இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2006 இதழ் 82 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிறுகதை!
சிறுகதை: 'வங்காலை'!

- வ.ந.கிரிதரன் -

மீண்டும் மீண்டும் அந்தத் துன்பகரமான நினைவுகளே சிந்தையில் வளைய வந்து கொண்டிருந்தன. அந்தச் செய்தியின் ஆழமும், அதன் பின்னால் புதைந்து கிடக்கும் துயரமும் நெஞ்சினைப் பிளக்குமொரு வலியாகக் கோடிழுத்தன. எதற்காக? ஏன்? இணையக் கடலின் ஆழத்தில் முத்தெடுக்க முனைந்தவன் முள்ளையெடுத்த கதையாக ஆகிப் போன நிலைமை. எத்தனை கனவுகளுடன், கற்பனைகளுடன்,  துள்ளல்களுடன், தழுவல்களுடன், மகிழ்ச்சி கலந்த உணர்வுகளுடனிருந்தது சூழல். பொறுப்பும், கனிவும், காதலும் மிக்கு விளங்கியது பொழுது. இளங்கணவனும் தந்தையுமான அந்த இளைஞன்; தாயும், தாரமுமான அந்த இளம் யுவதி. வஞ்சகமற்ற பால் மணம் மாறா அந்தப் பச்சிளங் குருத்துகள்.

எதற்காக இந்தக் கூத்து?

படைப்பின் இன்பத்திற்குப பின் இவ்விதமொரு சோகமா?

சில சம்பவங்கள், சில சொற்கள், சில காட்சிகள் இவையெல்லாம் சில வேளைகளில் நெஞ்சினை உலுப்பி விடும் ஆற்றல் பெற்றவையாக இருந்து விடுகின்றன. இந்தச் சம்பவமும், அது பற்றிய ஊடகச் சித்திரிப்புகளும், பிம்பங்களும் அத்தகைய வல்லமை மிக்கவை.

மீண்டும் மீண்டும் அந்தக் காட்சிகளும், அவற்றின் பின்னால் பொதிந்து கிடக்கும் துயரங்களும், சோகங்களும்....

உலகம் முழுவதும்தானே இத்தகைய காட்சிகளாலும், துயரங்களாலும், கொடுமைகளாலும் நிறைந்து கிடக்கின்றது. ஏன் இந்தக் கண்ணீர்த் தீவின் தென்பகுதியில் கூட இத்தகைய காட்சிகள், துயரங்கள் நடக்கவில்லையா?

உண்மைதான். இந்தப் பூமிப்பந்தின் எந்தத் திக்கிலென்றாலும் இத்தகைய சம்பவங்கள் நடந்து விடுகையில் நெஞ்சு வலிக்கத்தான் செய்கிறது. ஆயினுமென்ன.. நானுமோர் அற்ப மனித ஐந்துதானே. அதே குறை நிறைகளும் எனக்கிருக்காதா? ஊரின் துயரங்களையும், சோகங்களையும்விட என் வீட்டுத் துயரமும், சோகமும் என்னைத் தாக்கும் வீச்சு அதிகமல்லவா? அதற்கு நான் மட்டுமென்ன விதி விலக்கா?

போரில், யுத்தத்தில் நடைபெறும் அழிவுகளை விடத் தனிப்பட்ட துன்புறுத்தல்களுடன், வதைகளுடன் கூடிய இத்தகைய அழிவுகளின் தாக்கம் மிகவும் அதிகம்தான்.

மீண்டும் மீண்டும் அதே நினைவுகள்...

அன்று காலையில் வழக்கம்போல் எத்தனை எத்தனை கனவுகளுடன், இன்பங்களுடன், அந்தக் குடிசையின் பொழுது விடிந்திருக்கும்? அந்தப் பிஞ்சுகளில் எத்தனை எத்தனைப் பிஞ்சுக் கனவுகள், கற்பனைகள் பூத்திருக்கும்? துணையிரண்டின் நெஞ்சங்களில் எத்தனை எத்தனை காதல் மலர்கள் வழக்கம் போல் பூத்திருக்கும்?

எனக்கு மட்டும் வருங்காலம் அறிந்து எதிர்வு கூடும் சாத்தியமிருந்திருந்தால்....... காலத்தை மீறிடும் வல்லமை இருந்திருந்தால்.... கடந்த காலத்திலிருந்து உம்மிருப்பின் முடிவு வரையிலான சம்பவக் கோர்வைகளை உயிர்ப்புடன் மீள அடுக்கி வைத்திருக்க மாட்டேனா?

சோதிடர்களே ! எங்கு போயொளிந்தீர்?

கண்களுக்கு முன்னால் உறவுகள சீர்குலைக்கப்பட்ட போது அவ்வுறவுகளின் உள்ளங்களில்தானெத்தனை உணர்வுகளோ?

முடிவில் கூட நிம்மதியற்ற இருப்பு!

என்ன உலகமிது! என்ன உலகம்!

போரொழிந்த பாரொன்றின் சாத்தியமுண்டா? என்றாயினும்.

சொந்த மண் துறந்து, தொலைவிலினிலே என்னிருப்பு. நீரோ தொலைவிலிருந்து மண் நாடி மீண்டீர்? உம் விடயத்தில் நிலமென்னும் நல்லாள் நல்லாளற்றுப் போனாதேனோ?
இருந்தும், மண் நாடி, வல்லூறுகளுக்கு மத்தியில் கூடு கட்டி இருப்பை எதிர்பார்த்த புட்களே!  உம்மிருப்பின் உறுதியும், துணிவும், நம்பிக்கையும் போற்றுதற்குரியன. போற்றுதற்குரியன. பயனற்றுப் போகாதும் இருப்பு இங்கொருபோதும்.

வங்காலை தலை நிமிர்ந்து நிற்கிறது.

ngiri2704@rogers.com

**மன்னாருக்கு தென் கிழக்கே வங்காலை பத்தாம் வட்டாரத்திலுள்ளது தோமஸ்புரி கிராமம். ஈழச் சூழல் காரணமாகத் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா அரசுக்குமிடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து மீண்டும் தமது தோமஸ்புரிக் கிராமத்திற்குத் திரும்பிய குடும்பம் மூர்த்தி மாட்டினுடையது (வயது: 35). மனைவி: மேரி மெக்ரனினின் சித்திரா (வயது 27). குழந்தைகளிருவர்: ஆன் லக்சிகா (பெண் குழந்தை, வயது 09), ஆன் டிலக்சன் (ஆண் குழந்தை, வயது 07). மூர்த்தி மாட்டின் தச்சுத் தொழில் செய்து பிழைக்கும் தொழிலாளி. அவரது தொழிலுக்குப் பயன்படுத்தும் உழி போன்ற உபகரணங்களால் பயங்கரமான சித்திரவதைகளின் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். ஸ்ரீலங்காப் படையினரே இப்படுகொலைக்குக் காரணமெனக் குற்றஞ்சாட்டிய கிராமத்தவர்கள் படையினருக்கெதிராக நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.**


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner