| http://2cinaustralia.blogspot.com/2008/02/blog-post.html! 'கங்காரு 
கொவாலாவும் , காஞ்ச புல்லும்!
 'திருடப்பட்ட 
தலைமுறை (Stolen Generation)'..!
 - கானாபிரபா  - 
 [கானாபிரபா நன்கறியப்பட்ட 
வலைப்பதிவாளர்களிலொருவர். அவரது 'கங்காரு கொவாலாவும் , காஞ்ச புல்லும்' 
வலைப்பதிவிலிருந்து ஆஸ்திரேலியப் பூர்வீகக்குடி மக்கள் பற்றிய இக்கட்டுரையினைப் 
பதிவுகளுக்காக மீள்பிரசுரம் செய்கின்றோம்- பதிவுகள்.]
 
 
  ஓவ்வொரு 
பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப் பழங்குடியினரைப்
(Aborigines) 
பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக 
வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட 
வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு. சுமார் 70 ஆயிரம் வருடங்கள் 
தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் 
ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் 
கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை ப்ரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த 
வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், 
உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்ட பூர்வகுடிகளைப் பலவந்த 
வெளியேற்றல்கள் துப்பாக்கி முனையில் தான் நடாத்த வேண்டி ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான 
பூர்வகுடிகள் கங்காருக்கள் போல வேட்டையாடப்பட்டனர். இந்தக் காலனித்துவம் நிகழ்ந்த 
காலகட்டத்தில் மட்டும் சுமார் 750,000 பூர்வ குடிகள் வாழ்ந்திருந்தார்கள் என்பது 
காலக் கணக்கெடுப்பு சொல்லும் செய்தி. 
 
  ஜனவரி 1, 1901 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பு சார்ந்த 
அவுஸ்திரேலியா (Commonwealth of Australia) 
என்று இந்த நாடு மாற்றப்பட்டபோதும் கூட இந்தப் பூர்வகுடிகள் தேசிய கணக்கெடுப்பில் அடங்காதவாறு 
சட்டம் இயற்றப்பட்டதோடு இவர்களை Fauna 
(நாட்டின் பூர்வ பிராணிகள்) என்ற வகையிலேயே 
அடக்கினார்கள்.
 
 1910 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை சுமார் 
100,000 வரையிலான சிறுவர்கள் பொலிசாரினாலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் தம் குடும்பங்களில் இருந்து 
பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து 
வயதுக்குக் கீழேயானவர்கள். அப்போது இந்தக் கொடு செயலைத் தடுக்க சட்டமேதும் 
கிடையாது. அவுஸ்திரேலிய பூர்வ குடி என்ற முகவரி மட்டும் இருந்தால் போதும், 
மற்றதெல்லாம் தானாக நடக்கும்.
 
 இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட 
சிறுவர்கள் கிறீஸ்தவ தேவாலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் 
அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் 
தத்தெடுப்புக்கு ஆளானார்கள். இதுவரை இயற்கையோடு வாழ்ந்து தமக்குப் பிடித்த உணவை 
மட்டும் உண்டு வந்த இவர்களுக்கு அட்டவணைப் பிரகாரம் உணவு என்னும் பெயரில் 
ஏதோவெல்லாம் கிடைத்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அபலைகள் கூட உண்டு. 
அடிப்படைக் கல்வியாவது கிடைக்குமென்றால் அதுவும் இல்லை. காடு, கழனிகளுக்கான 
வேலையாட்கள் தான் உற்பத்தியாயினர்.
 
 இவர்களைத் தான் 'Stolen Generations' 
அதாவது திருடப்பட்ட தலைமுறை என்று அடையாளம் இட்டு 
இன்று வரை அல்ல என்றுமே மாறா வடு முத்திரை பதிக்கப்பட்டுவிட்டது.
 
 அடுத்ததாக ஆதிப்பழங்குடியோடு கலந்து பிறப்பெடுத்த 
ஐரோப்பிய கலவைக் குழந்தைகள் தான் அதிகளவு இலக்கு வைக்கப்பட்டனர். 1937 ஆம் 
ஆண்டளவில் அவுஸ்திரேலிய பூர்வகுடிகளோடு கலந்து பிறந்த ஐரோப்பியக் கலப்பினக் 
குழந்தைகளைப் பலவந்தமாகப் பிரித்தெடுத்து அரசின் மேற்பார்வையில் வாழவைக்கும் நடைமுறையும் பாய்ந்தது. இந்தக் 
கொடூரம் 1970 ஆம் ஆண்டு வரை பூர்வகுடிச்சனத்தொகையில் 10% இலிருந்து 30% வீதமாக 
இருந்திருக்கின்றது.
 
 இதன்மூலம் இந்த நாட்டுக்கு வந்து காலனித்துவ அரசு அமைத்துக்கொண்டவர்கள் சாதிக்க 
நினைத்தது இது தான்:
 
 1. இரண்டு மூன்று தலைமுறைக்கு தொடரும் இவ்வாறான பிரித்தெடுத்து வளர்த்தல் என்னும் 
முறைமை "பூர்வ குடிகள்" என்ற சமுதாயமே இல்லை என்ற நிலைக்கு மாற்றமுடியும்.
 
 2. பூர்வகுடிகளின் பேச்சு வழக்கையும், சடங்குகளையும் இல்லாதொழித்தல்
 
 இந்த நோக்கங்களை அமுல்படுத்த அப்போதிருந்த ஆட்சியாளர்கள் பகீரதப்பிரயத்தனம் கொண்டு 
உழைத்தார்கள். பிள்ளைகளைத் தேடி ஓடி வரும் பெற்றோர்கள் அடித்துத் 
துரத்தப்பட்டார்கள். பல பிள்ளைகள் இந்த நாட்டிலேயே இல்லாமல் எங்கோ ஒரு இன்னொரு 
காலணி நாட்டுக்குத் தொலைந்து போயினர். இதை Rabbit-Proof Fence என்ற ஆங்கிலப் படமும் 
காட்சிப்படுத்தியிருக்கின்றது.
 
 இன்று வரை தமது கலாச்சார வேர்களைத் தொலைத்தும், இயல்பு வாழ்வைத் தொலைத்தும் 
தற்கொலை, போதைக்கு அடிமையாதல் மன அழுத்தம், சட்டவிரோத நடவடிக்கைகள், என்று 
திசைமாறிய கங்காருக்கள் ஆகிவிட்டனர் இந்தச் சமுதாயத்தவர்.
 
 
  காலம் 
எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா? தொடர்ந்த நூற்றாண்டுக் கொடுமைகளுக்கு 
எல்லை போடுமாற் போல மனித உரிமைவாதிகள், மற்றும் பூர்வகுடிகளில் நன்கு படித்துத் 
தேறிய புலமையாளர்களின் தொடர்ந்த கண்டனக் குரல் வேகவேகமாக, இன்னும் பலமாக ஒலிக்கத் 
தொடங்கியது.அதன் பலனாகத் தோன்றியதே 1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த Bringing them Home' 
என்ற விசாரணை நிகழ்வு.Federal Attorney-General, Michael Lavarch என்பவரின் 
மேற்பார்வையில் மே 11, 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் 
பூர்வகுடிகளைப் பிரித்தெடுத்துச் சின்னாபின்னப்படுத்திய வரலாற்றின் சாட்சியமாக 700 
பக்க அறிக்கையில் 26 மே 1997 ஆம் ஆண்டு தேசிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 
இந்த விசாரணை அறிக்கை பூர்வகுடித் தலைமுறை ஒன்றுக்கு நிகழ்ந்த பல கோரமான உண்மைகளை 
ஆவணப்படுத்தியது. இந்த ஆவணப்பிரகாரம் 54 பரிந்துரைகளை வழங்கியிருந்ததும் அதில் 
மூன்று முக்கிய பரிந்துரைகளாவன: 
 1. அவுஸ்திரேலிய பூர்வீகச் சமூகத்துக்கான வாழ்வைச் சீரமைக்கும் நிதிக்கொடுப்பனவு 
முறைமையை ஏற்படுத்தல்.
 
 2. பலவந்தமான பிரித்தெடுப்புக்கு ஆளான தலைமுறைக்கு Van Boven பரிந்துரைத்த மனித 
நேயச் செயற் திட்டப்பரிந்துரைகளின் படி புனர்வாழ்வு அமைப்பை ஏற்படுத்தல். ( 
Wikipedia: Theo van Boven (born 1934) is a Dutch 
jurist and professor emeritus in international law.In
 1977 he was appointed director of the United Nations' Division for Human Rights. 
From 1986 to 1991, he was the UN's Special Rapporteur on the Right to Reparation 
to Victims of Gross Violations of Human Rights and, from 2001 to 2004, Special 
Rapporteur on Torture)
 
 3. அவுஸ்திரேலிய தேசிய மற்றும் மாநிலப்பாராளுமன்றுகள் தமது முன்னோர்கள் சட்ட 
ரீதியாகவும், கட்டளைப் பிரகாரமும் செய்த
 இப்படியான வரலாற்றுத் தவறுகளை ஏற்று அதிகாரபூர்வமான மன்னிப்பைப் பகிர்தல்.
 
 இந்தப் பரிந்துரை குறித்த மேலதிக வாசிப்புக்கு 
Bringing them Home
 
 இதன் பிரகாரம் அவுஸ்திரேலிய மாநிலப் பாராளுமன்ற முதல்வர்கள் இவ்வாறு தம் 
அனுதாபத்தையும், பொதுமன்னிப்பையும் விடுத்திருந்தனர்.
 
 நியூ சவுத் வேல்ஸ்
 "apologises unreservedly to the Aboriginal people 
of Australia for the systematic separation of generations of Aboriginal children 
from their
 parents, families and communities" - Mr Bob Carr, Premier of New South Wales, 18 
June 1997
 
 விக்டோரியா
 "That this House apologises to the Aboriginal 
people on behalf of all Victorians for the past policies under which Aboriginal 
children were
 removed from their families and expresses deep regret at the hurt and distress 
this has caused and reaffirms its support for reconciliation
 between all Australians" - Mr Jeff Kennett, Premier of Victoria, 17 September 
1997
 
 மேற்குறித்த மாநிலங்கள் உட்பட அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலப் பாராளுமன்றுகள் 
தமது முந்திய வழித்தோன்றல்களின்
 நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றன.
 
 ஆனால் அப்போது பிரதமராக இருந்த Mr John Howard, 26 August 1999 Motion of 
Reconciliation என்ற அடிப்படையில் "deep and sincere 
regret that indigenous Australians suffered injustices under the practices of 
past generations, and for the hurt and trauma that many indigenous people 
continue to feel as a consequence of those practices." 
என்று தமது அரசின் சார்பிலான அறிக்கையை விடுத்திருந்தார். இந்த வார்த்தைப் பிரயோகம்
"unreserved apology" 
அதாவது எல்லை கடந்த மன்னிப்பாக இருக்க வேண்டும் என்று 
அப்போதய எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த தொழிற்கட்சித் தலைவர் 
Kim Beazley இன் எண்ணம் 
அப்போது நிறைவேறாது
 போயிற்று.
 
 
  கடந்த 
24 நவம்பர் 2007 நீண்டதொரு வனவாசத்தின் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட 
Kevin Rudd தலைமையிலான 
தொழிற்கட்சி அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதியாக "சம்பிரதாயபூர்வமான பொது 
மன்னிப்பை" இந்தத் திருடப்பட்ட சமுதாயத்துக்குக் கொடுப்பது என்று வாக்களித்தது. 
தற்போதய அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd 
இந்தச் சம்பிரதாயபூர்வமான பொது மன்னிப்பு எப்படி 
அமையவேண்டும் என்று பூர்வகுடிகளின் தலைவர்களிடம் கலந்தாலோசித்து 
முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருக்கின்றார். இவ்வாரம் பெப்ரவரி 13 ஆம் திகதி, புதன் கிழமை, அவுஸ்திரேலிய தேசிய பாராளுமன்றில் 
வைத்து காலை 9 மணிக்கு இந்த நிகழ்வு
 இடம்பெறவிருக்கின்றது.
 
