| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| கவிதை! |  
| 
  
			
            
            
              தாஜ் கவிதைகள்!
 சிக்கிமுக்கிக் கல்
 
  நம் மூதாதையர்கள் சிக்கிமுக்கிக் கல்லை
 கண்டு கொண்டபோது
 தெறித்த கனலைப் பற்றவைத்து
 பயன்படுத்தத் தொடங்கினர்
 இருட்டிலிருந்த தங்கள் முகங்களை
 ஒருவருக்கொருவர் காண
 சிறைப்படுத்தியிருந்த காடுகளைக் கொளுத்தி
 விஷமிகளை விரட்டி
 இரத்தத்தை உறிஞ்சிய
 அட்டைகளையும் பொசுக்கி
 பாதைப் பார்த்து அடியெடுத்து
 பொந்துகளை விட்டும் சமதளத்திற்கு வந்தனர்
 காலங்களில் தீயின் பாதுகாப்பு
 வளையத்திற்குள்
 செரிக்க உண்ணவும் உரக்க உறங்கவும்
 நிம்மதி கொண்டனர்
 கற்கால மனிதர்களின் நசிவையும் சிதைவையும்
 ஆய்வு செய்யும் வெளுத்த தோழர் வீட்டில்
 சிக்கிமுக்கிக்கல் பார்க்கக்கிடைத்தது
 அடர்ந்த வெண்தாடியோடு பெரியார் ஒருவரின்
 கனல் முழங்கும் சித்திரக் காலடியில்
 நமது நாகரீகம் நெருப்பில் தொடங்கியது
 என்ற குறிப்புடன்.
 
 
 உட்கடல்
 
 குதுகலமான பொழுதுகளில்
 கடற்கரையோரம்
 நண்டுகள் பிடித்து விளையாட நீ
 வண்ணத்தில்
 சிப்பிகளை சேகரித்தாய்
 மலையேறிக்கொண்டிருந்த
 ஒரு முன் பனிக்காலத்தில்
 நடையின் லாவகத்தோடு
 முன்னால் நீ போய்க் கொண்டிருந்தாய்
 உச்சிப்பொழுது சுடுமணலில்
 வேகம் சுழித்துத் தடுமாற நான்
 பாத ரணங்களோடு
 அழுந்த அடிகளைப் பதித்தபடி
 நீ கடப்பதைப் பார்த்தேன்
 தூரிகையால் உன்னை
 தீட்டிப்பார்த்தபோது
 உயிர்பெற்ற மார்பகங்கள்
 தேம்பி விம்ம
 பறந்து விட்டேன்
 வடிவாய் வடித்து கரமெடுக்க
 நிர்வாண நிலை வேண்டும்
 தரித்த உடுப்புகளை கழட்ட
 உன்னால் மட்டுமல்ல
 என்னாலும் முடியாது.
 
 நேரம் கெட்ட நேரம்
 
 என் பயணங்களை
 இரவில் தான் தேர்வு செய்கிறேன்
 நீண்டதூரம் இருளில் பயணிப்பது
 தவிர்க்க முடியாத அனுபவம்
 சின்னச் சின்ன நட்சத்திரங்கள்
 வெள்ளையாய் கண்சிமிட்டுகின்றன
 முந்தாநாள் பார்த்த முழுநிலவு
 இன்றைக்கு தேய்ந்து கொண்டிருக்கிறது
 கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம்
 கவிழ்ந்து கிடக்கிறது மையிருட்டு
 இருள் பெருக்கம் சுகமானது
 யாருக்கும் யார் முகமும் பிடிபடாது
 இருளில் எல்லோருக்குமே உண்டு
 இன்னொரு முகம்
 தடங்கள்களுக்கும் பதற வேண்டியிராது
 நித்திரை மனிதர்கள் எதையும் அறியமாட்டார்கள்
 வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி
 என் வாகனம் விரைகிறது
 எல்லோரும் தூங்கிச் சோர்ந்து
 கனவுகளில் சஞ்சரிக்கும் நேரம்
 மறுபடியும் பிறக்கலாம்
 திரும்பத் திரும்ப இறக்கலாம்
 வானுக்கும் பூமிக்குமான வெளியில்
 அத்தனையையும் நீண்டு நிம்மதியாக
 போகம் செய்யலாம்
 கலவியில் கசியும் பூரணம் உணர்ந்து
 பூரித்துப் போகலாம்
 தூங்கியவர்களும்
 கனவுகளின் பக்கம் திரிந்தவர்களும்
 புதிய விடியலில் அவரவர் திக்கில்
 எழுந்து முந்தி விரைய
 உறங்க நான் அமைதியானதோர்
 இடம் தேடி அலையக்கூடும்.
 
 satajdeen@gmail.com
 www.tamilpukkal.blogspot.com
 |  
| 
 |  
| © காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |