| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| இலக்கியக் குறிப்பு! |  
| உமா மகேஸ்வரி கவிதைகள்! 
 - தாஜ் -
 
 
  நவீனத் 
  தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் கவிதைப் பின்புலம் 
  வீடு சார்ந்தது. வீட்டின் உறவுகள் - குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் உலகம் - 
  சார்ந்தது. வீட்டிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், வான்வெளி சார்ந்தது. 
  இவற்றுடான உரையாடல் இந்த வாழ்க்கையின் அர்த்தம் குறித்தான தேடலாக 
  விரிவுகொள்கிரது. அதில் தவிர்க்கவியலாது கசியும் துக்கத்தையும் இந்தத் 
  தொகுப்பிலுள்ள கவிதைகள் உனர்த்துகின் றன. வாசக மனத்தில் கவிதைகளை அழுத்தமாகப் 
  பதியவைக்கும் வகையிலான சிற்றோடை யின் நீரோட்டம் போன்ற மொழிநடை உமா மகேஸ்வரியின் 
  தனிச் சிறப்பு. *
 காலச்சுவடு வெளியிட இருக்கும் உமா மகேஸ்வரியின் புதிய கவிதைத் தொகுப்பான 'இறுதிப் 
  பூ'விற்கு காலச்சுவடு எழுதியிருக்கும்
 விளம்பர வரிகளைத்தான் நீங்கள் படித்தீர்கள்.நிஜத்தில் இந்த வரிகள் உமா 
  மகேஸ்வரியின் கவிதை வீச்சுக் குறித்த முழுமையான
 அபிப்ராயமாக நான் கொள்ளவில்லை. பல முகம் கொண்ட அவரது கவிதைகளின் அரூபத்தை அளக்க 
  பெரிய ஆய்வு செய்ய வேண்டும்.
 
 சித்திர அரூபம்
 -------------
 எல்லாமும் நகர்கின்றன
 விரைந்து.
 நிற்பதேயில்லை அவை
 திரும்பியும் பார்ப்பதில்லை.
 அவற்றை
 மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்
 மீண்டும்
 எந்தச் சக்தியும்.
 பறந்து மறைகின்றன
 அவை.
 இந்த அரூபச் சித்திரத்தின்
 வளைவுகளோடு
 இழைதல்
 உன்னை மீறியதா?
 சுழலும் இதே
 திகிலின்பத்தில்
 சுண்டப்பட்டு தொலைந்து
 சிதறுவதும்?
 ***
 
 நுழைதலற்ற கதவுகள்
 -------------------
 கார்த்திகை மழைநாளின்
 கரிய இரவுகள்
 நடக்கின்றன
 ரகசியக் காலடிகளோடு,
 கண்காணிப்புகளைத் தவிர்த்து.
 இன்று உதயத்தின் விழிமூட
 கிழக்குக் காற்றின்
 நச்சரிப்புக்களைப்
 பொருட்படுத்தாமல்
 நீல வானில்
 ஒரு அடர்திரை
 இழுக்கப்படுகிறது.
 புல்வெளிகளின் முணுமுணுப்பு
 மூடிய கதவுகளோடு வீடுகள்.
 இந்தப் பாலைத் தெருவில்
 தனித்த பயணியின் பாதத்தடங்கள்
 கடக்கின்றன
 என் திறந்த வீட்டின் கதவுகளுக்குள்
 நுழையாமல் தாண்டி.
 ***
 
 அழையாமை
 -----------
 செல்போன் ஒலியென
 நடுங்குகிறது பாதி விழிப்பு.
 கோதிக் கொண்டிருக்கிறது காற்று
 கந்தலான இரவுகளை.
 சுருண்ட ஓடுகளோடு
 குறுகிக் கிடக்கும் காலம்
 செத்த ஆமையாக.
 *
 தூர மயான நெருப்பு
 கேலிக்குளிர் வீசுகிறது
 என் நாட்களின் மீது
 அடிக்கடி.
 உலர்ந்த முத்தங்களில்
 இருந்து வடியும் சீழ்.
 *
 உணர்ந்தேயிராத
 தாய்மை இதழ் தேடி
 கனகாம்பரத்தைத்
 தொடுக்கையில்
 உறுத்தும் பாதச் சிறகு.
 விரிந்த விரல்களின் சல்லடையில்
 யாருடையதோ கண்ணீர்.
 பொருக்குக் காய்ந்த
 உணர்வுகளுக்குள்
 புனல் சிறகசைக்க
 போதுவதேயில்லை
 ஒற்றை அழைப்பு.
 
 satajdeen@gmail.com
 தமிழ்ப்பூக்கள்: http://tamilpukkal.blogspot.com/2008/10/blog-post.html
 |  
| 
 |  
|  |  
|   |  
|  © 
      காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |