42 சிங்களக் கவிஞர்களின் கவிதைகளை எழுத்தாளர் இப்னு அஸுமத் மொழிபெயர்த்துள்ளார். பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளியான கவிதைகள்.  வலம்புரி கவிதா வட்டத்தின் வகவம் பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழலில் மரணித்த அனைத்து இன மக்களுக்கும் நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. நூலுக்குக் கவிஞர் மேமன்கவி சிறப்பானதோர் அணிந்துரையினை வழங்கியுள்ளார்.

நூலை வாசிப்பதற்கான இணைப்பு -  https://noolaham.net/project/1032/103154/103154.pdf
தற்போதுள்ள சூழலில் இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்துக்கும், புரிந்துணர்வுக்கும்  இத்தகைய மொழிபெயர்ப்புகள் அவசியம் தேவை.