 இந்த அரசு இப்படியானதொரு செயற்பாட்டில் இறங்கியிருப்பது உண்மையில் 
பாராட்டப்படவேண்டிய விடயம். ஆனால் வெறும் வெற்றுக் காகித மன்னிப்புக்கள் அடுத்த 
தேர்தலுக்கான வாக்கு வங்கிக்கான முதலீடாக மட்டுமே அமையும். உளப்பூர்வமான, நேர்மையான 
அரசாக இருக்கும் பட்சத்தில் இந்தத் தொலைந்த தலைமுறைக்கு நிரந்தரமான இழப்பீட்டுக்கான 
புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கூடவே அமெரிக்காவின் அடியாளாக 
இருந்து மற்றைய நாடுகளின் இறைமைக்குள் மூக்கை நுளைத்து அவுஸ்திரேலியா எல்லை கடந்த 
நாடுகள் மீதான எல்லை கடந்த பயங்கரவாதத்தை நிறுத்தி அந்தந்த நாடுகளில் நிமிஷத்துக்கு 
நிமிஷம் திருடப்பட்டு வரும் மனித உரிமைகளையும் காக்க முன்வர வேண்டும். இவையெல்லாம் 
செய்தால் மன்னிப்பே தேவையில்லை, மண்டியிட்டு வணங்குவார்கள் அம்மக்கள்.
 
 அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd இன்று பாராளுமன்றத்தில் கோரிய பொதுமன்னிப்பின் 
ஒளிப்பகிர்வு
 
 பிரதமரின் இந்தச் சம்பிரதாயபூர்வ மன்னிப்புக் கேட்டலில் அடங்கியிருக்கும் அம்சங்கள் 
இவை தான்:
 
 "Today we honour the Indigenous peoples of this land, 
the oldest continuing cultures in human history.
 
 "We reflect on their past mistreatment.
 
 "We reflect in particular on the mistreatment of those who were stolen 
generations - this blemished chapter in our nation's history.
 
 "The time has now come for the nation to turn a new page in Australia's history 
by righting the wrongs of the past and so moving forward
 with confidence to the future.
 
 "We apologise for the laws and policies of successive Parliaments and 
governments that have inflicted profound grief, suffering and loss on
 these our fellow Australians.
 
 "We apologise especially for the removal of Aboriginal and Torres Strait 
Islander children from their families, their communities and their country.
 
 "For the pain, suffering and hurt of these stolen generations, their descendants 
and for their families left behind, we say sorry.
 
 "To the mothers and the fathers, the brothers and the sisters, for the breaking 
up of families and communities, we say sorry.
 
 "And for the indignity and degradation thus inflicted on a proud people and a 
proud culture, we say sorry.
 
 "We the Parliament of Australia respectfully request that this apology be 
received in the spirit in which it is offered as part of the healing of
 the nation.
 
 "For the future we take heart; resolving that this new page in the history of 
our great continent can now be written.
 
 "We today take this first step by acknowledging the past and laying claim to a 
future that embraces all Australians.
 
 "A future where this Parliament resolves that the injustices of the past must 
never, never happen again.
 
 "A future where we harness the determination of all Australians, Indigenous and 
non-Indigenous, to close the gap that lies between us in life
 expectancy, educational achievement and economic opportunity.
 
 "A future where we embrace the possibility of new solutions to enduring problems 
where old approaches have failed. peA future based on
 mutual respect, mutual resolve and mutual responsibility.
 
 "A future where all Australians, whatever their origins, are truly equal 
partners, with equal opportunities and with an equal stake in shaping the
 next chapter in the history of this great country, Australia."
 
 உசாத்துணை மற்றும் படங்கள்:
 International Herald Tribune: www.iht.com
 Wikipedia: www.wikipedia.org
 European Network for Australian rights: www.eniar.org
 www.news.com.au/
 
 சுற்றியவர்: கானா பிரபா
 http://2cinaustralia.blogspot.com/2008/02/blog-post.html
 |