காட்டு அரிச்சந்திர மகாராசன் வேடமிட்டவன் அடங்காச்சண்டியனாகி விட்டான் . பன்னாகத்தில் அலவாங்கு . சங்கானையில் சிலர் . சுன்னாகத்தில் ஒன்று . யாழ்ப்பாணத்தில் போயா , பொன்ராசு தொட்டு வேறும் பல தீவிரமான குழுக்கள் . அசிட் , கத்தி , துவக்கு எல்லாம் மறைவாக வைத்திருந்தவர்கள் . இவையை விட சமூகப் பிரிவிலும் கடலுடன் சம்பந்தப்பட்டவர்கள் …மீன்முள்ளு , திருக்கைவால் …வைத்திருந்தன . மலரவன் ,இளங்கதிர் …போன்ற தோழர்கள் , ‘ ரஞ்சிதம் குழு ‘ .சமூகப்பிரச்சனைகளில் தாந்தோன்றித் தனமாக தலை போடுகிறது . மரண தண்டனைகளை நிறைவேற்றுகிறது என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள் . ” படிநிலை தலைவர்களிற்கு கட்டாயம் கீழ் படிந்தே ஆக வேண்டும் ” வலியுறுத்தப்பட்டது . பிரச்சனைகளைப் பேசுகிற எவருக்குமே ஈகோக்களும் முளைத்து விடுகின்றன . தோழமை காணாமல் போய் விடுகிறது .

ரஞ்சிதம் ஒன்றும் முட்டாள் தனமாக இயங்கவில்லை . படித்தவர்களிற்கு சண்டியர் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை . சமூகப் பிரச்சனைகளில் அவர்களின் பிரசன்னம் அதிகமாகவே இருந்தன . தமிழ்ச் சினிமாவின் ரவூடீஸிசம் தான் . சினிமாவில் கதாநாயகனே …புரிகிறான் . கத்தரிக்காயை வெட்டுறது போல கொலைகள் . நாமும் ரசிக்கிறோம் . மென்மை சிறிதளவும் பலனளிக்காது போகும் சந்தர்ப்பங்கள் . தோழர்களோ சிறுபிள்ளைகளாக இருந்தார்கள் . பயிற்சி பெற்ற தோழர்கள் தோற்றத்தில் சிறிது மாறி வந்தார்கள் . பயமின்றி வழி நடத்த…. சில தலைவர்கள் தேவைப்பட்டார்கள் . ரஞ்சிதம் அங்கே சென்றது . அதையே நிறைவேற்றியது . மல்லிகைக் கிராமத்தில் யாழ்ப்பாணச்சண்டியர் ஒருவரின் மகனின் கொட்டத்தை ( அது சிறிதோ ,பெரிதோ சலசலப்பை ஏற்படுத்தி வந்தது )அடக்கியது . வேறே என்ன , ஓரிரவு கிராமத்திற்குள் நுழைந்து வீட்டை தனிமைப்படுத்தி விட்டு , இருட்டடி கொடுத்தது . கிராமத்துக்கு ஏக சந்தோசம் தந்தையின் தீவீர குணநலம் மகனிடம் காணப்படவில்லை . எனவே எதிர்வினை ஆற்றவில்லை . தவிர , சாதாரண குடிமகனாக மாறி மக்களில் ஒருத்தனாகியும் விட்டான் . கிராமத்து தோழரைக் காண்கிற போது பகிடியாக சலூட் அடிப்பான் . வன்மத்தை அவன் வைத்திருக்கவில்லை . சிலர் உடம்பு முழுதும் விசமானவர்கள் . இலங்கைப் படைகளைப் போல …காத்திருந்து பழி வாங்குபவர்கள் . அச்சமயம் , கெட்ட அமைப்புகள் எல்லாம் பைகோர்த்து விடுபன . யாழில் செல்வாக்கான சண்டியனை சரித்த போது ( இதையும் தாமரையே செய்தது ) , எம்டன் சினிமாவில் வாரது போல , சோழ மகாராசனின்.. போல செத்த வீடு கோலாகலமாக நடைபெற்றது . இன்றைய காலத்தில் யாழ்ப்பகுதியை வாள்வெட்டுக்கள் , போதைப் பொருட்கள் , மதுவகைகள் …மூழ்கடித்துக் கொண்டிருக்கவில்லையா ? . எல்லாம் எங்கிருந்து வருகின்றன ?. படைமுகாம்களிலிருந்தே வழங்கப் படுகின்றன . வெளிப்படையான எதிரிகளுடன் எப்பவும் வாழ்ந்து விட முடியும் . வஞ்சகர்களுடன் வாழவே முடியாது .

இன்று , எம்மவர்களிலும் சில ,  ஜே.வி .பி ..இன் இந்திய எதிர்ப்புக் கொள்கையை  எடுத்து விட்டிருக்கின்றன . ஜே . வி .பி ..ற்காகவே பிரேமதாஸா கொல்லப்படுகிறார் . மற்றவை ...தெரிந்தவை தானே ! . சமாதான வரைபான  மாகாணவரசு தீர்வை விட  ...உச்ச தீர்வு கிடையாது . தாந்தோன்றித்தனமான இலங்கையரசின் செயற்பாடுகளிற்கு இந்தியாவைக் குற்றம் சாட்டி சிதறிக் கிடக்கும் முட்டாள் தனம் எமக்கு வேண்டாமே ! . மனநோயாளியான ஐரோப்பிய மண்டலம் எந்த சமாதான வரைபையும் நிறைவேற விடுபவையல்ல . அபகரிப்பு என்ற சொற்றொடரை விட சமாதானவரைபுகள் பெறுமதி மிக்கவை . எல்லாம் தெரிந்திருந்தும்  அவையே வந்து தீர்க்கும் , தீர்த்து வைக்கும்  என்று நம்புற நம்மவர்கள் ..., இலங்கைக்கு கை விலங்கிட்டு வைத்திருப்பவை ,  எமக்கும் விலங்கிட முயல்வதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் . இனப்படுகொலையை நிகழ்த்திய ஆயுதங்கள் அனைத்துமே பெரியவர்வாள் வழங்கியவை தாமே . இரட்டைக் கோபுரம் எங்கே சரிந்தால் எமக்கென்ன ! சரிகிற போதெல்லாம் வேற நாட்டியங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா? . பச்சோந்திகளை நம்பி உள்ளதையும் இழக்கவும் வேண்டுமா? .   இன்றைய எரிபொருள் விலையேற்றமும் கூட பெரியவர்வாளின் கருணையால் ஏற்படுத்தப்படுபவை அன்றோ ! .

  கொட்டைக்காட்டில் , அரிச்சந்திரனை பிடிக்க முடியவில்லை.அவனுடைய மச்சானைத் தான் பிடிக்க முடிந்தது . மற்ற சகாக்கள் மாறி விட்டார்கள் . பதுங்கி விட்டார்கள் என்பதே உண்மை . ஊரும் சப்போர்ட் . அவர்களுக்கு இவர்கள் எம். ஜி .ஆராகவும் இருக்கிறார்கள் .  சமூகக் குறைபாடு . இவற்றிற்கு தண்டனை  அளிப்பதால் ...எல்லாமே  சரியாகி விடாது . புனர்வாழ்வளித்தல் , அரசியல் நீரோட்டதிற்கு கொண்டு வாரல் ...எல்லாமே வேண்டியிருக்கின்றது . எந்த புற்றில் என்னென்ன பாம்புகள் இருக்கிறதோ ? . ரஞ்சிதம்  , அவனை புல்தரையில் ட்ராக்டரில் கட்டி சிறிது தூரம் இழுத்தது . பிறகு , ...விடுவித்து விட்டு , புத்திமதிகள் கூறி , அவர்களின் உறவினர் ஒருவரை விழிப்புக்குழுவிற்கு தலைவராக நியமித்து விட்டு வெளியேறியது . வடிவேலுச் செயல் போல இல்லையா ? .  இவனை " முகாமிற்கு வந்து முகத்தை காட்ட வேண்டும் என்றில்லை , நாம் இவனை கவனித்துக்  கொண்டிருப்போம் " என்று கூறப்பட்டது . வறிய பகுதியான அவ்விடத்தில் தாமரை அபிமானிகளும் இருந்தார்கள் . மக்களுக்குத் தெரிந்தவர்கள் . " கட்டாயமாக உனது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் " என்று ஆசிரியர்களான அவர்கள் சொல்கிறபோது ஒரு அழுத்தமும் விழுந்து விடுகிறது . மறைவாக இருக்கிற அரிச்சந்திரனே படிக்க வைத்து விடுவான் . பிடிபடாத சண்டியர்களால் வன்முறையும் ஒருபுறம் தொடர்ந்தபடியே இருந்தது . சாவேற்சேரியில் இவனுடைய சகா ஒருத்தன் ஒரு ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்று விட்டான் . அவனையும் அவ்விடத்து அமைப்பால் பிடிக்க முடியவில்லை .  பிடிபட்டிருந்தால் ....மரண தண்டனையே நிறைவேற்றப்பட்டிருக்கும் . தாமரைக்குழுவில் மரணதண்டனை பிரச்சனை  . " நாம் யார் தண்டனை கொடுப்பதற்கு "  என்ற வாதம் . சண்டியர் கொட்டம் அங்கங்கே காணப்பட்டுக் கொண்டே இருந்தது . பலர் உறங்கு நிலைக்கு போய் விட்டார்கள்  என்பதே ஒரு வெளிப்பு . சண்டயர்களிடம் செல்கிற சமூகப்பிரச்சனைகள் இவர்களிடம் வர விழிப்புக் குழுவூடாக தீர்த்த ( நெறி  ) முறை ... நல்ல அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தின . தூற்றுவார் தூற்றட்டும்  ...எல்லாத் தூற்றல்களும் கண்ணபெருமானுக்கே ..என இவர்களும் நடை போட்டுக் கொண்டிருந்தார்கள் .

  கோபியும் ரகுவும் அரசியல் குழுவோடு சேர்ந்து விழிப்புக்குழுக்களைக் கட்ட  சென்று கொண்டிருந்தார்கள் . பிறகு கூடுற கூட்டதிற்கு அவ்விடத்தைச் சேர்ந்த இரு தோழர்கள் பிரதிநிதியாகச் சென்றால் போதுமானது . அவனுடைய அயலில் அவர்களும் சென்றிருக்கிறார்கள் . இரவு நேரம் நீளமாகியே விடுகிறது . சாமம் கழிய திரும்பி வார போது காணிக்குச் செல்ல முடிவதில்லை . மாசத்தில் , இந்நிகழ்வுகள் ஓரிரு நாள்களே  ஏற்பட்டன . ஒரு வருசமாக இவன் இல்லாது சமாளித்தவரால் சமாளிக்கவே முடிந்தது . ஐயா அவன் வரவில்லை என்பதைப் பற்றி ஒரு சொல் சொல்லுவதில்லை . கண்டிப்பதில்லை . ஐயாக் குறித்து ' பாவம் ' என்று பரிதாபப்படுவான் .

ரகுவீட்டார் விஜயாவிற்கு மணம் பேசிக் கொண்டிருந்தார்கள் . ரகு கோபி வீட்டிற்கு ஓடி வந்தான் . ” என்ன , தம்பி , என்ன விசயம் ? ” அம்மா அவன் பதற்றத்தைப் பார்த்து கேட்டார் .

” அம்மா ” என்று அழ ஆரம்பித்து விட்டான் . கோபிக்கும் ஒன்றும் புரியவில்லை .” என்னடா சொல்லன்ரா “என்று உலுக்கி கேட்டான் . ” விஜயா பூச்சி மருந்தை குடித்து விட்டாளடா ” என்று சொன்னான் .” டேய் அப்பவே சொன்னேனடா .இயற்கை வழியை பயன்படுத்தடா . இதெல்லாம் கொலைக் கருவிகளாடா .கையில் எட்டக் கூடிய இடத்தில் வைக்காதே . நீ கேட்கவில்லை ” கத்தினான் . ” தம்பி கோபப்படாதே . ரகு நீ ஏன் இங்கே ஓடி வந்தாய் . விஜயா எப்படி இருக்கிறாள் ” . கெட்டச் செய்தி வரக்கூடாது என்று கோபி வேண்டாத தெய்வம் இல்லை . . ஏன் குடித்தாள் ? பரீட்சையில் தோல்வியா , சண்டையா புரியவில்லை . சாந்தாவைக் கண்கள் பார்த்து , இவள் செய்திருந்தால் …ஐயோ தாங்க முடியாதே . ” வாடா நீ வீட்டிலே இருக்க வேண்டும் . நானும் வாரேன் . ” என்றான் கோபி . ” அம்மா , அவள் கோபியைத் தான் கட்டுவேன் ‘ என்கிறாள் .எங்களுக்கே தெரியாது . ஒரு சொல் சொல்லி இருக்கலாம் . மருத்துவர் ஒருவர் அயலுக்க இருந்ததால் ,உடனடியாக ஏதோ மருந்து கொடுத்து தாக்கத்தைக் குறைத்து விட்டாராம் . தற்கொலை நினைப்பு நல்லதில்லை . . மறுபடியும் செய்ய முயலலாம் . அப்ப காப்பாற்ற முடியாது போய் விடும் “‘ என்கிறார் ” .

" டேய் கோபி ,உங்களுக்கிடையில் ..."  அம்மா முதல் தடவையாய் அவனை சந்தேகத்துடன் பார்த்து கேட்டாள் . " ஐயோ அம்மா  எங்களை யாருமே கட்ட மாட்டார்களம்மா . நாம் கட்டலாமா என்றது கூட எங்களுக்கே தெரியாதம்மா . கமலியைத் தான் கேட்கணும் . டேய்  , என்னடா  இதெல்லாம்  " ரகுவை உழுக்கினான் . " " மச்சான் எனக்கும் தெரியாது . அலுப்பு பிடிச்சவள் என்னிடமாவது சொல்லி  இருக்கலாம் . இப்படி செய்து போட்டாளே " என்று கரைந்தான் . " அம்மா , ஏலுமான வரையில் தேற்றப் பார்க்கிறேன் . வாடா போவோம் " என்று  அவனுடைய சைக்கிளில் பறந்தான் .  சாந்தாவும் தன் சினேகிதிகளுடன் விரைந்தாள் . அம்மாவிற்கு  , உவளும் ரகுவை மனதில் வைத்திருக்கிறாளோ ?  என்ற கேள்வி உள்ளே எழுந்தது . கோபி " மருந்து வாங்காதே ஐயா "  என்று இயற்கை  ...ஆசிரியர் கூறியது மாதிரியே மருந்துகளை தயாரித்துப் பயன்படுத்தப் பார்க்கிறான் . அந்த  துவக்கு கற்பனைக்குப் பிறகே தீவிரமாக இருக்கிறான் . இரு வீடுகளுமே நல்ல மாதிரி பிழங்கிறவர்கள் . எல்லோருமே ரகு வீட்டிற்குச் சென்று விட்டார்கள் . சோர்வாக கட்டிலில் விஜயா படுத்திருந்தாள் . கோபி அவளுக்கருகில் சென்று  கையைப் பிடித்து தூக்கி கையில் வைத்துக் கொண்டு " ஏண்டி  , இப்படி செய்தாய் ? , உனக்கு என்னால் ஒன்றை மட்டுமே சொல்ல முடியும் . முடிக்கிறது என்று ஒன்று இருந்தால்  நீ தான் ! கமலியோடு கதைத்துப்  போட்டு உன்னட்ட தீர்மானமாக சொல்கிறேன் . எடியே எங்களை எல்லாம் யார் விரும்பப் போறார் , கட்டுவார் என்று நாம் உள்ளூர மாயிறது உனக்குத் தெரியுமா? சாந்தாவைப் போல நீயும் ஒருத்தி எனக்குத் தெரியாதா ? , ரகு என் தோழன் , நண்பன் . நான் உங்க வீட்டுப் பிரச்சனை என்றால் முன் வர மாட்டேனா ? , எல்லாரையும் காப்பாற்ற தானே நாமே விடுதலைக்கு போறோம் . இப்படி செய்யலாமா ? "  என்று கண்ணீர் வடிய கேட்டான் .

