| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| அறிவித்தல்! |  
| 
  
  
    
      
        
          
            
              
                
                  
                    
                      
                        
                          அன்புடன் கவிதைப் போட்டி 
                          அறிவிப்பு!
                          இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்! 
 "இதயம் மீறும் எண்ணங்களால் 
                          நாம்
 எழுந்து பறப்போமே
 இதய நிழலில் இதயம் கிடத்தி
 இன்னல் துறப்போமே"
 
 
  எனப் 
                          பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு 
                          இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் 
                          உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என 
                          உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...  
                          உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் 
                          இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் 
                          ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் 
                          ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 
                          'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது. 
 போட்டி விபரம்:
 கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.
 
 1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை
 வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை 
                          யுனித்தமிழில் (Unicode) தட்டச்சு செய்து 
                          அனுப்பவேண்டும். (யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 
                          'அன்புடன்' உதவியை அணுகலாம். மின்னஞ்சல்:
                          
                          anbudansupport@gmail.com)
 
 2. இசைக்கவிதை* - பாடச்சுவை
 சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் 
                          கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட 
                          கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.
 
 3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை
 சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை 
                          உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. 
                          படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு 
                          அனுப்பப்படவேண்டும்.
 
 4. படக்கவிதை** - 
                          பார்க்கச்சுவை
 புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில 
                          புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் 
                          கவிதையைத் தரவேண்டும்.
 
 5. காட்சிக்கவிதை* - 
                          இயக்கச்சுவை
 இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் 
                          தரவேண்டும்.
 
 *இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது 
                          முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் 
                          என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும் 
                          படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.
 
 ** படக்கவிதைக்கான படங்கள் இம்மடலுடன் 
                          இணைக்கப்பட்டுள்ளது.
 
 விதிமுறைகள்:
 1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் 
                          தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் 
                          விருப்பத்திற்கு விடப்படுகிறது.
 
 2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக 
                          நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.
 
 3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர், எந்தப் 
                          படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப 
                          வேண்டுகிறோம். அப்படிக் குறிப்பிடப்படாத படைப்புகள் 
                          பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.
 
 4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க 
                          வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த 
                          படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை 
                          எங்கும் படைப்பைப் பிரசுரித்தல் கூடாது. முடிவுகள் 
                          வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளைப் பிரசுரம் 
                          செய்துகொள்ளலாம்.
 
 5. படைப்பாளியின் பெயர், தொடர்பு எண் & முகவரி ஆகியவை 
                          ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப்பட 
                          வேண்டும். அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் 
                          வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.
 
 6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 
                          (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) 
                          இந்திய நேரம் இரவு 12.00 மணிக்குள்.
 
 7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் 
                          அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே 
                          பெற்றுக் கொள்கிறோம்.
 
 8. படைப்பை
                          
                          anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் 
                          முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் 
                          குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும் படைப்புகள் 
                          ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
 
 9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் 
                          கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் 
                          ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் 
                          ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை 
                          மட்டும்
                          
                          anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் 
                          முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.
 
 10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
 
 பரிசு:
 மொத்தப் பரிசு மதிப்பு: ரூ. 10,000/-
 ஒவ்வொரு பிரிவிற்கும்:
 முதல் பரிசு: ரூ. 1000/-
 இரண்டாம் பரிசு: ரூ. 500/-
 ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-
 
 எனப் பகிர்ந்தளிக்கப்படும். பரிசுகள் பணமாக 
                          வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக 
                          வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் 
                          படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி 
                          வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் 
                          புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் 
                          தரவேண்டியிருக்கலாம்.
 
 முடிவுகள்:
 சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.
 
 வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். 
                          பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் 
                          சாரலால் நனைத்திடுங்கள்.
 
 நன்றி.
 
 **படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்புகளைக் காண்க.
 
 
 
 
 
 
 
 
 
 தகவல்: சேதுக்கரசி 
sethukkarasi@gmail.com |  
| © காப்புரிமை 2000-2007 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |