இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2009 இதழ் 115  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நூல் அறிமுகம்!
‘இரண்டு கார்த்திகைப்பறவைகள்’ -எஸ். புஸ்பானந்தன்-

-  முல்லை அமுதன்’ -

எஸ். புஸ்பானந்தன்ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பைச் செய்த கிழக்கிலங்கை மண்டூர் என்னும் கிராமத்தில் இருந்து எஸ். புஸ்பானந்தன் அவர்களிடம் இருந்து கவிதைநூலாக எமக்குக் கிடைத்துள்ளது. அரசாங்க நிலஅளவையாளராக பணிபுரியும் நிலஅளவை விஞ்ஞானமானி பட்டதாரியான இவர் எண்பதுகளிலேயே தன் இலக்கியம் படைத்து வரும் இவரது கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும். ஏற்கெனவே கவிஞர் மண்டூர் மு. சோமசுந்தரம்பிள்ளை, பொன். சிவானந்தன், மண்டூர் அசோகா, மாணிக்கசபாபதி, மண்டூர் தேசிகன், சுதந்திரோதையன், மண்டூரான் ராசதுரை வரிசையில் புஸ்பானந்தனும் நினைவுக்கு வருகிறார். இவரின் கவிதைகளை சுடர். தாரகை, மேகம், வீரகேசரி, தினக்குரல் என தொடர்ந்து அச்சு ஊடகங்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும்.

காத்திரமான கவிதைகளை சுடர், தாரகை, மேகம் ஆகியன தங்கள் தேர்வில் இணைத்துக்கொண்டிந்ததனால் இவரின் கவிதைகளும் சிறப்பிடம் பெற்றிருதமையை மறுக்கமுடியாது. 67 பக்கங்களில் மண்டூர் கலைஇலக்கியஅவை 2007 ல் வெளியிட்டுள்ள நூலில் நல்ல கவிதைகளில் எம்மை லயிக்க வைத்துள்ளது.

நீயும் நானும்
குண்டுகள் பாய்ந்து
ஒரு நாள் சாகலாம்!
அதற்காய் சாவை நினைத்தே
சாவது சரியா!

இல்லை
நீ உடைவதில
எனக்கு
உடன்பாடில்லை!


பிறிதொரு கவிதையில்-

வாவியின் மடியில் வலை வீசி
வாழ்கைக குளிர் காயும்
வாயில்லாப் பூச்சிகளின் தலைதானா
வழமை போல
உனக்குப் பயங்கரமாய்த் தெரிந்தது.

என் இதய ஊரை
தீ மூட்டிய பறவையே …
சேறெடுத்து வரப்பப்பி
தேசப்பசியின் குரல்வளையை நெரிக்கும்
கலப்பை மனிதரின்
இரைப்பையில் அல்லவா
நீ
நெருப்பு முட்டை இட்டாய்…
இது – 1985 கார்த்திகையில்


இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கலாநிதி. செ. யோகராசா அவர்களும் இவரின் கவிதைகளை உள்வாங்கி சிறப்பாகக் கூறுகிறார். நூலின் கவிதைகளின் வார்த்தைகள் அழகாக காலச்சூழலுக்கேற்ற பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

அராஜக்க காற்று வீசும்
வாழ்க்கை வெளி….
பாதுகாக்க வேண்டிய பலவற்றை
பறக்கவிட்ட படிதான்
எத்தனை அஃறிணை மனிதர்கள்!
….
இரவு வரும்
மனித மனசுகளை
அச்ச இருட்டுக்கு
இட்டுச் செல்லும்!
அராஜக முற்றவெளிக்கு
அழைத்துச் செல்லும்

கறுத்த யூலை
நெருப்புப் போன்ற
கவலைத் தீயில் வாழ்க்கை வேக…
இன்னும் மேலே செல்ல முடியா
இறுக்கக் கருமை நிகழ்வுகளுடனே
இரவு வரும்!
இரும்புப் புழுக்கை பீச்சும் இயந்திரம்
இதயத்துடிப்பை
கூட்டும்… நிறுத்தும்.

இன்றைய யதார்த்தத்தை ஆங்காங்கே விதைத்துச் செல்கிறார். அவருக்குள்ளேயான பயம் கவிதைகளில் தெரிகிறது. அந்தப்பயமே ஒரு தீர்வைச்சொல்ல மறுக்கிறது. கள யதார்த்தம் வார்த்தைகளில் பூடகமாக நமக்குப் புரியவைக்கிறது. சொல்லாத பல செய்திகளை சொல்லி நிற்கிற கவிதைகள் நமக்குள்ளும் வலியைத் தருகிறது. இன்றைய யதார்த்தத்தை ஆங்காங்கே விதைத்துச் செல்கிறார். அவருக்குள்ளேயான பயம் கவிதைகளில் தெரிகிறது. அந்தப்பயமே ஒரு தீர்வைச்சொல்ல மறுக்கிறது. கள யதார்த்தம் வார்த்தைகளில் பூடகமாக நமக்குப் புரியவைக்கிறது. சொல்லாத பல செய்திகளை சொல்லி நிற்கிற கவிதைகள் நமக்குள்ளும் வலியைத் தருகிறது. இன்னும் சிறப்பாக சொல்ல நினைத்தும் சொல்லப்படவில்லையே என்கிற ஆதங்கமும் உண்டு. பாரதியின் கவிதைத் துணிச்சல் நம்மில் பலருக்கு இருந்தாலும் ஒரு சிலராலேயே அத்தகைய வீச்சை தந்திருக்கிறது உண்மையெனினும் புஸ்பானந்தன் போன்றவர்கள் இன்னும் துணிச்சலாக எழுதி இலக்கிய வீச்சை நமக்குத் தந்து திசைகள் காட்ட வேண்டும்.

mullaiamuthan_03@hotmail.co.uk


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்