இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2006 இதழ் 79 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கவிதைகள்!
அந்த நாள் கதாநாயகன்!

- நவஜோதி ஜோகரட்னம் -
 

நவஜோதி ஜோகரட்னத்தின் கவிதை.
அவன்
நரம்புகள்
புடைத்து நின்ற கரங்கள்
நடுங்கித் துடித்தது
பஞ்சடைந்து
மங்கலாகி விட்ட கண்கள்
உனக்கும் எனக்குமாக
உலகத்தைக் காப்பாற்றிய நினைவுகள்
பிரம்பை
பிடித்த கரங்கள்
சண்டைப் பிளேனை
பறக்க விட்ட நினைவுகள்
பழைய காட்சிகள்
வீரமும் வெற்றியும்
வதைகளும் வலியும்
அவளிடத்தில்
அந்தச் செவிட்டுக் காதுகளில்

நினைவில் தான்
அந்த யுத்தம்
வரண்ட குன்றுகள்
பசுமையைத் தேடி
அலையும் கண்களில்
பாலைவனம்
சுருக்கிஇ வருத்துகின்ற
காய்ந்த தோல்கள்
அணிவகுப்புஇ வீரநடை
வரண்ட சூட்டில்
மயக்கும் நிலையில்
தாகத்தின் கொடுமை
அவனை இன்னும் வருத்துகிறது
திறந்த ஊனத்து(க்)
காயங்கள்
வருத்தும் உள்ளம்
முனகிய தோழர்கள்
பதறிய
மரணப் பார்வைகள்
இன்றும்
யாராவது வாழ்ந்துகொண்டிருந்தால்
எப்படி மறக்க முடியும்?

குறாவும் குளிரில்
அந்தச் சமுத்திரம்
இரும்புகளைச் சுமந்த
கடலும்
அவனை அழைக்கிறது
உயிர்களைக் காப்பாற்ற(த்)
தொங்கிய தோணிகள்
பிரமாண்டமான
நெருப்பைக் கக்கி
உயிர்கள் பொடியாக(ப்)
பயங்கர ஓசை
கொடுமை
ஹிட்லரின் கட்டளை
கடமையில் - கப்பலோட்டிகள்
செலுத்திக் கொண்டிருந்தார்கள்
யாருக்குத்தான் தெரியும்
அவளுடைய நினைவுகளும்
அமைதியில் ஓடியது
அவசர சிகிச்சை
வீங்கி வழிந்த காயங்களுக்கு
இரவு வேளைகளில்
மின்மினிப் பூச்சியாக
இடையிடையே அசைந்த
இனம் புரியாத
பாலை வெளிகள். .
ஒரு நாள்
என்றுமே கேட்டிருக்காத
வெடிச்சத்தம்
செவிடாக்கியதுஇ ஊமையாக்கியது
உயிரைத் தூளாக்கியது
உயிரைத் தூளாக்கியது
குமையும் எண்ணங்கள்
யாரிடமும் விவரிக்கவில்லை. .

அதிலிருந்து
வழிவந்த வாரிசுகள்
நிட்சயம்
மரியாதைக்குரியவர்கள்
தேவைப்பட்ட போதெல்லாம்
விழிமாற்றி ; வழிமாற்றி ; மொழிமாற்றி
குருதியில் நனைந்தவர்கள்
நேற்றைய விருதுகள்
அந்தக் கதாநாயகனின்
கனவகளின்
மனசு கேவும்
மாற்றத்தின் விழுதுகள்

( ‘திருவருள்’ சஞ்சிகையில் 2004)

navajothybaylon@hotmail.co.uk

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner