பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
நிகழ்வுகள்! |
பாரிஸ்: 'இளங்கோவன் கதைகள்' நூல்
வெளியீடு!
'தமிழில்
சிறுகதைத்துறை வளர்ச்சிபெறத் தொடங்கிய காலத்தைத், தமிழகத்தில்
'மணிக்கொடிக் காலம்" என்பதுபோல, ஈழத்தில் 'மறுமலர்ச்சிக் காலம்" எனக்
குறிப்பிடுவர். அந்தக் காலத்தில் வைத்திலிங்கம், சம்பந்தர்,
இலங்கையர்கோன், அ. செ. முருகானந்தம் ஆகியோருட்படச் சிலர்
சிறுகதைத்துறையின் முன்னோடிகளாக முகிழ்ந்தனர். அடுத்த தலைமுறையில்
பலர் சிறந்த முற்போக்குக் கதாசிரியர்களாக வந்தனர். சாகித்திய மண்டலப்
பரிசுகளும் உற்சாகமளித்தன. இன்று, புலம்பெயர்ந்தவர் மத்தியில் பலர்
சிறுகதைகள் எழுதிவருகின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் தாம் பெற்ற
அனுபவங்களின் வெளிப்பாடுகளாகச் சிறந்த சிறுகதைகளைச் சிலர் அற்புதமாக
எழுதிவருகின்றனர். அத்தகையவர்களில் குறிப்பிடத்தக்கவராக இளங்கோவன்
இருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள், வானொலி - தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் மற்றும் கலைத்துறை யாவற்றிலும் ஈடுபட்டுப்
பாராட்டுக்கள் பெற்றவராக இளங்கோவன் விளங்குகிறார். பல்துறை
ஆளுமைபெற்ற அவர் பிரான்ஸ் - துலூஸ் மாநகரில் வசிப்பது, இந்நகரில்
வசிக்கும் ஈழத்தமிழர் யாவரும் பெருமைப்படத்தக்கதாகும்." இவ்வாறு
'மறுமலர்ச்சிக் கால" மூத்த எழுத்தாளர் தி. நடனசபாபதி சர்மா, பிரான்ஸ்
- துலூஸ் மாநகரில் கடந்த 3-ம் திகதி (03 - 12 - 2006)
ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற்ற கலை இலக்கிய விழாவுக்குத்
தலைமைவகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
இவ்விழாவில்
முக்கிய நிகழ்வாக 'பல்கலை வேந்தன்" வி. ரி. இளங்கோவனின் 'இளங்கோவன்
கதைகள்" நூல்வெளியீடு இடம்பெற்றது. 'கலை இலக்கிய விருந்து" என்ற
பெயரில் துலூஸ் மாநகரில் முதன்முறையாக நடைபெற்ற இந்த கலை இலக்கிய
விழாவில் துலூஸ் மாநகரில் வசிக்கும் தமிழர்கள் குடும்பத்தோடு
கலந்துகொண்டு சிறப்பித்தனர். சுற்றுப்புற நகரங்களில் வசிப்போரும்
பெருமளவில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட 'கல்விச் சேவையாளர்"
சி. காராளபிள்ளை பேசுகையில், 'வள்ளுவன் வாக்குக்கொப்ப, இளங்கோவனின்
தந்தையார் தமது கடமையை திறம்படச்செய்து தம்மக்கள் எல்லோரையும்
கல்வியில் முன்னிருத்தியுள்ளார். அதேபோலப் பிள்ளைகளும் கலை
இலக்கியம், சட்டம், மருத்துவம் எனச் சகலதுறைகளிலும் முன்னணி
வகிப்பவர்களாகத் தந்தையின் பெயரை நிலைநிறுத்தியுள்ளனர். ஒரே
குடும்பத்தில் அத்தனைபேரும் சாதனையாளர்களாகத் திகழ்வது அரிது.
தீவகத்திற்குப் பெருமைசேர்க்கின்ற வகையில் முன்மாதிரியாக இளங்கோவன்
சகோதரர்கள் திகழ்வது பாராட்டுக்குரியதாகும். கண்டவர் எல்லாம் பேனா
பிடிக்கும் இக்காலத்தில், சமூக அக்கறையோடு படைப்புகளைத்தரும்
இளங்கோவன் இடதுசாரியாக, மக்கள் போராட்டங்களில் கலந்து தன்னைப்
புடம்போட்டுக்கொண்டவர். மிக இளம்வயதிலேயே அரசியல், கலை இலக்கியச்
சாதனையாளர்களோடு பழகும் வாய்ப்பு அவரைக் கலை இலக்கியத்துறையில்
பக்குவப்படுத்தியிருக்கிறது. அவர் பிரான்ஸ் நாட்டில் வாழ்வது
எம்தமிழ்மக்களுக்குப் பெருமைதருவதாகும். அவரை நன்கறிந்தவன்
என்றவகையில் இன்று அவரது கலை இலக்கியத்துறை வளர்ச்சியினைப்
பாராட்டுவதில் மகிழ்வடைகிறேன்" என்றார்.
சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொண்ட 'கலைஞர் காவலர்" வண்ணை தெய்வம்
பேசுகையில், 'இளங்கோவன் படைப்புகளில் கவிதைகள் சிறந்தனவா, கதைகள்
சிறந்தனவா என்று கூறமுடியாத வகையில் அவர் எல்லாவற்றிலும் முன்னணிப்
படைப்பாளியாகத் திகழ்கிறார். கவிதைகள், இலக்கியப் பேச்சுக்கள் மூலம்
சபையோரை இலகுவில் கவர்ந்துவிடும் வல்லமை அவருக்குண்டு. இன்று
சிறுகதைகள் மூலம் இன்னொரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். தனது
சகோதரர்களின் ஆற்றல்களையும் விஞ்சி வளர்ச்சிகண்டு வருவது, அவரை நன்கு
தெரிந்த எமக்குப் பெருமையளிக்கிறது. அவரது முயற்சிகள் யாவற்றுக்கும்
புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியிலிருந்து ஒத்துழைப்புக்
கிடைத்துவருவதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகவிருக்கிறது"
என்றார்.
மூத்த எழுத்தாளர் தி. நடனசபாபதி சர்மா, நூலாசிரியர் வி. ரி.
இளங்கோவனுக்குத் துலூஸ் மாநகரத் தமிழ்மக்கள் சார்பில் பொன்னாடை
போர்த்திப் பூமாலை போட்டு வாழ்த்துத் தெரிவித்துக் கௌரவித்தார்.
கலைஞர் அ. அமிர்தநாதர் பேசுகையில், 'யாழ்நகரில் எமது பகுதியான
நாவாந்துறையில் சில வருடங்களாக வைத்தியப் பணிபுரிந்த இளங்கோவன்,
பல்துறை ஆளுமை மிக்கவர் என்பதை யான் நன்கறிவேன். ஜக்கிய நாடுகள்
தொண்டராகப் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் மூலிகை மருத்துவப் பணிபுரிந்து
பாராட்டுக்கள் பெற்றவர். அவர் முற்போக்குச் சிந்தனையாளர். அவரது
படைப்புகள் மக்கள் நலம் சார்ந்து விளங்கும் என்பதில் ஜயமில்லை"
என்றார்.
மூத்த எழுத்தாளருக்குக் கௌரவம்!
மறுமலர்ச்சி
கால மூத்த எழுத்தாளரும், தற்போது பிரான்ஸ் - துலாஸ் மாநகரில்
வசிப்பவருமான தி. நடனசபாபதி சர்மா அவர்களின் இலக்கியப் பணியையும்,
இலக்கிய நேசிப்பையும் பாராட்டி, 'கல்விச் சேவையாளர்" சி. காராளபிள்ளை
அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். 'இன்று ஜரோப்பாவில்
வாழும் மூத்த எழுத்தாளர் நடனசபாபதி சர்மா. அவர் தலைமையில் இவ்விழா
நடைபெறுவதும், அவரின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் எனக்குக்
கிடைத்திருப்பதையிட்டும் யான் பெருமகிழ்வடைகிறேன்" என வி. ரி.
இளங்கோவன் தமதுரையில் குறிப்பிட்டார்.
சிறுவர் நடன நிகழ்ச்சிகளும், துலாஸ் கலைக்குழு மற்றும் அல்பி நகரக்
கலைக்குழுவைச் சேர்ந்தோரின் பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் விழாவில்
இடம்பெற்றன. சங்கீதக் கலைமணி திருமதி தனா சூரியபாலனின்
இசைக்கச்சேரியும் இடம்பெற்றது.
சிறந்த மதிய உணவும் வழங்கப்பட்டது. விழாக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள்
சிவா, ரகு, சந்திரன் ஆகியோருட்படப் பலர் இவ்விழாவினை ஒரு
முன்மாதிரியான 'கலை இலக்கிய விருந்தாக" துலூஸ் மாநகரில் முதன்முறையாக
நடாத்திடச் சகல ஏற்பாடுபாடுகளையும் முன்னின்று செய்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் சில விழாக்
காட்சிகள்....
 
 
vtelangovan@yahoo.fr
|
|
©
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|