இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2007 இதழ் 87 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கவிதை!
ராசி அழகப்பன் கவிதைகள்!
கவிதை வாசிப்போம்....
ஞானம்

விஞ்ஞானத்திற்கு
நன்றி சொல்லவேண்டும்.

மனதின் ஆசைகளை
மறைக்காமல்
செல்லுலாரில் பேசி
சந்தோழமடைய-

நிறைய பேர்
செல்லுலாரில் சிரிக்கிறார்கள்..
நேரில் முறைக்கிறார்கள்.
கண்கள் பேசும்
காலம் குறைந்து
சேட்டிங்கில் சறுக்கி விழுகிறார்கள்.
.ஒரு பக்கம்-
விரல் பட்டால் தர்க்கம்.
மறு பக்கம்-
படாவிட்டால் சுணக்கம்.
வலைதள உலகமும்,
வசீகர நுகர்வும்
பாத அணிகளாய் புகுந்து
சொகுசாய் பயணிக்கிறது.
வள்ளுவன் இன்றிருந்தால்
கூப்பிட்ட குரலுக்கு
வாசுகி-
வெப் கேமில்
விளக்கம் சொல்லியிருப்பாள்.
நாளை-
சேட்டிலைட் குடும்பமே
சீர்திருத்த குடும்பமாகும்..!


இதுதானோ?

புரியவில்லை பெண்ணே!
முன்பு எப்போது பார்த்தாலும்
பேசலாம் என்றாய்!

இப்போது -
எப்போதாவது பேசலாம்
பிழைப்பு நடத்து என்கிறாய்!

அடியே!
காதல்
சம்மணம் போட்டு
கிச்சு கிச்சு மூட்டுவது-
மொத்த மௌனத்திற்கு
அடித்தளமோ?

என்னமோ போ!
காலம் தள்ள வேண்டும் எனும்
கௌரவ வாழ்க்கை
கட்டிப் போடுகிறதோ?

வாழ்வோம்-
மூச்சின் துகளில்
காதல் மறை முகமாய்
கசிகிறதோ என்னவோ?


மனக் குறிப்பு!

அழகழகாய் கனவில் வந்தாய்..
நேரில் -
பார்க்கமலே செல்கிறாய்..

ஒரு வேளை-
உன் கனவில் நானோ?

அதிகமான மௌனம் காத்தாய்!
பேசினால்-
எழ முடியாத சங்கடமோ?

இருக்கலாம்-
நான் பேசிவிட்டு -
மௌனத்தில் கவிழ்பவன்..

நீ
உன் வேலையில்
எப்போதும் கவனமாய்..
நானோ-
உன் விழிப் பார்வைக்கு
ஏங்கும் தவசியாய்..!

அழகாய் வைத்திருக்கிறாய்
வீட்டை..
என்னைக் கலைத்து விட்டு!

நீ
உன் உடலை
கவனமாய் மூடுகிறாய்...
பெண்ணே1
என் இதயம்
உன்னைத் தின்ற பின்!

கவலைப்படாதே!
எண்ணங்கள் விழுந்து
கனவுகளே விளையும்..

நினவு கொள்..!
இழப்பதில்-
சுகம்
மனதில் பெருகும்!
விரும்பும் ரேகைகளோடு!


முடியுமா?

அன்பே1
இருளின் அசைவில்
நீ மின்மினியாய் கிள்ளுகிறாய்!

நீ பார்க்கிறாயோ இல்லையோ-
நான் உன்னை கவனித்தபடியே
கனவு காண்கிறேன்..

ஆமாம்-
கனவு தானே-
காதலின் தித்திப்பு பிரதேசம்..

பெண்ணுக்கு
எவன் கற்றூக் கொடுத்தான்?
ஒன்றும் தெரியாதது போல்
எல்லாம் தெரிந்த பாவனை?

சாயங்கால
சதிராட்ட வண்ண மேகம் போல்
பெண்ணின் பரவச பாவனைகள்!

மூர்ச்சித்து விடுகிற
சொற்களை வீசி விட்டு
ஆகாயத்தில் நடப்பது
பெண்ணுக்கு மட்டுமே வந்த கலை!

என்ன செய்யட்டும்?
காதலிக்காமல்
கருமம் இருக்க முடியவில்லையே?!


என்னடா?

காதல்
இதத்தை சீண்டி விட்டு
புறப்படும் புயலோ?

எப்போது
அவளை நினைத்தாலும்
பதட்டம் பல நூறு மைலில்
பயணிக்கிறது..

எந்த வேலையும்
செய்ய விடாது
அவஸ்தைப்படுத்துகிறது..

என்னவோ-
எல்லோரும் நம்பும் படியாக
இயல்பாக இருக்க முயல்கிறேன்
நம்புவார்களா?

கண் இமையில்
ரேசன் அட்டையுடன்
அமர்ந்து-
முத்தம் கேட்கிறான் முட்டாள்..

எத்தனைமுறை
யாசித்திருப்பேன்..-
வார்த்தைகளில் முத்தம் தந்தபடி...
கவனிக்கப்படாத அறிவிப்புகள் மாதிரி
எனது பார்வை தவிர்த்து
எல்லா இடங்களிலும் பாய்கிறான்..

காமம்-
காதலின் உச்சிதான்..
எனினும்-
கௌரவமாய் களவாடத்
தெரிகிறதா உனக்கு?


rasiazhagappan@yahoo.com

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner