| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| நிகழ்வுகள்! |  
| தமிழ்ச்சங்கம் (கொழும்பு): “புலம் பெயர் 
  இலக்கியம் வாழ்புலத்தேடல்” 
 
  பிரதி 
  வெள்ளி தோறும் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்திலே இடம் பெறும் படித்ததும் 
  பிடித்ததும் நிகழ்விலே 26.9.09 அன்று “புலம் பெயர் இலக்கியம் வாழ்புலத்தேடல்” 
  எனும் தலைப்பிலே கவிஞர் திரு மட்டுவில் ஞானக்குமாரன் உரை நிகழ்தினார். கொழும்புத் 
  தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற இன் நிகழ்விலே 
  பேராசிரியர் சபா ஜெயராசா முன்னாள் பாராளூமன்ற உறுப்பினர் மா.கா ஈழவேந்தன உட்பட 
  பெருமளவிலான இலக்கிய வாதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். வாழ்துரை 
  வழங்கியிருந்தனர். .
 
  தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலை திருமதி இரஐனி சங்கரலிங்கம் வழங்கியிருந்தார். 
  தொடர்ந்து அறிமுக உரையை திருமதி வசந்தி தயாபரன் ஆற்ற 'புலம்பெயர் இலக்கியம் 
  வாழ்புலத்தேடல்' எனும் தலைப்பினில் கவிஞர் மட்டுவில் சோ ஞானக்குமாரன் பிரதான 
  உரையை ஆற்றினார்.புலம்பெயர் இலக்கியம் அதன் போக்குகள் அவற்றை 
  பாதிப்புக்குள்ளாகாதவாறு பதிவுக்குள்ளாக்குவதன் அவசியம் அங்குள்ள வேற்று மொழியின் 
  தாக்கம் பண்பாட்டு சிதைவுகள் என்ற பல தலைப்புகளில் அவர் ஆற்றிய சிறப்பான உரையானது 
  சபையோரை வெகுவாகக் கவர்ந்திருந்தது. தொடர்ந்து கருத்துக் கூறிய முன்நாள் நாடாள 
  மன்ற உறுப்பினர் மா.கா.ஈழவேந்தன் “தமிழினத்தின் புலம் நோக்கிய நகர்வானது முதலாம் 
  இரண்டாம் தலைமுறைகளை அதிகம் பாதிக்காது விடினும் 3ம் தலை முறைகள் 
  பாதிப்புக்குள்ளாவதை எப்படி தடுப்பது என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்குரிய ஒரே 
  தீர்வு தமிழர்களுக்கு ஒரு தேசம் உருவாக வேண்டும் என்றார். 
 இறுதியாக இதைப்பற்றிய சபையோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன். தமிழ்த்தாய் 
  வாழ்த்துடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
 
  நிகழ்வுக் காட்சிகள் சில.. 
 படம் 1 தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலை திருமதி இரஐனி சங்கரலிங்கம்.படம் 2 வரவேற்புரை நிகழ்த்துகிறார் திருமதி 
  வசந்தி தயாபரன்.
 படம் 3 கவிஞர் ஞானக்குமாரன் உரையாற்றுகிறார்.
 படம் 4. நிகழ்விலே கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்
 maduvilan@hotmail.com |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |