கீதாஞ்சலி (75) 
நீ எமக்களித்த கொடைகள்!
      
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
      
எமது எல்லாத் தேவைகளையும்
நிறைவேற்றி வைக்கும்,
நீ எமக்களித்த
மனிதக் கொடைகள்!
எனினும் நாங்கள்
ஓடி வருவோம்
உன்னிடம் மீண்டும்,
கொடைகள் வற்றாத போதும்!
வயல்புறம், ஊர்ப்புறம்
வழியாகக் கடந்து வரும்
ஆறோட்டம்
தவறாமல் புரியும்,
அனுதினப் பணிகளை!
ஆயினும் தொடர்ந் தோடும் நீரோட்டம்
நெளிந்தோடி நின்
பாதங்களைக் கழுவப்
பாய்ந்து செல்லும்!
நறுமணம் பரப்பிக்
காற்றை யினிதாக்கி மணக்க வைக்கும்
பூக்களின் வாசம்!
எனினும் மலர்களுக்குப்
பணி முடிவு,
உனக்கு அர்ப்பண மாவது!
வணங்கி உன்னைத் துதிப்பதால்,
ஒருபோதும்
வறுமை ஆவதில்லை,
சிறு உலகம்!
கவிஞர் படைக்கும் பாக்களில்
அவருக்கு உவப்ப ளிக்கும்
திருவாய் மொழிகளைக்
கருவாய் எடுத்துக் கொள்!
ஆயினும்
அப்பாடல்கள் முடிவாகக் கூறும்
உட்பொருள்,
ஒப்பில்லா உன்னைத்தான்
சுட்டிக் காட்டும்!
      
jayabarat@tnt21.com
நீ எமக்களித்த கொடைகள்!
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எமது எல்லாத் தேவைகளையும்
நிறைவேற்றி வைக்கும்,
நீ எமக்களித்த
மனிதக் கொடைகள்!
எனினும் நாங்கள்
ஓடி வருவோம்
உன்னிடம் மீண்டும்,
கொடைகள் வற்றாத போதும்!
வயல்புறம், ஊர்ப்புறம்
வழியாகக் கடந்து வரும்
ஆறோட்டம்
தவறாமல் புரியும்,
அனுதினப் பணிகளை!
ஆயினும் தொடர்ந் தோடும் நீரோட்டம்
நெளிந்தோடி நின்
பாதங்களைக் கழுவப்
பாய்ந்து செல்லும்!
நறுமணம் பரப்பிக்
காற்றை யினிதாக்கி மணக்க வைக்கும்
பூக்களின் வாசம்!
எனினும் மலர்களுக்குப்
பணி முடிவு,
உனக்கு அர்ப்பண மாவது!
வணங்கி உன்னைத் துதிப்பதால்,
ஒருபோதும்
வறுமை ஆவதில்லை,
சிறு உலகம்!
கவிஞர் படைக்கும் பாக்களில்
அவருக்கு உவப்ப ளிக்கும்
திருவாய் மொழிகளைக்
கருவாய் எடுத்துக் கொள்!
ஆயினும்
அப்பாடல்கள் முடிவாகக் கூறும்
உட்பொருள்,
ஒப்பில்லா உன்னைத்தான்
சுட்டிக் காட்டும்!
jayabarat@tnt21.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991

