இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர்  2008 இதழ் 106  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அறிவித்தல்!

'தமிழ் டைம்ஸ்' ஆசிரியர் திரு. என்.எஸ்.கந்தையா மறைவு!

- விம்பம் கலை- கலாச்சார அமைப்பு -

காற்றினில் கரைந்த பெருமகன்: அமரர் N.S. கந்தையா!
மண்ணில்: 07. 09. 1922; விண்ணில்: 26. 08. 2008
லண்டனுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வரலாற்றில் மிகமூத்த தமிழ்ப் பிரமுகராகத் திகழ்ந்த திரு N.S. கந்தையா அவர்களின் மறைவு, நேர்மையோடும் அர்ப்பணிப்போடும் தமிழர் விவகாரங்களில் பணியாற்றிய ஒரு சிறந்த சேவையாளரின் பாரிய இழப்பாகும்..
லண்டனில் கடந்த 25 ஆண்டுகளாக வெளிவந்த ‘TAMIL TIMES’ என்ற ஆங்கில மாத சஞ்சிகை யின் முகாமையாளராக அமரர் N.S. கந்தையா அவர்கள் ஆற்றிய பெரும் பணி, தமிழர்களின் ஊடக வரலாற்றில் தனி அத்தியாயத்தைக் குறித்து நிற்கின்றது.
மிகப்பெரிய பணபலமோ, ஆளணியோ இல்லாத நிலையிலும், ஒரு தனிமனிதனாக நின்று அசாத்தியமான உழைப்போடு அப்த்திரிகையை தொடர்ச்சியாக வெளிக்கொணர்ந்ததில் அவர் ஒரு சாத னையை நிலைநாட்டியிருக்கிறார்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் இல்லங்களிலெல்லாம் ‘TAMIL TIMES’ மாத இதழ் அவசிய வாசிப்புக்குரிய தொன்றாகவே இருந்தது. இந்த ஆங்கில சஞ்சிகைக்கான ஆக்கங்களை உரியவர்களிடமிருந்து பெறுவதுடன், பத்திரிகையைப் பல்வேறு நாடுகளுக்கு விநியோகம் செய்தல், சந்தா மற்றும் விளம்பர விவகாரங்கள், படைப்பாளிகள், சந்தாதாரர்கள், விளம்பரம் செய்வோர் ஆகியோருடனான தொலைபேசி தொடர்புகள் என பத்திரிகைக்கான அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து அவர் செயற்பட்ட விதம் முன்னுதாரணம் இல்லாத சிறப்பைக் கொண்டதாகும்.

திரு. P. ராஜநாயகம் அவர்களின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் தொகுப்பு பணிகளோடு ‘TAMIL TIMES’ சஞ்சிகையை மாதாமாதம் உரிய காலத்தில் வெளிக்கொணர்ந்ததில் N.S. கந்தையாவின் நிர்வாகத் திறன் பளிச்சிடுகின்றது.

லண்டனில் நீண்ட காலமாக இயங்கிவரும் ஸ்கொட் நலன்புரி அமைப்பின் (Standing Committee Of Tamil speaking people) நீண்டகால உறுப்பினராக இருந்து தமிழர்களின் சமூகப் பணிகளுக்கு உதவுவதில் அவர் முன்னின்று செயற்பட்டிருக்கிறார்.

யாழ்/சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் கணித, ஆங்கில பாடங்களில் புகழ்மிக்க ஆசிரியராகத் திகழ்ந்த N.S. கந்தையாஅவர்கள், லண்டனில் இயங்கிவரும் அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயற்பாடுகளின் அச்சாணியாக திகழ்ந்தவர் ஆவார். ஸ்கந்தவரோதய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஒருமித்த குறிக்கோளுடன் செயற்பட்டமைக்கு
N.S. கந்தையாவின் தனித்துவ ஆளுமையே காரணமாகும்.

சைவநெறியில் சிறந்த இப்பெரியார் ஆர்ச்வே உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தை நிர்மாணிப்பதில் தலையாய பங்கினை ஆற்றியிருக்கிறார்.

இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளராக சிறப்பாகப் பணியாற்றிய திரு. N.S. கந்தையா அவர்கள், தான் சார்ந்து செயற்பட்ட அனைத்து விடயங்களிலும் ஒழுங்கு. நேர்மை, கண்ணியம், நேரந்தவறாமை, பிறரை மதிக்கும் உயர்பண்பு, மற்றவர்களுக்கு உதவும் பரோபகாரம் ஆகிய உயர்ந்த நற்பண்புகளை கொண்டவராகத் திகழ்ந்தார்.

தமிழர்களின் எதிர்காலம் அறிவுத்தளத்தில் உயர்ந்து விளங்க வேண்டும் என்று அக்கறையுடன் செயற்பட்ட இந்த கல்விமானின் வரலாறு தமிழ் மக்களின் நினைவில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய சரித்திரம் ஆகும்.

‘விம்பம்’ கலை - கலாச்சார அமைப்பின் நோக்கங்களைப் பாராட்டியும், அதன் செயற்பாடுகளில் அக்கறைகொண்டு அரிய அறிவுரைகளையும் உதவிகளையும் நல்கிய பெருமகனாரை நாம் என்றென்றும் நினைவில் நிலை நிறுத்திக்கொள்கின்றோம்.

அன்னாரின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ‘விம்பம்’ தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

விம்பம்’ கலை - கலாச்சார அமைப்பு

KKRAJAH2001@aol.com
விமபம்: vimbam @aol.com


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner