இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2011  இதழ் 133  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சமூகம்!
தைப்பொங்கல்

குரு அரவிந்தன்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தைமாதம் 14ம் திகதி கொண்டாடப்படும். சில சமயங்களில் 13ம் அல்லது 15ம் திகதிகளிலும் வரலாம். தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள்தான் உழவர்கள். கதிரவனையும், மாடுகளையும் நம்பித்தான் ஆதிகாலத்தில் விவசாயம் நடைபெற்றது. அதனால்தான் கதிரவனுக்கும், தமக்கு உதவி செய்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகத் தைப்பொங்கலையும், மறுநாள் மாட்டுப்பொங்கலையும் தமிழர் கொண்டாடுவர்குரு அரவிந்தன்தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தைமாதம் 14ம் திகதி கொண்டாடப்படும். சில சமயங்களில் 13ம் அல்லது 15ம் திகதிகளிலும் வரலாம். தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள்தான் உழவர்கள். கதிரவனையும், மாடுகளையும் நம்பித்தான் ஆதிகாலத்தில் விவசாயம் நடைபெற்றது. அதனால்தான் கதிரவனுக்கும், தமக்கு உதவி செய்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகத் தைப்பொங்கலையும், மறுநாள் மாட்டுப்பொங்கலையும் தமிழர் கொண்டாடுவர். இயந்திர வசதிகள் இல்லாத அந்த நாட்களில் நிலத்தை உழுதல், தண்ணீர் இறைத்தல், வண்டி இழுத்தல், பசளை கொடுத்தல் போன்றவற்றுக்கு மாடுகளே உழவர்களுக்கு அதிகம் உதவி செய்தன. மாடுகளுக்கு நன்றி சொல்லும் நாளான மாட்டுப் பொங்கலைப் பட்டிப்பொங்கல் என்றும் அழைப்பர்.

பொங்கலன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வயலிலே அறுவடை செய்த புதிய அரிசியைப் பாலுடன் கலந்து பொங்கல் செய்து சூரியனுக்குப் படைப்பர். பொங்கலுடன் பழங்கள், தேங்காய், இளநீர், கரும்பு, போன்றவற்றையும் சேர்த்து வாழையிலையில் படைத்து சூரியனை வணங்குவர். பயிர் வளர்வதற்குத் தேவையான தண்ணீர், வெளிச்சம் போன்றவை கிடைக்கக் கதிரவன் உதவி செய்வது யாவரும் அறிந்ததே.

பொங்கலன்று புத்தாடை உடுத்து, குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்று வழிபடுவர். பொங்கிப்படைத்த உணவைக் குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்களோடு கலந்து உண்டு மகிழ்வர். சிறுவர் பட்டாசு கொளுத்தி மகிழ்வர். சில இடங்களில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுவதுண்டு. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது நம் பெரியோர் வாக்கு.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தைமாதம் 14ம் திகதி கொண்டாடப்படும். சில சமயங்களில் 13ம் அல்லது 15ம் திகதிகளிலும் வரலாம். தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள்தான் உழவர்கள். கதிரவனையும், மாடுகளையும் நம்பித்தான் ஆதிகாலத்தில் விவசாயம் நடைபெற்றது. அதனால்தான் கதிரவனுக்கும், தமக்கு உதவி செய்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகத் தைப்பொங்கலையும், மறுநாள் மாட்டுப்பொங்கலையும் தமிழர் கொண்டாடுவர்புலம்பெயர்ந்த மண்ணில் எமது மொழியை மட்டுமல்ல, எமது பண்பாடு, கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாக்க வேண்டும். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும் என்பதை எப்படி நாம் நினைவில் வைத்திருக்கிறோமோ, அதேபோல எமது பண்பாடு கலாச்சாரத்தையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும். அவை அழிந்தால் நாம் அடையாளம் அற்றவர்களாகப் போய்விடுவோம். எனவே அடுத்த தலைமுறையினருக்கு இவற்றைச் சொல்லிக் கொடுங்கள். போதிய வசதிகள் இல்லாவிட்டாலும், முடிந்த அளவு பின்பற்றச் சொல்லுங்கள். முடியும் என்ற நம்பிக்கையோடு அடுத்த தலைமுறையினரிடம் பொறுப்பைக் கொடுங்கள். நம்பிக்கையோடு செயற்பட்டால் நாளை நமதே!

Kuru Aravinthan <kuruaravinthan@hotmail.com>


 
aibanner

 © காப்புரிமை 2000-2011  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்