| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க
பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே
பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை
ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக
இருக்க வேண்டுமென்பதில்லை.
 |  
| இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? ads@pathivukal.com
 |  
| Amazon.Ca |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட்டில் மின்னஞ்சல்  editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  | 
| கவிதைகள்! |  
| 
  
    
      ஒரு காடழிப்பு!
 - பட்டுக்கோட்டை தமிழ்மதி -
 
 
     ஒரு தீவில்மனிதர்களை விட
 மரங்களே
 உயர்ந்து தெரிகின்றன.
 
 மண்ணுறவுகளில்
 மனிதர் நெரிசலாய்
 மரங்கள் நெருக்கமாய்.
 
 மனிதனுக்கு மனிதன்
 தடைக்கல் போட
 நடை தொடர
 நதியின் குறுக்கே
 பாலமாகிறது
 மரம்
 
 வெயிலில்
 தான்காய தன்னிழலில்
 யாரென்று
 போயென்று சொல்வதில்லை
 வந்தாரை வாழவைக்கும்
 மரம்.
 
 ஆனாலும்
 காடழிக்க வரும் கால்ககளை குத்த
 முள்ளாய் முளைக்கவும்
 முடிகிறது மரத்துக்கு.
 
 தன்னினம் தழைக்க
 தனிமரம்
 தோப்பாகப் பார்க்கிறது.
 
 தோப்பை தனிமரமாக்க
 வேரறுக்கிறது மனிதமனம்.
 
 மரம்
 வானை பொழியவைக்கிறது
 கருணை மழை
 மனிதர்
 கண்ணை நனைக்க வைப்பது
 கண்ணீர் மழை.
 
 தானசைந்த காற்றில்
 மரம்
 மூச்சு விடவைக்கிறது
 
 குரல்வளை நெரித்து
 மனிதகரம்
 மூச்சடக்கி விடுகிறது.
 
 மனிதராயிருக்க
 மரத்துக்கு தெரிகிறது
 
 மனிதருக்கு தெரிகிறது
 மரமாய்
 மனிதர்களை வெட்டிச்சாய்க்க.
 
 tamilmathi@tamilmathi.com
 |  |  
| 
 |  
| © காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |    |