இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2006 இதழ் 78 -மாத இதழ் 
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கிடைக்கப் பெற்றோம்!

றஞ்சினி கவிதைகள்!

- செங்கள்ளுச் சித்தன் -

நூல்: றஞ்சினி கவிதைகள்
வெளியீடு: இமேஜ் & இம்ப்ரெஷன் வெளியீடு, டிசம்பர் 2005
11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018
+91-44-24993448
uyirmai@yahoo.co.in
விலை: ரூ 40,-


"உன் முத்தங்களுக்காக என் உதடுகள் தவிக்கின்றன"


ரஞ்சனி கவிதைகள்!றஞ்சினியின் கவிதைகள் மிகத் துலக்கமானவை. உணர்வின் நேர்மையை மிக நிர்வாணமாகச் சொல்பவை. தமிழில் இவ்வாறான துணிச்சலான காதல் கவிதைகளின் வரவு மிக அரிதாகவே இருக்கின்றது. அறிவுரிமையின் பாசாங்குத்தனம் இல்லை. விடுதலை என்கிற கோசத்தனம் இல்லை. கவிதைகளும் அவை பிறந்த தூண்டல்களும் விடுதலையேயாகி நிற்கின்றன. சில கவிதைகள் உணர்வின் அதியுச்ச வீச்சை வெளிப்படுத்துகின்ற அதேவேளை சில, வெறுமனே வசனத்தின் இடம்மாறிய சொற்களின் கூட்டாமாகவே இருக்கின்றன. „ இனிய நண்பனுக்கு“ என்ற கவிதை தொடக்கம் „ஓவியனுக்கு…“ என்ற கவிதை வரை இவரது இந்த முதலாவது தொகுப்பில் ஐம்பத்தியொரு கவிதைகள் இருக்கின்றன. புத்தி, அழகு, அறிவு அவற்றின் மீதான ஒரு ஆணின் அங்கீகாரம் என்பன எவ்வளவு அபத்தமானவை, பொய்யானவை, கோணலானவை என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறது இத் தொகுப்பு. மிகச் சாதாரணமான ; பேச்சு வழக்கின் பூரண சொற்களாக இருக்கும் இது போன்ற கவிதைகள் சில பல வேளைகளில் ஒரு திடீர் வெட்டில் நுண்தளப் புரிதலை வேண்டி நிற்கின்றன.


என் இனிய நண்பனே
நீ என்னை அறிந்ததாகக் கூறினாய்
எப்படி என்றேன்; ஆத்திரப்பட்டாய்
உன்னிடத்தில் – என்னைச் சமப்படுத்திப்
பார்த்தாய்
பின் பரவாயில்லை புத்திசாலி என்றாய்
அறிவென்றாய் – கூடவே அழகென்றாய்
எதை எதற்காகச் சொன்னாய்?
இல்லை
உன்னால் என்னை அறியமுடியவில்லை
பெண் என்பதைத் தவிர


சில இனிப்பான கவிதைகள்.

„…ஆடை களைந்து அரவம் போல பின்னிப் பிணைந்து
திரண்டு புரண்டு கலவியில் கலந்து இமயம் சென்று
கரைகிறது காலை…“

„என் ஜமேக்க காதலனுக்கு“ என்ற கவிதையில் கறுப்புக் காதலனிடம் அவள் சொக்கிக் கிடப்பது அழகிய கவிதையாகிக் கிடக்கிறது. ஜமேக்கப் பாடகர் பொப் மார்லியின் புகழ் பெற்ற பாடல்களில் தெரிகின்ற பிரபஞ்ச நோக்கினைத் தன் காதலனிடமும் கண்டு லயிப்பது அது பொப் மார்லியின் நிழல் உருவே என்றாகிறது.


"...முத்தமிடத் தூண்டும் உன் உதடுகள்
எனை வருடும் உன் திரண்ட தலைமுடி
என் தூக்கத்தைப் பறித்து விட்டது
...
உன் பாடல்கள் புரட்சியானது
...நான் கொண்ட காதல் வார்த்தைகளை மீறியது..."

கவிஞர் ரஞ்சனி, நோர்வேஉடனடிப் பார்வையில் இவை கவிதைகள் தானா என்று கேட்கத் தோன்றும் போல் இருந்தாலும் அவை சொல்கின்ற விடயங்கள் தமிழுக்குப் புதியவை. கவிஞனை; கலைஞனை; ஓவியனை; பாடகனை; நண்பனை; புரட்சியாளனை; விடுதலையை நேசிப்பவனை கனிவிதயம் கொண்டு விரும்பி நிற்கும் கலைமனக் கவிதைகள் இத் தொகுப்பில் பல உண்டு. இவர்களிடமிருந்து "...அன்பை எடுக்கவும் அன்பைக் கொடுக்கவும் எமக்கிருக்கும் உரிமை பறிபோகாதவரை நாம் காதல் செய்வோம்." என்று அன்புமனம் காட்டி அனணத்து நிற்கின்றன. அன்பும் காதலும் கூடலும் வருடலும் இனிமையானவை தான். அதனால் பல பிரிதலின் துயிர் வாட்டி எடுப்பினும் அதன் யதார்த்த நிலையினைப் பல கவிதைகள் பேசுகின்றன. "...உனது நெருக்கம் எனக்குத் தேவையாக உள்ளது ஆனாலும் என் அறிவு எம்மைப் பிரிக்கிறது." பண்பட்ட நவீனத்தின் பெண்மனப் படிமங்கள் இப்படி வெளிப்படுவது தமிழுலகுக்கு முற்றுலும் புதியது. இவை எல்லாமே ஆசிய மனங்களின் போலி வாழ்வின் பாவ்லாக்களை சாய்த்துவிடக்கூடியவை.

நன்றி: http://ciththan.blogspot.com/ மின்னஞ்சல்: ciththar@yahoo.com
புகைப்படம்: தமயந்தி,நோர்வே.

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner