| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| கவிதை! |  
| 
  
			
            
            
              வந்தே மாதரம் எனும் போதினிலே!
 - சி. ஜெயபாரதன், கனடா -
 
  எந்தையும் தாயும் பூரித்து உலாவி,
 முந்தையராய் ஆயிரம் ஆண்டுகள் நிலவி
 சிந்தையில் கோடி எண்ணம் விதைத்த,
 தாயக பாரதத்தை
 வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று
 வாயுற வாழ்த்தும் போதினிலே
 எந்த மதவாடை அடிக்குது?
 என்னுடன் பிறந்த பாரத
 பந்துக்களே!
 வந்தே மாதர மென்னும் கீதம்
 சொந்த வழிபாடா
 இந்து மதவாதி களுக்கு?
 
 முந்தையப் போராட்டத்தில்
 மராட்டிய சிங்கங்கள்
 முதல் விடுதலை முழக்கமாய்ப் பாடிப்
 பிரிட்டன் வயிற்றைக் கலக்கிய
 வந்தே மாதர கீதம்
 வடிவ வழிபாடா?
 
 வரலாறு நுகராமல்
 சிறகொடிந்த ஈசல்கள்,
 பிறந்த நாட்டை துறக்கின்றன!
 அசோகனின் ஆழித் திலகம் ஒளிரும்
 மூவர்ணக் கொடிக்கு
 முடிவணங்கி மதிப்ப ளிப்பது
 வடிவ வழிபாடா?
 
 பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்
 கற்றவர்க்கு
 நற்றவத் தெய்வம்!
 மற்றவர்க்கு
 வெற்றுத் தோற்றமா?
 எம்மதமும் சம்மதம் என்று
 வாழையடி வாழையாய்,
 வரவேற்று வந்தது பாரதம்,
 நிம்மதி யாக வாழ!
 
 பெற்ற தாயும் தெய்வந்தான்!
 பிறந்த நாடும் தெய்வந்தான்!
 நட்ட கல்லும் தெய்வந்தான்!
 வெட்ட வெளியும் தெய்வந்தான்!
 நெட்டை மதிலும் தெய்வந்தான்!
 சக்தி, சிவனும் தெய்வந்தான்!
 ஆசிய புத்தர் தெய்வந்தான்!
 ஏசு மகானும் தெய்வந்தான்!
 நபி நாயகம் தெய்வந்தான்!
 குரு நானக் தெய்வந்தான்!
 
 கீதையும், குறளும் வேத நூல்!
 பைபிள், குரானும் தேவ நூல்!
 தெய்வ முள்ள தெனின் எல்லாம்
 தெய்வந்தான்!
 தெய்வ மில்லை எனின் எதுவும்
 தெய்வ மில்லைதான்!
 
 உலகக் கரங்கள் ஒன்று கோர்த்த
 ஐக்கிய நாட்டுப் பேரவை,
 ஒலிம்பிக் மேடையில்,
 வெற்றி வீரர்
 கொடி வணக்கம் செய்வது
 வடிவ வழிபாடா?
 பிறந்த நாட்டை மதிக்காத மாந்தர்
 துறப்பர் தமது முத்திரை!
 
 Jayabarat@tnt21.com [October 10, 2006] (R-1)
 |  |  
| 
 |  
| © காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |