இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2007 இதழ் 96  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

நம்பிக்கை அளித்த சிட்னி இளையோர்!

- பராசக்தி சுந்தரலிஙகம் (ஆஸ்திரேலியா)

'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்"


போரம்மா! போரம்மா! என்ற பாடலுக்கு இளம் பெண்களும் ஆண்களுமாக மேடையிலே புதிய கூத்து படைக்கத் தொடங்குகிறார்கள்இந்தப் பாடல் படிப்படியாக உச்சஸ்தாயியில் ஏறி மெதுவாக இறங்கிக்கொண்டிருக்கிறது. மேடையிலே தமிழ் இளையோர் இந்த தாள கதிக்கு ஆடிக் கொண்டிருக்கின்றனர். மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளம். கண்ணீர் வழிய எழுந்து நின்று நீண்ட கரகோஷம் செய்து எழுச்சி நடனம் ஆடிய இந்த இளையோரை நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறது. மக்கள் கண்களில் வழிந்தது துன்பக்கண்ணீரல்ல. அது ஆனந்தக்கண்ணீர். பேரிடிகளால் தவித்துக்கொண்டிருந்த மாவீரர் குடும்பங்களுக்கும் ஏனைய தமிழ் உறவுகளுக்கும் இந்த இளையோர் நம்பிக்கை ஊட்டிவிட்டார்கள். இந்த ஆடலை இவர்களே சிந்தித்து நெறிபடுத்தினார்கள் என்பதுதான் புதுமை. மண்டபத்திலே மின்சார வெளிச்சம் மெதுவாக ஒளி குறைகிறது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஆடல் ஆரம்பிக்கிறது.

'நித்தியப் புன்னகை அழகன் இங்கே
மீள்துயில் கொள்ளுகின்றான.
நாங்கள் தொட்டு எழுப்பவும்
கூவி அழைக்கவும்
ஏதும் பேசாமல் உறங்குகின்றான்.
உன்னை இழந்தது உண்மையா?
பதில் சொல்லையா எங்கள் செல்வமே!"


முன்னாலே இளையோர் ஒருவர் கையிலே விளக்கை ஏந்தியபடி வருகிறார் - எல்லாமே தாள கதிக்கு. பேழையில் மந்திரப்புன்னகை செல்வனின் வித்துடல் இருப்பதாக பாவனைஎன்ற புதுவையாரின் பாடல் சாந்தனின் குரலிலே உருக்கமாக ஒலிக்கத்தொடங்குகிறது. நான்கு இளையோர் புலிக் கொடி போர்த்திய பேழையை தமது தோளிலே சுமந்தபடி மெதுவாக நடந்து வருகின்றனர். முன்னாலே இளையோர் ஒருவர் கையிலே விளக்கை ஏந்தியபடி வருகிறார் - எல்லாமே தாள கதிக்கு. பேழையில் மந்திரப்புன்னகை செல்வனின் வித்துடல் இருப்பதாக பாவனை. மண்டபத்திலிருந்த மக்களுக்கூடாக இந்த ஊர்வலம் நகர்ந்தபோது பார்வையாளர்களுக்கு மெய் சிலிர்க்கிறது. மெதுவாக அந்தப் பேழையை அதற்காக அமைக்கப்பட்ட மேடை மீது வைத்து வணங்கி நிற்கிறார்கள் இந்த இளையோர். திடீரென அந்த மௌனத்தைக் கலைத்துக்கொண்டு பறை ஒலி கேட்கிறது. இளையோர் ஒருவர் பறையை ஏற்ற இறக்கத்துடன் ஒலிக்கச்செய்கிறார் - ஊனையும் உயிரையும் உலுப்பிய பறை ஒலி அது! எமது மண்ணுக்கே உரிய பறை ஓலி. போர்ப் பறையா? மரணவீட்டுப் பறையா? பார்வையாளர்கள் உறைந்து போகிறார்கள். சிலர் வெம்புகிறார்கள். சிலர் பொங்கும் கண்ணீரை அடக்கப் பார்க்கிறார்கள். இது பாவனை - ஒரு நாடகம்! ஆனால் அதுதான் உண்மை! யதார்த்தம்! சிங்கள அரசு கொன்றொழித்த சமாதானப்புறாவின் இறுதி யாத்திரையை நேரிலே கொண்டு வந்துவிட்டார்கள் இந்த இளையோர். ஒரு பெரிய செய்தியை சொல்லிவிட்டார்கள் இந்த மௌன நாடகத்தின் மூலம்.

தொடர்ந்து வந்தது சங்காரம்!  ஊழிக்கூத்து!

'போரம்மா! போரம்மா!
உனையன்றி யாரம்மா?
போரம்மா! போரம்மா!"


 இளம் பெண்களும் ஆண்களுமாக மேடையிலே புதிய கூத்து படைக்கத் தொடங்குகிறார்கள். பாட்டும் ஆட்டமுமாக என்ற பாடலுக்கு இளம் பெண்களும் ஆண்களுமாக மேடையிலே புதிய கூத்து படைக்கத் தொடங்குகிறார்கள். பாட்டும் ஆட்டமுமாக
மேடை அதிர்கிறது. போரிலே வீழ்ந்த மாவீரரை ஏந்தியபடி ஆட்டம் தொடர்கிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய கலைவடிவங்கள் இந்த ஆட்டத்திலே இணைகின்றன - சிலம்பமும் காவடியும் கூத்தும் கும்மியும் களரியுடன் பின்னிப் பிணைகின்றன. புதிய வடிவங்கள் பிறக்கின்றன. நியூசிலாந்து நாட்டு பழங்குடிகளின் ஹக்கா நடனம் இந்த வடிவங்களுடன் இணைந்து வீறுபெற்று எழுகிறது. மேடையா? போர்க்களமா? என்ற சந்தேகம் தோன்றுகிறது. இது வேலன் வெறியாட்டமா!! இதைப்பார்த்தபோது ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் மௌனகுரு (அப்பொழுது அவர் மாணவர்) மேடையில் ஆடிய 'சங்காரம்", 'கந்தன் கருணை" நினைவுக்கு வருகிறது. அந்த ஆட்டத்தை அவருக்குப்பின்னர் யாருமே அப்படி ஆடவில்லை என்றுதான் செல்லவேண்டும். இன்று இந்த இளையோரின் ஆடலைப் பார்த்ததும் நம்பிக்கை பிறக்கின்றது. மனம் சோர்ந்துபோயிருந்த புலம்பெயர் மக்களுக்கு எங்கள் இளையோரின் ஆழமான தாயகப்பற்று புதிய நம்பிக்கையை தோற்றுவித்துவிட்டது என்பது தெளிவாகியது.

'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனைகூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ?"

என்று சும்மாவா அன்று பாரதி பாடினான்?

இவர்களிடமிருந்து நாம் நிறையவே எதிர்பார்க்கிறோம். புதிய ஆடல் வடிவங்கள் பல தோன்ற வேண்டும்.  இந்த இளையோரை வாழ்த்துகிறோம்இவர்களிடமிருந்து நாம் நிறையவே எதிர்பார்க்கிறோம். புதிய ஆடல் வடிவங்கள் பல தோன்ற வேண்டும்.  இந்த இளையோரை வாழ்த்துகிறோம்

'உண்மையின் அழகும் அழகின் உண்மையும் இரண்டறக் கலக்கும் இடத்தில் உன்னதத்தை தரிசிக்க முடியும்." என்ற பிளேட்டோவின்
வாசகம் இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.  இளையோரின் இந்த முயற்சி வரவேற்கப்படவேண்டியது. சிட்னியில் மாத்திரமல்ல வேறு இடங்களிலும் இவர்கள் இதை மேடையேற்றவேண்டும். இவர்களிடமிருந்து நாம் நிறையவே எதிர்பார்க்கிறோம். புதிய ஆடல் வடிவங்கள் பல தோன்ற வேண்டும்.  இந்த இளையோரை வாழ்த்துகிறோம்.

parasundha@gmail.com
 


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner