இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2006 இதழ் 82 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிறுகதை!
தடைகள்!

 - வியாசர்-

சிந்திக்கும் இளைஞன்...மருமகப்பிள்ளை ரவிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த கடிதத்தை சாவித்திரி தான் தபால்காரனிடம் இருந்து வாங்கினாள்.விஜயாவின் கையெழுத்தை அவளால் மறக்க முடியுமா?சிறு பிராயம் தொட்டு ..A/L வரையிலும் ஒன்றாய் படித்த நட்பு ஆழ் போல வளர்ந்திருந்தது.அன்று நிலவிய சின்னச் சின்ன சந்தோசங்கள் எத்தனை. மற்றவர்களுடன் விளையாடுகிற போதும் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணி தான் நிற்பார்கள்.உயிர்ச் சினேகிதிகள் என்று விமர்சிக்கிறளவிற்கு திரிந்தவர்கள்.‪படிப்பு உலகம் வேறு,கல்யாண உலகம் வேறு ..என்பது போல பிறகு என்னென்னவோ.. எல்லாம் நடந்து ..,பிரிந்து,இப்ப கண்காணாத தூரமாக கனடாவில் இருக்கிறாள். நரை தட்டி ..மகளின் பிள்ளைகளை ஏய்ச்சுக் கொண்டு திரிந்தாலும்,விஜயா அவளுக்கு உயிர்ச் சினேகிதி தான்.சமுதாயப் பார்வை எப்படி இருந்தாலும் அவளுக்கு கவலை இல்லை.நீண்ட பெருமூச்சு விட்டாள். ரவியிலே, அவள் சாடைமாடையாக சினேகிதியின் பிடிவாதக் குணங்களைப் பார்க்கிறாள்.தாடி வளர்த்துக் கொண்டு எதைச் சொன்னாலும் ஒரு அசட்டுச் சிரிப்புடன் நழுவலாக பதிலளிக்கிற அவன்.அடுத்ததாக அவள் சந்திரனிலும் பார்க்கிறாள்.மற்ற 2 பெடியள்களும்,ஒரு பெட்டையும் இவர்களைப் போல இருக்கவில்லை.

காலையிலே 7.00 மணிக்கு இறங்கி விட்ட ரவி,இனி 5.00 மணிக்கு தான் வருவான்.ராணி அவனை சாப்பாட்டையும் எடுத்துச் செல்ல வைத்திருந்தாள்.அவனுக்கு இனியாவிடமும்,சுமியிடமும் கொள்ளை பிரியம்.சுமி, அவனை உரிச்சு வைச்சது போல இருக்கிறாள்.அதே நெடுவல் தோற்றம் அமுத்தலான பார்வை.ராணியிடமும் அன்பாக இழைஞ்சு விட்டே போவான்.இன்னமும் அந்த தாடியை எடுக்கிறான் இல்லை.விஜயா,குடும்பமாக கனடாவிற்கு வரும்படி வருந்தி அழைக்கிறாள்.பச்சைக் கொடி காட்டுறானா?இல்லையே! தாய் அனுப்பிய பணத்தில் வான் ஓட லைசன் எடுத்து விட்டு மினிபஸ் ஒன்றிற்கு ரைவராக வேலை பார்க்கிறான்.அவனுக்கு வார கடிதத்தை..வாசிப்பதும் இல்லை. ராணியிடமே கொடுத்து விடுகிறான். "வாசிச்சுப் போட்டு பதில் கடிதம் எழுது,கையெழுத்துப் போட்டு விடுகிறேன்" என்கிறான்.ராணி கடிதத்தை வாசிச்சுக் காட்டிய பிறகு,என்னென்ன எழுதலாம் என கதைத்த பிறகே எழுதத் தொடங்குவாள். பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை விட்டு விட்டு வந்த மகளிடம் கடித்தைக் கொடுத்தாள்.மகள் தாயை அனுதாபத்துடன் பார்த்தாள். "ஏம்மா,நீ கனடாவிற்கு விசிட்டிங் விசாவிலே ஒருக்காய் போயிற்று வாயேன்"என்று கேட்டாள். "நான் எதற்கடி போகணும்,விஜயாவை எனக்கு தெரியாதா..இவன் போகணும்.ஆனால் அசையமாட்டான்"பெருமூச்சு விட்டார்."நான் சந்தைக்கு போயிட்டு வாரன்"என்று கிளம்பினார். செல்வராசா மாஸ்டருக்கு ரவி மூத்தவன்.அடுத்தவன் சந்திரன்,அடுத்து..கணபதி,செல்வன்..கடைசி சீதா. ரவிக்கு 10 வயதாக இருக்கும் போது தான் விஜயா கனடாவிற்குச் சென்றாள்.மாஸ்ரர் பெருந்தன்மையானவர்.அந்த விசயத்தை எரிய விடவில்லை."கனடாவிலிருக்கிற சித்திட்டை போய் விட்டாள்"என்று ஊரவர்களுக்கு சொல்லிச் சமாளித்து விட்டார்.விஜயா அவளுக்கு பாரதக் கடிதம் எழுதுவாள்.அவளும் மினக்கெட்டு பிள்ளைகள் பற்றிய செய்திகளை எல்லாம் சேகரித்து... எழுதுவாள்.தாடியுடன் இருக்கும் ரவிக்கும்,சந்திரனுக்கும் இடையில் ராம லஸ்மணர் உறவு நிலவியிருந்தது.அண்ணனுக்கு கட்டுப்பட்டவனாக இருந்தான்.ரவி, O/L இல் தவறிய போது விரக்தியடைந்தவன் போல திரியத் தொடங்கினான். அவன் படித்த பள்ளிக்கூடத்துப் பபிளியனில்..அவனோட செட்டுடன் சிகரட்டு புகைத்தும்,கள்ளும் குடித்துக் கொண்டுமிருப்பான்.அவன் சுயமாக சம்பாதிப்பதற்காக சட்ட விரோதமாக வியாபாரம் செய்வதாக அறிந்தாள். மாற்றாய்ப்பிள்ளை மனப்பான்மையுடன் காலத்திற்கு காலம் தமிழர்களுக்கு எதிராக கலவரங்களை முப்படைகளின், காடையர்களின் உதவியுடன் நடத்திக் கொண்டிருக்கிற நாட்டில் சட்டமாவது? விரோதமாவது?ஆனால் அரச உத்தியோகத்தர்கள்..அரச விசுவாசிகளாகவே இருந்தார்கள்.தமிழ் பொலிஸிடம் அகப்பட்டிருந்தாலும் அவனை உள்ளே தள்ளியிருப்பார்கள். நல்ல காலத்திற்கு பொலிஸ்..யாழ்ப்பாணத்தில் செயல்படவில்லை. அவனோட சேர்ந்த சிலருக்கு அச்சுக்கொம்பனி ஒன்றுடன் தொடர்பு இருந்தது.O/L ,A/L ..கள்ள சேர்ட்டுபிக்கற்றுக்களை தயாரித்து வித்துக் கொண்டிருந்தார்கள்.கொழும்புக்கு உத்தியோக வேட்டைக்குப் போறவர்களுக்கு சான்றிதழ்கள் தேவைப்பட்டன. காலையிலே சொன்னால் மாலை 5.00 மணிக்கு தயாராக இருக்கும்.100/=,200/= என பணம் அறவிட்டார்கள்.லஞ்ச லாவண்யத்துடன் இருக்கிற சிறிலங்கா அரசு துப்புதுலக்க வரவா போகிறது! ஊர்ப்பெட்டைகளுக்குப் பின்னாலும் சுற்றி உறவினர்களாள்..அடிக்கிறளவிற்கு கூட முற்றியும் இருக்கிறது.ராணிக்குப் பின்னாலும் அப்ப அலைந்திருக்கிறான்.அவள் வாயாடியும்,துணிச்சல்காரியும்.சண்டை என்று வந்து விட்டாள் அவள் பெடியள்களுடன் சண்டை பிடிக்கவும் இறங்கி விடுவாள்.அப்படி ஒரு குணம்.அடிக்கடி அவளுடைய ஏச்சுக்களால் அர்ச்சிக்கப் பட்டிருக்கிறான்.ராணி வந்து குற்றப்பத்திரிக்கை வாசிக்கிற போது அவளுக்கு உள்ளே அழுகை கொபுளிக்கும். சினேகிதியின் மகன் சீரழிவதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பாள்.சந்திரன் படிப்பை முடித்திருக்கவில்லை.ஆனால் அவனைப் போலில்லாமல் விளையாட்டுத்துறையில் திறமையானவனாக விளங்கினான்.உதைபந்தாட்டக் குழுவில் நேர்த்தியாக விளையாடுவான்.அக்குழுவிற்கு தலைவனாகவும் வேறுருந்தான்.எதிர்தரப்புபவுல்விளையாடுகிறதென்றால்..இவன் பலரின் காலை உடைத்து ஆவேசமாக விளையாட ஆரம்பித்து விடுவான்.மற்றவர்களால் இவன் பவுல் விளையாடுறதை..அறிய முடியாது.கிரிக்கட் குழுவிலும் இருந்தான்.இவனுக்கும் படிப்பு ரவியைப் போல சரிவரவில்லை.

விஜயா பல வருசங்களுக்குப்பிறகு மாஸ்ரருக்கு கடிதம் எழுதினாள்."பிள்ளைகளை கனடாவிற்கு எடுக்க விரும்புகிறேன்"என்று கேட்டிருந்தாள்.நாட்டு நிலமையில் ...அவர்கள் போறது நல்லது..என பில்ளைகளிடம் கூறினார்.அது வேண்டத்தகாத நிலையை ஏற்படுத்தி விட்டது. ரவி ஒரியக்கத்தில் சேர்ந்து இந்தியாவிற்கு வள்ளம் ஏறி விட்டான்.சினேகிதிக்கு கலக்கத்துடன் கடிதம் எழுதிய கையோடு, ராணியையும் அழைத்துக்கொண்டு பிள்ளையார் கோயிலுக்குப் போனாள்."நீ அவனைக் கட்டுவாயாடி"என்று கேட்டாள்.ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள்."அம்மா உனக்குப் பையித்தியமா?"கேட்டாள்."அவனை அப்படியே விட்டால் சீரழிஞ்சே போயிடுவானடி.பயமாக இருக்கிறது"என்றாள் கலங்கிய குரலுடன் எங்கையோ பார்த்தபடி..பிள்ளையார் கோயிலை தெரிந்தெடுத்து வந்து அம்மா கேட்கிறாள்."அம்மா உன் விருப்பம் அதுவென்றாலும் இப்ப ஒன்றும் செய்ய ஏலாதே!அவன் இங்கே இல்லையே"ஆதரவுடன் சொன்னாள்.அப்ப அவளில் வெளிப்பட்ட நிம்மதிப் பெருமூச்சு."காலம் மாறும்மடி.பில்ளையார் கைவிட மாட்டார்.நீ மாறக்கூடாது"அம்மாட பரிதவிப்பு..அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது."சரியம்மா வா.பூசைக்குப் போவோம்"என்று கூட்டிச் சென்றாள். அடுத்த கிழமை சந்திரனும் மற்றொரு இயக்கத்தில் சேர்ந்து போய்விட்டான்.3வதுகணபதிக்கு கம்பசில் படிக்க கிடைத்திருந்தது."படிப்பை முடிக்க விரும்புகிறேன்"என அவனும் மறுத்து விட்டான்.செல்வாவும்,சீதாவுமே..போக சம்மதித்தார்கள்.சீதா கனடாவிற்குப் போன போது மாஸ்ரருக்கு சமையல் வேலை பிரச்சனையாகி விடவில்லை.அவளை மட்டுலில்லை,பெடியள்களையும் உதவிக்கு வைத்திருந்தார் தவிர அவரே முழுச் சமையலையும் கவனித்து வந்தார்.அதனால்..ரவிக்கும் சந்திரனுக்கும் கலாதியாக புட்டும்,இடியப்பமும் ..அவிக்கத் தெரிந்திருதது.முதலாவதாக சந்திரன் தான் வீட்டுக்கு திரும்பி வந்தான்.அவ்விடத்தின் ஏரியா பொருப்பாளனாக நியமிக்கப் பட்டிருந்தான்.ஊரில் பழைய வீடொன்றை எடுத்து...காம்பாக்கி,அங்கேயே பெடியள்களுடன் தங்கத் தொடங்கினான்.இடைக்கிடை வீட்ட வந்து விட்டு போவான்."காம்பிலே சந்திரன் வைக்கிற கறுவாட்டுக் குழம்பு கலக்கலானது" என்று அவளுடைய கடைசி மகன்- தவம், அவயளோட இழுபடுறவன் - சொல்றதைக் கேட்டிருக்கிறாள்.ரவி சென்றிருந்த இயக்கமும்,அவனுடையதும்...ஊரில் மோசமாக சச்சரவு இடுறவர்களாக இருந்தார்கள்.அவை சந்திரனுக்கு தீராத தலைவலியாகவே இருந்தது.சைக்கிள் வெட்டுக்கள்...கைகலப்பில் எப்பையும் வெடிக்கலாம் போல பயமுறுத்திக் கொண்டே இருந்தது.6-7 மாசம் கழிச்சு ரவியும் திரும்பி வந்தான்.அவனுடைய இயக்கம் புத்திசாலித்தனமாக அவ்விடத்தில் தம்பக்க பொருப்பாளனாக அவனை நியமித்தது.ஆச்சரியம் பூத்தது போல எல்லாக் கொழுவல்களும் அடங்கிப் போனது.சந்திரன் தன் பக்க தணகல்பெடியள்களை அடக்கி விட்டான். பிறகு 2பக்க பெடியள்களில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் இயல்பாக கதைத்து விட்டு,அல்லது சிரித்து விட்டு போவர்களாக மாறி இருந்தார்கள்.அந்த ஊரில் மாத்திரம் தான் அத்தகைய மாற்றம்.

மாஸ்ரர் வயலில் கொத்திக் கொண்டிருக்கும் போது தீடீரென இதயத்தாக்குதலால்...தாக்கப்பட்டு தொய்ஞ்சு,சளைஞ்சு விழுந்து விட்டார்.கூட நின்ற கணபதி தான் அவருடைய சாவை பார்த்தவன்.செத்த வீடு முடிய இருவரும் அவரவர் காம்ப்களிலே தங்கத் தொடங்கி விட்டார்கள்.கணபதி வீட்டை சித்தப்பாவின் பார்வையில் விட்டு விட்டு கம்பஸுக்கு கிட்டவாக ரூம் எடுத்து படிக்க போய் விட்டான்.ஒருநாள் ரவி தனிய சைக்கிளில் போய்க் கொண்டிருக்கிற போது ராணி அவனை நிறுத்தி,"என்னை நீ விரும்பினனி தானே,நீ போன பிறகு எனக்கு உன் மேல விருப்பம் ஏற்பட்டு விட்டது.கல்யாணம் கட்டி வாழ ஆசைப்படுகிறேன்.கட்டுவாயா"என்று கேட்டாள்.ரவியிலே இப்ப பாரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது."நீ நல்லப் பெடியனாய் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொள்.என்ர வாழ்க்கை எப்பையும் முடியலாம்.உன்னை நட்டாற்றில் விட்டு விட முடியாது"அவன் தெளிவாக பேசியது அவளை ஆச்சரியப்பட வைத்தது. இந்தியாவில் அவன் விடுதலைக் கல்லூரி ஒன்றிலும் படித்து வெளிய வந்திருக்கிறான்.புரட்சி பற்றிய ஒரு தெளிவு அவனிடம்
இருந்தது.'பொதுவாக அவனுடைய இயக்கப் பெடியள்களுடன் அரசியல் பேசி வெல்ல முடியாது'என்பார்கள். அம்மாவிடம் வந்து இப்படி பேசுகிறான்'என்று சொன்னாள."பிள்ளையார் கை விட மாட்டார்.நீ மனம் தளராதே"என்றாள்.மறு தடவை சந்தித்த போது "ரவி கட்டினாள் உங்கள்:ஐ த் தான்.இல்லாவிட்டால் இப்படியே இருந்து விடுவேன்"என்று உறுதியாய் சொல்லி விட்டு போய் விட்டாள்.பிறகு, படைகளால் சுற்றி வளைக்கப் பட்டு சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டான்..ஆகாயத்தில் போர் விமானங்கள் செல்லுகளை மழை என பொழியிறதும் நடந்தது.சந்திரனின் இயக்கத்திற்கும்,ரவியிட இயக்கத்திற்குமிடையில் மோதல்கள் வேறு வெடித்தன.ரவியின் தரப்பில் சில புள்ளிகள் மடிந்த போதிலும் அவனை அவர்கள் விட்டு விட்டார்கள்.சந்திரனின் அண்ணன் என்பதால் அவனுக்கு அளித்த மரியாதை அவனை காப்பாற்றியது.மோதல் தணிந்து அவ்வியக்கம் தடை செய்யப்பட்ட போது மினி பஸ் ஓட பயிற்சி எடுத்து, ரைவராகவும் ஆகி விட்டான்.ராணி "தாலியைக் கட்டு"என்று திரும்பக் கேட்ட போது,பிள்ளையார் கோவிலில் எல்லாரும் சூழ...தாலியைக் கட்டினான்.சாவித்திரியின் கண்களில் கண்ணீர் பளபளத்தது."உன்ர வாக்கு பலித்திட்டுதுதம்மா"என்று மகளும் கரைந்து அம்மாவைக்
கட்டிக் கொண்டாள்.இப்ப அவர்களுக்கு 2 வாலுகள் இருக்கிறார்கள்.சாவித்திரி அவர்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறாள்.இருந்தாலும் அவளுடைய உயிர்கள் அல்லவா!விஜயாவும் விடாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டு தானிருக்கிறாள்.அவன் பக்கமும் நியாயங்கள் இருக்கின்றனவோ..என்னவோ?அவள் சினேகிதிப் பக்கம் தான்."அம்மா,இந்தா தேத்தண்ணி.நீ ரெஸ்ட் எடு.நான் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வசந்தி வீட்ட போயிட்டு வாரன்"கிளம்பினாள்.வசந்தி அவள் சினேகிதி.3-4 வீடு தள்ளி இருக்கிறாள்.

இப்ப அவள் சிறிது தளர்ந்து விட்டாள் தான்.தலை மயிர் முழுதாக நரைத்து விட்டது.முதுமை உடலை மூடிக் கொண்டு போகிறது.மனசை மட்டும் முதுமையால் தாக்கமுடியவில்லை.அவளும் விஜயாவும் பழகிய அந்த நாட்கள் வசந்தியும் இவளையும் போல!பெருமூச்சு விட்டாள்.தேத்தண்ணிச் சுவையும் இனிப்பும் இறங்க சிறிய புத்துணர்ச்சி ஒன்று ஏற்பட்டது.அவர் வாகன விபத்திலே இறந்தது கூட அவளை பெரிதாக பாதிக்கவில்லை.அவருடைய விதவைச் சம்பளம் கிடைத்ததால்...குடும்பத்தைக் கொண்டிழுக்க முடிந்தது.அந்த வீடும்,கொஞ்ச வயல்க்காணியும் இருந்ததால்..அவள் அப்படியே தான் தொடர்ந்தும் இருந்தாள்.ஆனால்,அவளுடைய சினேகிதி அவளை பெருமளவு பாதிக்கிறாள்.உயிரும் உடலும் வேற வேற இடங்களில் இருந்து அரற்றிக் கொள்வதைப் போல! அவளுக்குத் தான் ஏன் அப்படி ஒரு தலைவிதியோ?அப்படி என்ன பெரிய தப்பை செய்து விட்டாள்.பண்பாடு,விழுமியங்கள்,தமிழர்களின் மாண்பு...என்று கட்டி அழுகிறவர்கள் தான் அவளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள்.சாதியம் என்று கடைப்பிடிப்பது,கொலைகளே விழுமளவிற்கு கொந்தளிப்பது,எல்லா அடக்குமுறைகளையும் பாவிப்பது..ஒன்றும் குற்றமில்லையா?பெரியவர்கள் செய்தால் பிழைகள் இல்லை.நியாயமா?விஜயாவும் அவளும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கிற போது கூட படித்த விமலின் குணங்கள் விஜயாவிற்குப் பிடித்திருந்தன.மாணவர்கள் என்ன சாதி என்பது ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி தெரியும்?அவர்கள் வீடுகளுக்கு போய் வந்தால் அல்லவா ஓரளவிற்கு..மட்டுக்கட்ட முடியும்.அவர்கள் எங்கே போனார்கள்.எச்சாதியருக்கும் சாதியை அறிய கேள்விகள் கேட்பது பிடிக்காத விசயம்.விமல் காதலைச் சொல்ல விஜயா அந்த 3 வருசக் கோர்ஸில் ஏற்றுக் கொண்டு விட்டாள்."இது சரி இல்லை.முதலில் அவன் என்ன சாதி என்று அறிய முயல்வோம்"சாவித்திரி தடுத்து தான் பார்த்தாள்.சினிமாத் தனமாக அலட்சியமாக இருந்து விட்டாள்.அக்காதல் வெற்றி பெறுமா?என அவள் பயந்தது நடந்தே விட்டது.அவளும் விமலும் சுபாஸ் கொட்டேலில் இருந்து ஐஸ்கிறீம் சாப்பிடும் போது அவளுடைய அண்ணன் கதிர் பார்த்து விட்டான்.வீட்டிலே ஒரு பூகம்பமே வெடித்தது.கண்டமாதிரி அவளுடைய அப்பா அடித்து அந்த கோர்ஸுற்கே முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார்.கிளிநொச்சியில் ஆசிரியராக இருந்த மச்சான்காரப் பெடியனான செல்வராசாவிற்கு அவளை கட்டியும் வைத்து விட்டார்கள்.அவனுக்கு அவள் கதை தெரியாது.தெரிய வந்த போதிலும் பெரிதாக அவர் எடுக்கவில்லை.ரவியை நிறைமாசத்தில் அவள் சுமந்து கொண்டிருந்தாள்.விமல் தாடியை வளர்த்துக்கொண்டு வெளிநாடு ஒன்றுக்குப் போய் விட்டான்.விஜயாவும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ தொடங்கி விட்டாள்.5 பிள்ளைகளுக்குத் தாயானாள்.

அப்ப தான் விதி விளையாடத் தொடங்கியது. கனடாவிற்குப் போய்ச் சேர்ந்து விட்ட விமல்,பார்ட்டி ஒன்றில் தறிகெட்ட வெறியில்.இருந்த போது கூட இருந்த நண்பர்கள் அவனை கிளறத் தொடங்கினார்கள்.கனடாவில் எக்ஸ் வைவ்,கணவர்மார் எல்லாம் சர்வ சாதாரணம்.அங்கே இருக்கிற தொலைக்காட்சி சனலில் 'இளமையும் குழப்பமும்'என்ற மெகாதொடர் அந்த பாரம்பரியத்தை வைத்தே சுமார் 50ஆண்டுகளுக்கு மேலாக முடிவே இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. வியாபார கம்பனிகளை நடத்துறவர்களும் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட (லோயர்,கணக்காளர் உட்பட)ஆண்களும் பெண்களும் வேலைக்காகவும்,வியாபாரத்திதற்காகவும் ஆளை ஆளை மாத்தி மணம் முடிப்பதும் , முறித்துக் கொள்வதுமான ஒரு குழம்பிய வாழ்க்கைத் தொடர் அது.அதிலே வயதானவர் இளையவர் என வேறுபாடில்லாமல் முடிப்பார்.வரையறை கிடையாது.வெளிநாட்டு ஆண் பெண் கலாச்சாரம் நம்மவர்களும் கூட விரும்பிப் பார்க்கிற தொடர். நண்பர்கள் அந்த கதையில் தொடங்கி இன்னமும் தாடியோடு தனியனாக இருக்கிற அவனை "டேய் நீ அவளை நேசிச்சே.அவளும் உன்னை உண்மையாக நேசிச்சாள்.ஏன் மச்சான் நீ அவளை இங்கே எடுப்பித்து,மணந்து கொள்ளக் கூடாது." "டேய் மச்சான் இது நம்ம சாதிகளுக்கு முறையான பாடம்.கட்டாயம் செய்"என்று ஆளுக்கு ஆள் ஏற்றி விட அவனும் அந்த வெறியில் நீண்ட கடிதம் எழுதி அவளுடைய விலாசத்திற்கே அன்றிரவு நண்பனுடன் திரும்புற போது தபால் பெட்டியில் போட்டு விட்டான்.அடுத்த நாள் அதை மறந்து விட்டான்.எதுவும் ஞாபகமும் இருக்கவில்லை.அந்த கடித்தத்தை மாஸ்ரரே பெற்றார்.எந்த சஞ்சலமும் இல்லாமல் மேசையில் வைத்து விட்டுப் போய் விட்டார். அவர் அகிம்ஸைவாதி கூட! விஜயா அதை எடுத்து வாசிச்ச போது பழைய ஆத்திரங்கள் அவளுள் பிரவாகித்தன.விமலும் பெண் வர்க்கத்தை ஏசியும் எழுதி இருந்தான். தனிக்கட்டையாக சாவேன் என வேறும் எழுதி விட்டிருந்தான்.அவள் உடனே சாவித்திரிட்டேயே ஓடி வந்தாள்.பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு ஆறுதலாக இருந்த அவளுக்கு அக்கடிதம் தலை பிய்க்கிற மாதிரி தலையிடியை ஏற்படுத்தி விட்டது."என்னடி செய்யப் போகிறாய்?கடித்தை கிழித்துப் போட்டு விடடி.பிரச்சனை முடிந்து போனது அப்படியே இருக்கட்டும்."என்றாள்."சாதி !,அப்பர் அடித்த அடி இப்பவும் வலிக்குதடி. இவங்களுக்கு பாடம் படிக்கவாவது போகப்போறேன். அவனை எனக்கு கட்டி வைத்திருக்கலாம்.ஏன் முடியாமல் போனது? சாதிச்சட்டங்கள்"அவள் வெடித்தாள்."எடியே அது இல்லை,இப்ப பிரச்சனை.உனக்கு 5 பிள்ளைகள் அரைகுறையாய் இருக்குதுகளே, இதுகளை கேள்விக் குறியாக்கப் போறாயா?"கேட்டாள். "வாழ்க்கை பிணைத்த விதமே சரியில்லை.சரியான தடத்துக்குத் தானே போறேன்,பிரச்சனைகள் தீர்ரதுக்கும் வழிகள் வரும்மடி"பிடிவாதமாக நின்றாள்.A/L இல் இருவரும் சறுகின பிறகு அந்த கோர்ஸையே பெரிதும் எதிர்பார்த்தார்கள்.அதையும் படிக்க விடாது நிறுத்தியதால் அவள் மனமுடைந்து அழுத அழுகை."எடியே காதல் வேண்டாமடி.என்னை கோர்ஸை படித்து வேலை ஒன்றை எடுக்கிறதில் என்ன தவறடி இருக்கிறது?பழைய காலத்து ஆட்களாக ஆட்டம் போடுகிறார்களே!"வெடித்திருந்தாள்."என்னதான் செய்யப் போகிறாய்?"பதில் கடித்தத்தை அவள் வீட்டிலிருந்தே எழுதினாள்.கடிதப் போக்குவரத்து நம் 2 வீட்டுக்குமிடையில் நடப்பது நல்லதில்லை.சின்னம்மா ஒருத்தி கல்யாணம் முறிந்து தனித்தவளாக மானிப்பாய்யில் ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அவர் வீட்டு விலாசத்திற்கே வருவது நல்லது"என்று சொன்னாள்.சனிக்கிழமை போல இருவரும் சின்னம்மா வீட்டுக்குப் போய்க் கதைத்தார்கள்.அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது.புதுமைப் பெண்ணாக "தாராளமாக"என்று அனுமதித்தார்.கடிதங்கள் நீண்டன.விமல் பயண ஏஜென்சியைப் பிடித்து பாஸ்போர்ட் தொட்டு எல்லா வேலைகளையும் முடித்தான்.ரவிக்குப் 10 வயதாக இருக்கும் போது அவள் கனடாவிற்குப் பறந்து போனாள்.விஜயா-விமல்க்கு ..சுமதி பிறந்தாள்.மனச்சாட்சி உறுத்தியதோ ஒரு பிள்ளையோடு நிறுத்திக் கொண்டான்."நாட்டுச்சூழல் நல்லாய் இல்லை.உன் பிள்ளைகளையும் எடுக்க விரும்பினாள் உதவி செய்கிறேன்"என்றான்.ரவியன் சம்மதித்திருந்தால் ..சந்திரன் சம்மதித்திருப்பான்.இப்ப உயிரோடும் இருந்திருப்பான்.ரவியை நீ தான் பார்த்துக்க வேணும்"என்று வருகிற கடிதம் அவளை தவிக்க வைக்கும்."கவலைப்படாதேயடி பிள்ளையார் இருக்கிறார்"என்று எழுதுவாள்.அவன் தாயின் முகத்தை பார்க்க விரும்பாததால் போகவில்லை என்பதில்லை.புதிதாக முளைத்த மற்ற அப்பாவை அவன் பார்க்க விரும்பவில்லை.விஜயாவும் மீள இங்கே வந்து ரவியைப் பார்க்கலாம் தான்.ஆனால் அவளையும் எதோ ஒன்று தடுக்கிறது.சுமதி அவள் மகள் தான்.இருந்தாலும் விமல் உயிரோடு இருக்கிற போது மூத்த மகனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிற தைரியம் அவளுக்கு இல்லை.சாவித்திரிக்கு இந்த ஊசலாட்டம் கவலை அளித்தாலும் "எடியே அவன் சந்தோசமாக இருக்கிறான். கவலையை விடடி.வீடியோ பண்ணியிருக்கிறேன்.பாரடி"என்று பிள்ளைகளின் பிறந்த நாட்களை சிறப்பாக கொண்டாடி படம் பிடித்து அனுப்புகிறாள்.அங்கேயிருந்து வார வீடியோகளை போட்டுப் பார்க்கிற போது ரவியும் பார்க்கிறான்.ஒரு காலத்தில் தாயும் மகனும் ஒன்று சேர்வார்கள். அதற்கும் பிள்ளையார் கணக்குப் போட்டு வைத்திருப்பார், அவள் திடமாக நம்புகிறாள்.

balamuraly@sympatico.ca

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner