ஜீவநதி' சஞ்சிகையின் இதழ் 166 எழுத்தாளர் திக்குவல்லை கமால் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. இதனைச் சாத்தியமாக்கிய 'ஜீவநதி' ஆசிரியர் பரணீதரனுக்கு நன்றி. ஏற்கனவே எழுத்தாளர்கள் பலரின் சிறப்பிதழ்களை 'ஜீவநதி' வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் திக்குவல்லை கமால் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு கதை, உருவகக்கதை, கவிதை, சிறுகதை,நாவல்,மொழிபெயர்ப்பு எனப் பன்முகப்பங்களிப்பை நல்கிய படைப்பாளி. அவரைச் சரியாகக் கெளரவித்துள்ளது ஜீவநதி, வாழ்த்துகள்.