| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| கவிதை! |  
| காலம் எதிர்பார்த்த கலங்கரை...! - த.சரீஷ் (பாரீஸ்) -
 
               நினைப்பதில் பாதியும்கனவுகளின் மீதியும்
 உடைந்து உடைந்து
 கரைந்து கொண்டே இருக்கிறது
 முன்பனியில் கலந்து...!
 
 பனிமழைச் சாலையில்
 நனைந்த பாதங்களுடன்
 கரைந்த சுவடுகளுக்குப்பின்னே
 தொலைந்த....
 தடயங்களைத் தேடி
 நீயும் நானும்
 ஒவ்வொரு இரவிலும்
 ஒரு நடைபயணம்...!
 
 இன்னும்...
 கொஞ்சம் நடந்தால்
 அந்த மரத்தடி வரும்
 அதையும் தாண்டிச்செல்ல
 கால்நடைகளும்
 கௌதாரிகளும் கொண்ட
 ஒரு மழைக்காலப்புல்வெளி...!
 
 அந்த வெளிகடந்து
 தொடர்ந்து நட...
 கல்லறைகள் தாண்டி
 இன்னும் கொஞ்சத் தூரம்தான்
 அதோ....
 கண்களில் கலங்கரை...
 கறுப்பு யுகங்கள் பல கடந்தபின்பு...!
 
 கடலோரப் பாதைவழி
 சிறுதூரம் செல்ல
 தென்னஞ்சோலை
 அதையும்தாண்டி நட
 ஆட்காட்டிக்குருவி கத்த...
 அடர்ந்த காடுவரும்
 மரக்கிளைகளில் இருந்த
 குருவிகள் மனிதநடமாட்டம் கண்டு
 திடுக்கிட்டு... சிறகடிக்கும்...!
 
 அங்கே...
 சிதறிக்கிடக்கும்
 உடைந்த
 மண்பானைத்துண்டுகள்கலந்த
 மண்ணை அள்ளி
 கையில் எடுத்துப்பார்
 முடிந்த வாழ்வொன்றின்
 தடயங்கள் தெரியும்...!
 
 நிற்கும் இடத்திலிருந்து
 கொஞ்சம்...
 பின்னே திரும்பிப்பார்
 பாசியும் புழுதியுமாய்
 அசைக்கவே முடியாமல்
 இதுதான்...
 என் தாத்தாவுக்கு
 முந்தையரும்
 தாத்தாவும்
 அப்பாவும்
 நானும்
 வாழ்ந்த வீட்டின் அஸ்திவாரம்...!
 
 poet.sharish@gmail.com
 15.02.2007
 |  
| © காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |