எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் பிரன்ட்ஷிப் விருது சென்னை, நவ. - 9 - எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் பிரன்ட்ஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பிரபல திரைப்பட இயக்குனர் மிர்னாள்சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் நிகோலாய் ஜெயகாந்தனிடம் சென்னையில் வழங்கினார். இந்த நட்புறவு விருது வழங்கும் விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  இந்தியாவுக்கான ரஷ்ய தூதர், ரஷ்ய அதிபரின் தூதர் குழுவினர் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தோ -ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக ஜெயகாந்தன் உள்ளார். இவர் தனது எழுத்துப் பணியோடு இந்திய, ரஷ்ய நாடுகளிடையே உறவை வளர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது நாவலை தழுவி எடுக்கப்பட்ட உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் ரஷ்ய அதிபர் விருதை பெற்றது. இந்தோ, ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தை அவர் கடந்த 2006 ல் தொடங்கினார்.

http://www.thinaboomi.com/2011/11/08/7858.html