ரகு வீட்டாரும் சூழ நின்று பார்த்தார்கள் ." உவள்  மணம் பேசுறது பிடிக்கவில்லை என்று ஒரு வசனம் சொல்லி இருக்கலாம் . பேச்சி , இப்படி செய்து போட்டாளே . உவள் போட்டாள் என்றால் நானும் போயிருப்பேன் " என்றார் . " அம்மா " என்று விஜயா அணுங்கினாள் . " தைரியமாக இரடி . இனி இப்படி செய்யாதே . கடவுளை வேண்டு .அவர் நல்லதே செய்வார் . நம்பு " என்று மகளின் தலையை வருடினார் .

“அம்மா , எங்களுக்கும் எங்க நிலமை தெரியாது . கமலியைக் கேட்டால் தான் தெரியும் ” என்றான் . விஜயா அவன் கையை பிடித்திருப்பது தெரிந்தது . ஒரு கையால் அவள் தலையை வருடினான் .” உனக்கு யாரும் எதிரி இல்லையடி . நல்லதே நடக்கும் என்று நாமும் நம்புவோம் ” என்றான் . அவள் கண்களிலும் கண்ணீர் . அடுத்த நாள் ரகுவும் கூட வந்திருந்தான் . கமலி கூறினான் .” கல்யாணம் கட்டுறதுக்கு தடை இல்லை . முந்திய இயக்கம் அப்படி தீவிரமான விதிகளை வைத்திருந்ததாலே அதிலிருந்து பிரிந்து நம் இயக்கம் உருவானது . கழுகைப் போன்றதல்ல நம் இயக்கம் . நம்மில் பலர் கட்டிய தோழர்களாக இருக்கிறார்கள் . இப்ப கூட நீ விரும்பினால் கட்டலாம் . தோழராக இருக்கிற வரையில் போராட அழைப்பு வருகிற போது ….வர வேண்டும் ” . ” அரசியல் தீர்வற்ற நிலையிலே இருப்பதால் , நாம் எந்நேரமும் மனக்குழப்பத்திலேயே இருக்கிறோம் . விஜயாவிற்கு உடம்பு கொஞ்சம் தேறின பிறகு கட்டுறேன் . ‘ நான் அடிக்கடி வாரது நல்லாயிருக்காது . வீட்டிலேயும் அனுமதி கேட்கிறேன் . நாளை வா “என்று பிரிந்தார்கள் .

  இந்த குழப்பத்தால் தோட்டப் பக்கம்  போக முடியவில்லை . மரவள்ளியையையும்  போய் பார்க்க வேண்டும் . என்று நினைத்துக் கொண்டான் .  அரசாங்கங்கள் எப்படியும் இருந்து விட்டு போகட்டும் .விவசாயத்திலே காலூன்றுற உழைப்பை , பிழைப்பை யாராலேயும் தடுத்து நிறுத்த முடியாது .  அரசியல் , விவசாயிகளை  அணுகக் கூட முடியாது  . வெப்ப மூச்சுகள் வெளி வந்தன . ஊத்தைவாளிகள் ...தவறுகளை விட்டுக்கொண்டே போகிறார்கள் . அரச , தனியார் வேலைகளின் இருப்பவர்களின் வருவாய் அப்படியே கிடக்கிறது . இவர்கள் போடும் கூத்தால் பணவீக்கம் ...வாழ்க்கைச் செலவின் வரைபு கீழ்நோக்கி இறங்கிக் கொண்டே போகிறது . பசியும் , பஞ்சமும் , எரிபொருளும் ...., கூடுதலாக கேவலமான நிலவரியும் (சோலை வரி  - பிரச்சனையற்ற நாடுகளில் உள்ள உள்ளூராட்சி அரசாங்கங்கள்  அந்த கேடு கெட்ட வரியை வருஸா வருஸம் ஏற்றிக் கொண்டே போகின்றன  )  ஏறி கால்பந்தாடுகின்றது . காலனி ஆட்சியாளர் ஏற்படுத்தியது தான்  இந்த நில வரி . அரசியல்வாதியில் ...காலனி குணவம்சம் காணப்படுகிறது . சுதந்திர நாடுகளிலும் கூட அவன் இந்த வரியை கையகப்படுத்திக் கொண்டு விட்டிருக்கிறான் .

ஒரு விவசாயியை இவை எல்லாம் அசைக்கவே முடியாது . அவன் காலநிலைத் தவறுகளால் மட்டுமே பந்தாடப் படுகிறவன் . " உனக்கேன் வரி ? " கட்டப்பொம்மன் வசனமும் வேண்டி இருக்கிறது .

 பாரிஸில் இயற்கை கேடுகளுக் கெதிராக பதற்றமான கூட்டங்கள் ...  நடை பெறுகின்றன . போர் விமானங்கள் உமிழும் புகையைப் பற்றி  கணக்கிலே எடுக்கவேயில்லை  . குற்றவாளிகளே போடும் கூத்துகள் பெரும் தலைவலி . பெரிய தலைவர்கள் என்று கெளரவமளித்து வரவேற்பு உபசாரம் செய்வது ,  வேறு விரயச் செலவு , நாடுகள் பிச்சைக்கார புத்தியைக் காட்டுகின்றன .   எங்கட அரசு எனக்  கூறவே வெட்கமாக இருக்கிறது . இது பரந்த வலை அமைப்பு . இதையெல்லாம் அறுத்தெறிய  வேண்டும் . நாம் அனைவருக்குமாகவே போராடுகிறோம் . படையினர் நண்பர் என்று கூறுகிறார்கள் .யாருக்கு நண்பர் ? இந்த நிலமைகளில் எல்லாம் அகப்படாது தன்னிறைவாக வாழ்ந்தவர்கள் நாம் . எல்லாம் வேற்றுக் கிரகவாசிகள் ( ஐரோப்பியர் )  வந்த பிறகே ஏற்பட்டவை .

புத்தசமயிகளுக்கு நில ஆசையையை ஏற்றி விட்டு கழன்று விட்டார்கள் . அகன்று விட்டார்களா ? இல்லை தொடர்ந்தும் வெளியில் தெரியவே கட்டியே வைத்திருக்கிறார்கள் . அதற்குப் பேர் கூட்டணி . கூட்டணிகள் , சிங்கள , தமிழ் மக்கள் ஏற்படுத்துற சமாதான ஒப்பந்தங்களை நிறைவேற விடுவதில்லை . இவர்களாவது தாமாக ஏற்படுத்தி அதற்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை . அரசியலாம் . வெளிநாட்டில் நிகழும் தவறுகளுக்கு வரிகளை கட்டி விட்டால் போதும் …என்கிற மாதிரியான நழுவல் சட்டங்கள் . கனடாவில் ( பழங்குடியைச் சேர்ந்தவர் ) ஒரு அமைச்சர் இதற்கெதிராக குரல் எழுப்பினார் . ” பாராளமன்றம் நச்சுக்களை உருவாக்கிற தொழிற்சாலை . இனிமேல் தேர்த்தலில் நிற்க மாட்டேன் “என்று கூறுகிறார் . கடந்த காலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய விவகாரம் இது . இந்தியாவில் கூட அந்த கம்பெனி ஊழலில் புகுந்து விளையாடி இருக்கிறது . நெறியற்ற படிப்பு ….எல்லா குற்றங்களையும் செய்யும் .

காந்தி , படிப்பை விட்டு விட்டு விடுதலைப் போராட்டத்திற்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தது அதனால் தான் . கல்வியையை நெறிப் படுத்த வேண்டும் . ” இந்தியாவின் ஜீவன் கிராமங்களிலே வாழ்கிறது ” என்றார் . நம்மவர்களும் சாதி ,அது , இது என்று அடித்து செத்துக் கொண்டிருந்த போதிலும் ராஜாஜி , …குலக்கல்வி முறைச் சட்டத்தை அமுலாக்க வேண்டும் என்று ஏற்படுத்த …முயன்றார் . மனித மனங்களில் செயற்கையாக நிறைய தவறுகள் ஏற்றப்பட்டிருக்கின்றன . அமுலாகாத போது தனது முதலமைச்சர் பதவியையே துறந்தார் . கல்கி , தனது பத்திரிகையில் அவரது கொள்கைகளை விளங்கப்படுத்தி முன்னெடுத்துச் சென்ற சிஸ்யர் . இவர்கள் எல்லாரும் நேர் கொண்ட பார்வையுடயவர்கள் . நச்சு பாராள மன்றங்களாலே இலங்கையில் படுகொலை நிகழ்த்தப்பட்டது . எல்லா நாடுகளிலுமே நிகழ்த்தப்பட்டுக் கொண்டு வருகின்றன . அவர்கள் தமக்கு சூடிய பெயர்கள் பனியணியினர் . தமிழில் பனி …என்றால் பையித்தியகாரர் . சரியானப் பெயரைத்தான் சூடி இருக்கிறார்கள் . உக்ரேனிலும் ஒரு சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்கிறது . இலங்கையைப் போல அந்த கோப்பு தூசி அறையில் போடப்பட்டு விட்டது .

இந்தியாவும் ஐ. நா அவையில் ஒரு (பெரிய ) வல்லரசானால் தான்தான் இலங்கையில் ஓடி இருக்கிற மற்றைய நாடுகளின் வேர்களை வெட்டி எறிய முடியும் . நம்மவர்களும் மட்ட ரகமான கிரிக்கெட் ரசிகர்களாகவே இருக்கிறார்கள் . இந்த அரசியல் ஐயாவிற்கு சிறிது விளங்கிறது . கோபியிற்கும் சடைமாடையாக தெரிகிற மாதிரி இருக்கிறது .

இடப்பெயர்வுகள் நிகழ்ந்து விடியல் கதிர்கள் அங்கே எட்டிப்பார்க்கா விட்டாலும் கூட கோபி , மீள , மீள மாட்டு வண்டி கட்டி காய்கறிகளை , மரவள்ளியை ,நெல்லை விளைவித்து சந்தைக்கு கொண்டு செல்வான் . அவர்களது குடியிருக்கிற வளவில் மாட்டுக் கொட்டைகள் நிரந்தரமாகவே இருக்கும் . மாடுகள் ஒன்றும் தற்போதைய எரிபொருளின் மேடு ,பள்ளங்களால் பாதிக்கப்படாது . ” சல் , சல் ” என ஓடிக் கொண்டே இருக்கும் . அடிமையாக ஒருபோதும் வாழ மாட்டான் . அதற்கெதிராகவும் செயல் பட்டுக் கொண்டே இருப்பான் .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.