 கடந்த 
              ஒன்பது வருடங்களாக லண்டன் வாழ் நாவலாசிரியை இராஜேஸ்வரி 
              பாலசுப்பிரமணியத்தாலும் , கோவை ஞானி என்றழைக்கப்படும் முற்போக்குத் 
              தமிழ் எழுத்தாளர் திரு பழனிசாமி அவர்களாலும் பெண்களுக்கான 
              சிறுகதைப்போட்டி இந்தியாவிற் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆண்களின் 
              சொத்தாகவிருந்துகொண்டு, ஆண்களுக்குப்பிடித்த பெண் எழுத்தாளர்களை 
              மட்டும் பிரபலப்படுத்தும் தமிழ் இலக்கியத்துறைக்குள் ஆரம்பகால 
              எழுத்தாளர்களாகவிருக்கும் பெண்களின் படைப்புக்களுக்கு இடம் கொடுத்து 
              அவர்களை முன்னேற்ற இந்தப் போட்டி தொடங்கப்பட்டது. இதுவரை கிட்டத்தட்ட 
              500 பெண்கள் இந்தப்போட்டிக்கு எழுதியிருக்கிறார்கள் இந்தப்போட்டிக்கு 
              வந்து பரிசு பெற்ற சிறந்த கதைகள் புத்தக உருவில் 
              வந்திருக்கின்றன.இந்தியச் சர்வகலாசாலையிலும் பாடப்புத்தகமாக 
              வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து , ''இந்த 
              ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள்'' பற்றிய 
              ஆராய்ச்சிகளைச் (Women's writings--an 
              anthropoligal view) சில பெண்னியவாதிகள் 
              மேற்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 
              ஒன்பது வருடங்களாக லண்டன் வாழ் நாவலாசிரியை இராஜேஸ்வரி 
              பாலசுப்பிரமணியத்தாலும் , கோவை ஞானி என்றழைக்கப்படும் முற்போக்குத் 
              தமிழ் எழுத்தாளர் திரு பழனிசாமி அவர்களாலும் பெண்களுக்கான 
              சிறுகதைப்போட்டி இந்தியாவிற் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆண்களின் 
              சொத்தாகவிருந்துகொண்டு, ஆண்களுக்குப்பிடித்த பெண் எழுத்தாளர்களை 
              மட்டும் பிரபலப்படுத்தும் தமிழ் இலக்கியத்துறைக்குள் ஆரம்பகால 
              எழுத்தாளர்களாகவிருக்கும் பெண்களின் படைப்புக்களுக்கு இடம் கொடுத்து 
              அவர்களை முன்னேற்ற இந்தப் போட்டி தொடங்கப்பட்டது. இதுவரை கிட்டத்தட்ட 
              500 பெண்கள் இந்தப்போட்டிக்கு எழுதியிருக்கிறார்கள் இந்தப்போட்டிக்கு 
              வந்து பரிசு பெற்ற சிறந்த கதைகள் புத்தக உருவில் 
              வந்திருக்கின்றன.இந்தியச் சர்வகலாசாலையிலும் பாடப்புத்தகமாக 
              வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து , ''இந்த 
              ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள்'' பற்றிய 
              ஆராய்ச்சிகளைச் (Women's writings--an 
              anthropoligal view) சில பெண்னியவாதிகள் 
              மேற்கொண்டிருக்கிறார்கள்.ஆடம்பர விளப்பரமில்லாமற் தொடரும் இந்தப்பணியின் பின்னணியில் தமிழகத்தைச்சேர்ந்த பல ஆண், பெண் இலக்கிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள். போட்டிக்கு வரும் சிறுகதைகளைப்படிப்பதும் தேர்ந்தெடுப்பது, புத்தகமாக வெளிவரப்பண்ணுவது போன்ற பல வேலைகள், ஞானி அய்யாவாலும் அவருடைய இலக்கிய நண்பர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றம் அவர்களின் கல்வி வளர்ச்சியிற் தங்கியிருக்கிறது. பத்திரிகைகளைப்படிப்பது கல்வித்தரத்தை, பொது அறிவை, உலக ஞானத்தை விருவுபடுத்த உதவுகிறது. இந்தியாவில் மட்டுமல்லமல் உலகிற் பல இடங்களில், பத்திரிகையுடனான பெண்களின் தொடர்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆண்களுக்குப்பிடிக்காத, ஆண்களின் தத்துவங்களை முன்னெடுக்காத பெண்கள் படைப்புக்கள் குப்பையிற் போடப்படுகின்றன.
எழுத்துக்கள் என்பது மனித எண்ணங்களின் வடிவங்களில் ஒன்று. அடிமட்டத்தில் வாழும் பெண்களின் எண்ணங்களுக்கு இடம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க, முன்னேற்ற, பிரபலப்படுத்த, இராஜேஸ்வரி சிறுகதைப்போட்டிமூலம் பல தமிழ்நாட்டுப் பெண்ணியவாதிகள் பாடுபடுகிறார்கள். 2006ம் ஆண்டுக்கான சிறுகதைபோட்டிகளுக்கு உலகம் பரந்து வாழும் தமிழ்ப்பெண் எழுத்தாளர்களிடமிருந்து படைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெண் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை 8-10 பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதவும். நவம்பர் 15ம் திகதிக்கு (15.11.06) முன் உங்கள் படைப்புக்களை அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
2006 பெண்கள் சிறுகதைப்போட்டி,
K Palanisami
24, VRV Nagar, Gnambgai Mill Post,
Coimbatore 641029
Tamil Nadu, South India,
INDIA
தகவல்: rajesbala@hotmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




