இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2006 இதழ் 83 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
கனடா! 29 அக்டோபர் 2006!
சுடர் விட்டெரிந்த இளஞ் சூரியன் ஏ.ஜே.கனகரட்னா (1934-2006)! 'காலம்' சஞ்சிகை சார்பில் ஏ.ஜே.க. நினைவஞ்சலிக் கூட்டம்!

ஏ.ஜே.கனகரட்னாபலர் இலக்கியத்தைப் புறம்பாகவும் வாழ்வைப் புறம்பாகவும் வைத்திருக்கிறபோது, தன் வாழ்வையே இலக்கியமாக்கிக் கொண்டவர் ஏ.ஜே. நல்ல படிப்பாளி, புலமையாளர், அறிவுஜீவி, நூல் மதிப்பீட்டாளர், ஆங்கில-தமிழ் எழுத்தாளர், விமர்சகர், ஆங்கில-தமிழ், தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், பத்திரிகை ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், உலக இலக்கியத்துடன் இறுதிவரை தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தவர். எந்த அறிவுப் புலமும் அவருக்கு அந்நியமானதல்ல. அவற்றில் தன் தனி ஆளுமையை வெளிப்படுத்தியவர்.


ஈழத் தமிழ் இலக்கியத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த திரு ஏ.ஜே.கனகரட்னா நேற்று 10-10-2006 இல் கொழும்பில் காலமானார். பல எழுத்தாளர்களுக்கு தோன்றாத் துணையாகவும், அவர்களின் எழுத்துக்களுக்கு ஊக்கமும், ஆக்கமும், ஊட்டமும் அளித்தும் வந்தவர். ஈழத் தமிழ் எழுத்தை உண்மையாக விசுவாசித்தவர். நேர்மை, அடக்கம், பண்புடைமை அவரது இயல்பும் சிறப்பும்.

‘காலம்’ அவருக்கு தனது 16 வது இதழைச் சிறப்பிதழாக வெளியிட்டுக் கௌரவித்தது.

அவரின் சேவையைப் பாராட்டிக் கௌரவிக்குமுகமாக கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் 50,000 ரூபா பணத்தை கடந்த மாதம் அவருக்கு அளித்தது குறிப்பிடத் தக்கது.

யாழ்ப்பாணத்து ஆங்கில தமிழ் அறிவுப் பாரம்பரியத்தின் கடைசிக் கொழுந்தாக வாழ்ந்தவர்.

முற்போக்குக் கொள்கைகளில் மிக்க பற்றுள்ளவர். அதேவேளை ஆத்மீகத்தில் நம்பிக்கை வைத்தவர். மனித நேயமிக்க பெரும் மனிதர். மனிதருள் மாணிக்கமாக வாழ்ந்து இறந்துள்ளார். சாதி, மதம், இனம், மொழி ஆகிய சின்னத்தனங்கள் தீண்டாத, அகண்ட மானிடத்தை மதித்த பெரும் ‘மனிதன்’ அவர். ‘சிறியன சிந்தியாதான்’ என்று நண்பர்களால் புகழப்பட்டவர். நண்பர்களுக்கு இனிய நண்பன்.

அவரின் இழப்பு உண்மையிலே பல எழுத்தாளருக்கும் ஈழத் தமிழ் இலக்கியத்துக்கும் நண்பர்களுக்கும் பெரும் இழப்பு.

ஏ.ஜே.கனகரட்னாவின் அஞ்சலிக் கூட்டம் ரொறன்டோ கனடாவில் ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபரோ சிவிக் சென்றரில் காலம் சஞ்சிகையின் சார்பில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு

kalam@tamilbook.com

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner